<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-23378437</id><updated>2011-05-29T10:41:59.948-07:00</updated><category term='என்.சரவணன்.'/><category term='என்.சரவணன்'/><title type='text'>பெண்வெளி</title><subtitle type='html'>விட்டு விடுதலையாகி...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Voice for Voiceless</name><uri>http://www.blogger.com/profile/16807674424690807970</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>37</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-8817174611642947591</id><published>2009-01-29T21:25:00.000-08:00</published><updated>2009-02-05T13:00:52.226-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 204, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு பாலுறவு:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 204, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYFseQBWH6I/AAAAAAAAAZo/hEpU7yAeIJQ/s1600-h/1287377201_1d00039ca1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 337px; height: 506px;" src="http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYFseQBWH6I/AAAAAAAAAZo/hEpU7yAeIJQ/s400/1287377201_1d00039ca1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296633903716900770" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;இன்று ”ஒருபாலுறவு” குறித்து சூடான விவாதம் நடந்து வருகின்றது. இது குறித்து ”சிரச” தொலைக்காட்சி சேவை, மற்றும் யுக்திய, ராவய, மாதொட்ட, பாராதீச போன்ற மாற்று பத்திரிகை, சஞ்சிகைகளிலும் விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்தளவுக்கு தமிழில் இது குறித்த விவாதம் இடம்பெறாதது ஒரு வகையில் துரதிருஷ்டவசமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவாதத்துக்கு ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என்றால், அமைச்சர் மங்கள சமரவீர தனது கிரெடிட் கார்ட்டைப் பாவித்து இன்டர்நெட்டுக்கூடாக பாலியல் படங்களைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வினரால் சுமத்தப்பட்டு பின்னர் அவர் மீதும் பொதுவாகவும் ”ஒருபாலுறவு”க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறி மாறி காறி உமிழும் விவாதமாக அன்று பாராளுமன்றத்தில் இந்த சச்சரவு நிகழ்ந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விவாதம் கட்சி அரசியலுக்கு அப்பால் தொடர்புசாதனங்களில் நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மைய நீரோட்டத்தில் பெரும்போக்காகவே ஒரு பாலுறவுக்கு விரோதமான கருத்துக்கள் ஆழமாக வேறூன்றியுள்ளன. இதற்கு எமது சமூக அமைப்பின் பண்பாடு, மதம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற ஆதிக்க மரபுவழிக் காரணிகளின் செல்வாக்கின் வழியாக வந்த ஐதீகங்கள் காரணமாக உள்ளன. எனவே இந்தக் கருத்தியலை முறியடிப்பது என்பதற்கு முன்நிபந்தனையாகவே மேற்படி காரணிகளை தகர்ப்பது என்பது அமைகிறது. ஒரு பாலுறவு நடைமுறையில் வழக்கிலுள்ள ஒன்றென்பதையும், அது குறித்து அவமானப்படுத்த, வெட்கங்கொள்ள, அசிங்கம் கொள்ள எந்தவித விஞ்ஞானபூர்வ காரணங்களும் இல்லையென்பதையும் ஒப்புக்கொள்ளத் தடையாக இந்த ஐதீகங்களே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாலுறவு என்பது திடீரென்று வானத்தில் இருந்து குதித்த அபூர்வமான ஒன்றல்ல அது ஏலவே எமது கலாசாரத்தில் நீண்ட காலம் புழக்கத்திலுள்ள ஒன்று. நிலவி வந்த ஐதீகங்கள் காரணமாக அது வெளிப்படைக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. அவ்வளவே. இன்று உலகமுழுவதும் ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்தினால் இன்று பகிரங்க உரிமை கோரி கருத்துகள் வெளியாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தன்னுடைய நண்பி தனது சக நண்பியை அல்லது நண்பன் தனது சக நண்பனைத் தழுவவோ, அல்லது கைகோர்த்து நடக்கவோ, தோளில் கைபோடவோ, மடியில் சாயவோ அஞ்சுகின்ற நிலைக்கு இந்த ஐதீகங்கள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.  இதன் விளைவுகளாக பாலியல் குறித்த எந்தவித கலந்துரையாடலுக்கோ, அல்லது அது குறித்த புரிதலை நாடவோ விடாதது வரை விளைவுகளாக்கியுள்ளது. அவ்வாறான பேச்சு ஒரு நடத்தைக் குறைவாகவும், ஒழுக்கக்கேடாகவுமே நோக்கப்படுகின்றது. சொந்த மனைவி பாலியல் குறித்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க தயக்கம் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. அது அவள் ஏற்கெனவே அனுபம் கொண்டவள் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றுக்கு பாலியல் குறித்த திறந்த கலந்துரையாடல் எம் சமூகத்ததில் இல்லாததே காரணம். இதன் விளைவுகள் மோசமானவை என்பது கூறித்தெரிய வேண்டியவையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;1883 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவிதிகளிலேயே முதன் முதலில் ஒரு பாலுறவு தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சக்திகள் தமது ஆட்சியிலேயே அந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் இன்று அந்தச் சட்டத்தை பிரித்தானியாவில் நீக்கிவிட்டார்கள். இங்கு இன்னமும் அது நிலவுகிறது. இன்று ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றம். அது இயற்கைக்கு முரணானதாம். இலங்கை குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் பிரகாரம் இதற்கு 12 வருட சிறைத்தண்டனையும் கசையடியும் கொடுக்கப்படும்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_iQrKQks0218/SYFsli8cNkI/AAAAAAAAAZw/WU9f0rRq4CI/s1600-h/1280518919_432e768538.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_iQrKQks0218/SYFsli8cNkI/AAAAAAAAAZw/WU9f0rRq4CI/s400/1280518919_432e768538.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296634029055686210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மோசமான அவதூறுகள் காரணமாக அமைச்சர் மங்கள சமரவீர தான் ஒரு தன்னினச் சேர்க்கையாளன் தான் என்று ஆத்திரத்துடன் திருப்பித் திருப்பிக் கூறினார். இதைக் கூறியதும் அங்கிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்படி சட்டத்தின் பிரகாரம் அவர் தண்டனைக்குரியவர் என்று தம்  சந்தர்ப்பவாத அரசியலுக்கு சாதகமாக இதனை பாவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து இது குறித்த ஒரு விவரண நிகழ்ச்சி ஒன்றை ”சிரச” தொலைக்காட்சி செய்தது. அதில் பல புத்திஜீவிகள், மனித உரிமையாளர்கள், தன்னினச்சேர்க்கை உரிமையாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என்போரின் பேட்டியும் இடம்பெற்றது. ”சிரச” கூறிய தகவலின்படி ராஜித்தவை இது குறித்து கருத்து தெரிவிக்க அழைத்திருந்தும் அதனை நிராகரித்து நழுவினார் என்று கூறுகின்றனர். ஆனால் ராஜித்த சேனாரத்ன பரவலாக எல்லா இடங்களிலும் ஒருபாலுறவு குறித்து கருத்து தெரிவித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;யுக்திய பத்திரிகைக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;”..நான் ஒருபாலுறவை கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கென்று இருக்கின்ற நிறுவனங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்மார் உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு அரச அனுசரணை கிடைக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதையும் (Sex Club) பாலியல் சமூகமாக ஆக்கப் பார்க்கின்றனர். 2500 வருடகால பாரம்பரிய கலாசாரமுடைய இந்த சிங்கள பௌத்த நாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். இதனைக் கேட்டுக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருப்பது என்னை ஆச்சரியமூட்டுகிறது. நான் கற்றிருக்கின்ற வைத்தியத்துறையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது மனநோயின் விளைவு. மனநோயாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். அவர்களை புனருத்தாரனம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனைப் பேண ஜனநாயக உரிமை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். எமது குடும்ப கட்டமைப்பை சீரழிக்கிற இயற்கைக்கு முரணான விடயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. பைத்தியக்காரத்தனமான சுதந்திரத்தை கதைத்துக்கொண்டு இதனை செய்ய முயல்வதை நான் இறுதி வரை எதிர்த்தே தீருவேன்.....”&lt;br /&gt;என்றார். (யுக்திய செப்டம்பர் 06)&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் இந்தக் கருத்தோடு சேர்த்து ஐ.தே.க. பிரமுகர் சீ.ஏ.சந்திரபிரேம, ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச, ந.ச.ச.கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பெண் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான அனோமா ராஜகருணாநாயக்க, மற்றும் தன்னினச் சேர்க்கை அமைப்பின் தலைவர் சேர்மன் டி ரோஸ் ஆகியோர் யுக்தியவுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச குறிப்பிடுகையில்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;”பாலியல் ஒருவாpன் தனிப்பட்ட உரிமை. ராஜித்தவுக்கு இது குறித்து பேச எந்த அருகதையுமில்லை. இதனை ஒரு இழிவுக்கும் குற்றத்துக்குமுள்ளாக்கும் ராஜித்த ஐ.தே.க.வுக்குள் இருக்கின்ற ஒருபாலுறவினரை எவ்வாறு காண்கிறார்.... இன்று ஐ.தே.க.வும் பொ.ஐ.மு.வும் மாறி மாறி குறை சொல்ல ஒன்றும் மிச்சம் இல்லை. ஏனென்றால் இரு கட்சிகளும் ஒன்று தான். ஒரே கொள்கை, ஒரே நடைமுறை. எனவே தான் அரசியல் கொள்கைகளுக்காக சண்டை பிடிப்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுத்து இழிவுபடுத்தி அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்....”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகையில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;”...இன்று உலகம் முழுவதும் ஒரு பாலுறவை மானுட ரீதியில் அணுகி அங்கீகாரமளிக்கின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கின்றது. ராஜித்தவிடம் ஒருபாலுறவு குறித்த மாறுபட்ட கருத்து இருந்தாலும் கூட அதனை ஏனைய சமூக, பொருளாதார காரணிகளுடன் நிறுவ முயலவில்லை. தனது இயலாமையை மூடி மறைக்க தனிப்பட்ட தாக்குதலைப் பிரயோகித்தமை குறித்து ராஜித்த வெட்கப்பட வேண்டும். இது ஐ.தே.க.வின் சீரழிவையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறான கருத்துகள் அசட்டை செய்யக்கூடியதல்ல....”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெண்ணியவாதி அனோமா ராஜகருணாநாயக்க கூறுகிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;”....குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு இப்படிப்பட்ட தனித்துவமிக்க பாலியல் இறைமைகளை பலியாக்குவது என்பது துரதிருஷ்டவசமான ஒன்று. இப்படிப்பட்ட இழிவுபடுத்தல் எமது நாட்டில் நிலவுகிற வங்குரோத்துதனமிக்க அரசியல் போக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருபாலுறவு என்பது ஏதோ திடீரென்று வானத்திலிருந்து குதித்த அபூர்வமான ஒன்று அல்ல....”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சீ.ஏ.சந்திரபிரேம இது குறித்து கருத்து தெரிவிக்கையில்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;”...பௌத்தத்தின்படி பாலியல் குற்றம் என்று இல்லை. கிறிஸ்தவ சமயத்தில் தான் அப்படிப்பட்ட விதிகள் இருக்கின்றன. பௌத்தத்தில் பிக்கு-பிக்குனிகளுக்கு மாத்திரம் சகல பாலியல் இன்பங்களும் மறுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருந்த போதும் இந்த பிரச்சினையின் மூலம் எமது சமூகத்தில் பாலியல் கருத்தாக்கம் குறித்த விடயம் பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ளது. அது எதிர்கால சமூகத்துக்கு மிகவும் நன்மை பயக்கத்தக்கது....”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சேர்மன் டி ரோஸ் கருத்து தெரிவிக்கையில்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;”....ஒருபாலுறவினர் என்கின்ற ரீதியில் நாங்கள் அமைப்பொன்றை உருவாக்கியதே அதற்குhpய உரிமையை ஏற்கச்செய்வதற்காகவே.  அரசியல் நோக்கங்களுக்காக பாலியல் உரிமையை பலியாக்கியுள்ளனர்.  ஒருவருக்கு இந்த உரிமையை ஏற்காதிருக்க உரிமையுண்டு. ஆனால் நாகரிகமான ஜனநாயக முறையியல் என்று ஒன்று உண்டு. ஒருவர் ஒருபாலுறவு கொண்டதற்காக அவர் ஒருபாலுறவினர் என ஆகிவிடமாட்டார். அதற்கு பல காரணங்கள் உண்டு. இது தெரிவைப் பொறுத்தது. இலங்கையில் ஆயிரக்கணக்கான ஒருபாலுறவினர் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருபவர்கள். ராஜித்தவின் கருத்தானது அந்த ஆயிரக்கணக்கான அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த மோசமான கருத்து குறித்து மக்கள் முன்னிலையில் ராஜித்த பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்....” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போது ”மாதொட்ட”, மற்றும் ”பாராதீசய” (இப்பத்திரிகைகள் இரண்டும் மங்கள சமரவீரவின் அனுசரணையுடன் நடத்தப்படும் மாதாந்த சஞ்சிகைகள். இதன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் முன்னைநாள் ஜே.வி.பி. இளைஞர்கள். இவை  தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் மாற்று சஞ்சிகைகளில் குறிப்பிடத்தக்கவை. அரச சார்பற்றவை. பின்நவீனத்துவம், மாக்சீயம், பெண்ணியம், அமைப்பியல்வாதம், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதித்து வரும் முக்கிய இரு சஞ்சிகைகள். அது மட்டுமன்றி பாலியல் குறித்த விடயங்களை பகிரங்கமாக விவாதித்து வருகின்றவை.) பத்திரிகைகள் இது குறித்து நிறையப் பக்கங்களை ஒதுக்கி விவாதித்தது (ஒக்டோபர் இதழ்கள்). அச்சஞ்சிகைகள் ராஜித்தவை 12ஆம் நூற்றாண்டின் அரசியல்வாதியென்று கூறியிருப்பதுடன் அவரை பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வரும்படி சவால் விடுத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜித்தவோ சிரசவுக்கு பின்னர் அளித்த பேட்டியொன்றில் ”பாராதீசய” சஞ்சிகை ஒரு தூஷன பத்திரிகை என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் பாராதீச சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ”தூஷனம் என்றால் என்ன? கனவான்களே முடிந்தால் மோதுங்கள்!” என்று விவாதத்துக்கு அழைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவாதம் இவ்வாறு தொடர்ந்து செல்கின்றது. இது எவ்வாறிருந்த போதும் உண்மையிலேயே இது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ள இக்கருத்துப் பரிமாறலை உச்ச அளவு பயன்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கு அத்தியாவசியமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(சரிநிகர் இதழ் 157)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-8817174611642947591?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/8817174611642947591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=8817174611642947591' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/8817174611642947591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/8817174611642947591'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_5148.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYFseQBWH6I/AAAAAAAAAZo/hEpU7yAeIJQ/s72-c/1287377201_1d00039ca1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-1845973637501182938</id><published>2009-01-29T18:42:00.000-08:00</published><updated>2009-01-29T14:04:03.477-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center; color: rgb(255, 153, 102);"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிங்கள சமூக அமைப்பில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இன்றும் தொடரும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;கன்னிப் பரிசோதனை&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYANwDXoOYI/AAAAAAAAAbk/2pTV2sbOoM0/s1600-h/PEN_aHE0.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 262px; height: 386px;" src="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYANwDXoOYI/AAAAAAAAAbk/2pTV2sbOoM0/s320/PEN_aHE0.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296248280976996738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 255, 102);"&gt;அவர் குறிப்பிட்டது இது தான்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது.  ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவுபுரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.”&lt;br /&gt;&lt;br /&gt;டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க  குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட  இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;”சமீபத்தில் தயயொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித்தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வத ஆச்சரியத்தைத் தருகிறது.  சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி, பேசி வந்திருப்பவரும் கூட. 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பாரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டு­ரையொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_iQrKQks0218/SYB1hbRC80I/AAAAAAAAAXY/BPtcxzbfJ_g/s1600-h/5159710-lg.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_iQrKQks0218/SYB1hbRC80I/AAAAAAAAAXY/BPtcxzbfJ_g/s320/5159710-lg.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296362378903089986" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல்  (Living  togrther), இரு கனவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திரக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.&lt;br /&gt;சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக்கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொருத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தெரியாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பாhக்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில் வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்றசாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினரிடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாயபூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்தியதரவர்க்த்தினரிடமே திருமணச்சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச்சமூகத்தில் வணணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து சுருங்கி வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே உடுதுணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் உடுதுணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். ”பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த உடுதுணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிரூபிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நோpடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க  விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் ”றெதி நெந்தா” அழைத்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYIk_FzOcvI/AAAAAAAAAaY/uMa9eFiq57g/s1600-h/2776662586_7f054c52c3.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYIk_FzOcvI/AAAAAAAAAaY/uMa9eFiq57g/s400/2776662586_7f054c52c3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296836778048516850" border="0" /&gt;&lt;/a&gt;துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் ”தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) இது மேற்கொள்ளப்படும். இதற்குhpய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.    மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்படுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;2.    மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;3.    மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;4.     மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;5.    மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப்பெண்ணை வரவேற்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரிட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அப்பாவிப்பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடம்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தம் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது ”பரிட்சையில் தேறாத' மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில..&lt;br /&gt;&lt;br /&gt;1.    இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;2.    மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;3.    வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.&lt;br /&gt;&lt;br /&gt;4.    சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.&lt;br /&gt;&lt;br /&gt;5.    மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;6.    உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;7.    அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;8.    வாழைப்பழத்தை அடியியிலிருந்து தோலுரித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;9.    விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அரிதாகவே நடக்கும்.)&lt;br /&gt;&lt;br /&gt;”தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் ”கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன.  இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இட்ளில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூ}ய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள” மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திhpகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;”கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ”முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழநேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பஙிகளால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனத கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னிததன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பார்க்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தொpயாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். 'ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்?”&lt;br /&gt;&lt;br /&gt;1. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. The Island  2000 மே,யூன் பத்திரிகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு&lt;br /&gt;&lt;br /&gt;4. உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை&lt;br /&gt;&lt;br /&gt;5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;6. க்ரியா தற்கால தமிழ் அகராதி.&lt;br /&gt;&lt;br /&gt;6. http://www.suntimes.co.za/1998/05/17/news/nets05.htm&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-1845973637501182938?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/1845973637501182938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=1845973637501182938' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/1845973637501182938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/1845973637501182938'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/26-island.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYANwDXoOYI/AAAAAAAAAbk/2pTV2sbOoM0/s72-c/PEN_aHE0.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-3945035173644775199</id><published>2009-01-29T17:36:00.000-08:00</published><updated>2009-01-29T14:04:48.745-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color: rgb(255, 153, 102);"&gt;தென்னாப்பிரிக்காவில் மாணவர்களிடம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(255, 153, 102);"&gt;கன்னித்தன்மை பரிசோதனை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_iQrKQks0218/SYB2DX2I5xI/AAAAAAAAAXo/s_mYO8DwW9c/s1600-h/078_1B.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 387px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_iQrKQks0218/SYB2DX2I5xI/AAAAAAAAAXo/s_mYO8DwW9c/s400/078_1B.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296362962100479762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள வடக்கு குவோசுலு நட்டால் எனும் பரதேசத்தில் சில பாடசாலைகளில் மாணவர் மாணவிகளிடையே கன்னித்தன்மை பாpசோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறம் சார்ந்த பாடசைகளில் ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் பின் கன்னித்தன்மையுடையவர்களென கல்வித் திணைக்களம் சான்றிதழ் கூட அளித்துள்ளது. ஆசிரியர்களாலேயே நடத்தப்படும் இந்தப் பரிசோதனைக்கு பெற்றோர்களின் பூரண ஆதரவு இருந்திருக்கிறது. அத்துடன் இந்த பரிசோதனை 6 வயதடையவர்களிடம் கூட நடத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சான்றிதழ் புதுப்பிக்கப்படுவதற்காக மீண்டும், மிண்டும் இந்த சோதனை நடத்தப்படுவதாக தென்னாப்பிரிக்காவில் வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் சிறுநீர்கழிப்பதை அவதானித்தும், அவர்களின் முழங்காலுக்குப்பின்புறம் மற்றும் ஏனைய சில இடங்களில் தோல்களும் பரிசோதிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு பெண் ஆசிரியைகளாயே பாpசோதக்கப்படுவதோடு அவர்கள் கன்னிச்சவ்வையும் பரிசோதிக்கிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் தரும் விளக்கம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்படும் சோதனையென்றே. சூலு இனத்தவர்களின் மரபில் திருமணத்திற்கு முன் பாலுறவு மரபை மீறும் குற்றமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பரிசோதனைக்கு எவரும் வற்புறுத்தப்படாததாகக் கூறப்பட்டபோதும், கல்வித் திணைக்களம் இந்தப் பரிசோதைனையை மேற்கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறது. கொம்பின்பிண்டோ எனும் பள்ளிக்சுடத்தில் 747 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 500 பேர் சித்தியடைந்திரக்கிறார்களாம். கொப்பும்லொண்டோ எனும் பள்ளிக்கூடத்தில் 840 போpடம் நடத்தப்பட்ட சோதனையில் 250 பேர் தான் சித்தியடைந்திருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;”நான் பரிசோதித்த 3000 மாணவர்களில் 135பேர் சித்தியடைந்திருக்கிறார்கள்” என மாலிங்கா எனும் பாசாலை அதிபர் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிலிசீவி எனும் ஆசிரியை குறிபிடுகையில் தான் மாணவர்கள் மத்தியில் அசெம்பிளியில் உரையாற்றும் போது தான் கனனித்தன்மையுடைவள் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடுவதாகவும், எனக்கு வழங்கப்பட்டுள்ள கன்னித்தன்மை சான்றிதழை நான் சகலருக்கும் பெருமிதத்துடன் காண்பிப்பதாகவும், தனது கனவனுக்கான தனத அன்பளிப்பாக அந்த சான்றிதழை தான் அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;14 வயதுடைய தமிலூலி மாணவி குறிப்பிடுகையில் ”நான் இரண்டு சான்றிதழ்களை வைத்திருப்பதையிட்டு பெருமைகொள்கிறேன். எனது வகுப்பிலுள்ள 28 மாணவர்களில் 20 பேர் தூய்மையானவர்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;20 வயதுடைய நெலிசிலி எனும் உயர் கல்வி மாணவி குறிப்பிடுகையில் 15 பேருள்ள தனத வகுப்பில் தானும் தனது நன்பியும் தான் தூய்மையானவர்களென்றும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை தனது படுக்கையறைச் சுவரில் மாட்டி வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆசிரியர்கள் தங்களது கடமையை நன்றாகச் செய்கிறார்கள் என்றும் அவர்கள் தனக்கு விருப்பமானவர்கள் என்றும் அந்த மாணவி மேலும் தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :&lt;br /&gt;தென்னாப்பிரிக்க சண்டே டைம்ஸ்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-3945035173644775199?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/3945035173644775199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=3945035173644775199' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/3945035173644775199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/3945035173644775199'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/p.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_iQrKQks0218/SYB2DX2I5xI/AAAAAAAAAXo/s_mYO8DwW9c/s72-c/078_1B.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-2022375029259682320</id><published>2009-01-29T10:15:00.000-08:00</published><updated>2009-01-29T13:57:06.141-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color: rgb(255, 204, 0);"&gt;என் உடல் மீதான உரிமை என்னதே!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 153, 102);font-size:130%;" &gt;"பெண் மீதான அடக்குமுறையின்&lt;br /&gt;அடிப்படை பாலியலிலிருந்தே&lt;br /&gt;ஆரம்பிக்கப்படுகிறது"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 51);"&gt;-குமுதினி சாமுவேல்-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYCtNHw8c0I/AAAAAAAAAZQ/Rk9JN_FfWVs/s1600-h/f54d01d7c4.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 302px; height: 228px;" src="http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYCtNHw8c0I/AAAAAAAAAZQ/Rk9JN_FfWVs/s400/f54d01d7c4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296423602721944386" border="0" /&gt;&lt;/a&gt;இன்று அதன் இணைப்பாளராகவும் உள்ள குமுதினி சாமுவேல் நீண்ட காலமாக பெண்ணியம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு வருகிறார். 80களின் ஆரம்பத்தில் சுதந்திர வர்த்தக வலய பெண்களின் தொழிலாளர் போராட்டத்தின் முன்னோடியாக இருந்தவர். பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமானவர். பெண்களின் மீதான அடக்குமுறைகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகை செய்திகிளினூடாக கண்காணித்து அவை குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வரும் ''பெண்ணுரிமைகளின் கண்காணிப்''பின் ஆசிரியராகவும் இவர் இருக்கிறார். பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவரும் இவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு அறிக்கையிட்டு வருவராகவும் இருந்து வருகிறார். மேர்ஜ் அமைப்பின் தேசியக் கமிட்டி உறுப்பினரான அவர் பெண்ணிய விடயங்களில் குறிப்பாக பெண்களின் சுகாதார, மறுஉற்பத்தி உரிமையில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக கருக்கலைப்பு உரிமை உள்ளிட்ட பெண்களின் சுகாதார உரிமைகள், மறு உற்பத்தி உரிமைகள் பற்றிய விடயங்கள் அதிகளவு பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ்ச் சூழலில் இது குறித்த கருத்தாடல்கள் போதுமானதாக இல்லை. மேலும் எனது உடல் எனக்கே சொந்தாமானது அதை தீர்மானிக்கும் உரிமையும் எனக்குரியதே எனும் கோஷமும் பெண்கள் அமைப்புகளால் பலமாக வலியுறுத்தப்பட்டு வரும் காலம் இது. இந்த நிலையில் இவை பற்றி உரையாட தேர்ந்த நபரென குமுதினி சாமுவேல் அவர்களை தெரிவு செய்தோம்.எனது உடல் எனக்குரியது எனும் கோஷத்தை முன்னெடுக்கின்ற ஒரு வேலைத் திட்டம் குறித்து அண்மையில் இலங்கை அரசு சார்பற்ற பெண்கள் கூட்டமைப்பினால் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அது பற்றி விளக்குவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அதை இந்த வருட இறுதிப்பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அந்த கலந்துறையாடலில் இவை பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைக்கு எப்படிப்பட்ட கோஷங்களை உருவாக்கி பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது குறித்து மட்டும் தான் கலந்துரையாடினோம்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_iQrKQks0218/SYCprP0DyHI/AAAAAAAAAY4/aA4-pYtu-ec/s1600-h/610x.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 287px;" src="http://2.bp.blogspot.com/_iQrKQks0218/SYCprP0DyHI/AAAAAAAAAY4/aA4-pYtu-ec/s400/610x.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296419722232055922" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;பெண் உடல் மீதான ஆணின் அதிகாரம், மற்றும் அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான புனைவுகள் பற்றி?&lt;/blockquote&gt;பெண்ணின் உடல் பற்றி எடுத்துக்கொண்டால் சிறு வயது தொடக்கமே அவளது உடல் பற்றிய தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். பெண்ணின் மாதவிடாய் தொடங்கும் காலம் தொட்டு, திருமண கால மாதவிடாய் வரை எமக்கு கற்பிக்கப்படுபவை, எமக்கு கற்பிக்கப்படாதவை பற்றி முக்கியமாக அவதானித்துப் பாருங்கள். சுகாதார விடயங்கள் பற்றி தாய்மார் பேசுவதற்கு வெட்கப்படுகின்றனர். தந்தை மார் அது பற்றி பேசுவதே கிடையாது. இப்படியான நிலையில், ஒன்றில் நன்பிகள் மூலமாகவோ அல்லது சில நூல்களினூடாகத் தான் பெரும்பாலும் தெரிந்து கொள்கிறோம். இவற்றிற்கூடாக பெரும்பாலும் எமக்கு வந்து சேர்பவை தவறானவையாக இருந்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ், சிங்கள கலாச்சாரத்தில் காணப்­படுகின்ற ”பெரிய பிள்ளையாதல்” என்பது வெறும் ”சடங்கு” ஆகவே கொள்ளப்படுகிறது. அதன் போது பெண், திருமணத்துக்கு தயாரானவள் என்பதை உலகத்துக்குத் தெரியப்படுத்த சிகப்பு உடுத்தி ஒரு கண்காட்சியையே நடத்தி விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடத்துக்கு முன் யாழ்ப்பாணம் சென்றி­ருந்த போது ஒரு நிகழ்ச்சியை அவதானித்தேன். எனது நன்பி ஒருவாpன் உறவினர்கள் அவுஸ்தி­ரேலியாவில் இருந்து வந்திருந்தார்கள். விசாரித்­ததில் தனது பிள்ளைக்கு சாமத்திய சடங்கை நடத்துவதற்காக யாழ் அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது. இத்தனை பிரச்சினைகளின் மத்தியில் நடத்தத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி என்னை ஆச்சிரியப்படுத்தியது. சாமத்திய சடங்கு பற்றிய மரபான முறையை கவனித்தோமானால், மாதவி­டாய் முதல் தடவையாக வெளியேறுகிற சந்தர்ப்­பத்தில் ஆண்களின் பார்வையிலிருந்து விலக்கி வைத்து, நேரம் பார்த்து, குறிப்பிட்ட தினத்தில் நீராட்டி, கடவுளை வணங்கச் செய்து, பகிரங்கமாக உறவினர்கள், நண்பர்கள் பார்வையின் முன் கொண்டு வருவார்கள். இது முதலாவது சந்தர்ப்­பத்தில். ஆனால் 12 தடவைகள் (12 மாதங்கள்) மாதவிடாய் வந்தபின்னும் கூட இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இதன் காரணம் அதில் ”வாடிக்­கையாளருக்கு” அறிமுகப்படுத்தும் நோக்கமும் திருமணத்துக்கு தகுதி பெற்று விட்டாள் என்கின்ற செய்தியை தெரியப்படுத்துவதுமே உள்ளார்ந்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வயதுக்கு வந்ததும் ஆண்களுடன் சேரக் கூடாது, பேசக்கூடாது, பழகக் கூடாது என வீட்டார் நிபந்தனை விதிப்பார்கள். திருமண காலங்களில் கூட எமது சம்பிரதாயங்களில் திருமணம் பற்றியோ குறைந்தது பாலியல் விடயங்கள் பற்றி கூட விளக்கமளிப்பதில்லையே. திருமணமான பழையவ­ர்களைக் கேட்டால் தம­க்கு அந்த முதல் இறவின் போது நடந்தவை பற்றி ஆச்சரியமாக இருந்தாகக் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் சிறியானி பஸ்நாயக்க செய்திருந்த ஆய்வொன்றில், மண­மா­காத பருவ வயது இளம் ஆண், பெண்கள் மத்தியில் பாலுறவு செயற்பாடுகள் அதிகாரித்து வருவதாகத் தெரிவி­த்துள்ளார். அது மட்டு­மன்றி இளம் சந்ததியினர் மத்தியில் இன்று பாலியல் விடயங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. ஆனால் மறு உற்பத்தி சுகாதாரம் என்றால் என்ன என்பது குறித்த முறையான விளக்கம் அவர்கள் மத்தியில் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;சுகாதாரம் மறு உற்பத்தி குறித்த விடயங்கள் பெருமளவு பெண்ணின் உடல், பாலுறவு என்பவற்றோடு ஒட்டியல்லவா பேசப்படுகிறது?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய விடயங்கள் பரந்துபட்டது. பாலியல் ஈடுபாட்டின் போது கருக்கட்டப்படலாம். பாலுறவின் போது கருக்கட்டலை தவிர்க்க வேண்டுமாயின் எப்படிப்பட்ட முறையில் தவிர்ப்பது என்பது பற்றிய விளக்கம் பெரும்பாலும் கிடையாது. கருக்கட்டலை தவிர்க்கின்ற வகையில் பாதுகாப்­பான பாலுறவு கொள்வது எப்படி என்பது பற்றி  திருமணமானவர்கள் சாதாரணமாக வைத்தியர்க­ளின் ஆலோசனையைப் பெறலாம். திருமண­மாவதற்கு முன்னர் ஆணும், பெண்ணும் பாதுகாப்பான பாலுறவு கொள்ள ஆலோசனை பெறுவதற்கு பெரும்பாலும் முடிவதில்லை.....&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, பாலுறவின் போது ஏற்படக்­கூடிய நோய்கள் பற்றிய எச்சரிக்கை  கொள்ள வாய்ப்பில்லை. பாலியல் சார்ந்த நோய்கள் உள்ள­வர்களை சமூகம் ஒழுக்கவியல் விவகாரமாகவே (moral) பர்க்கிறது. அவர்கள் பாவம் செய்தவர்­களாகவும், ஊழ்வினைப்பயனை அனுபவிப்­பவர்கள் என்றும் கருதுகிறது. அவ்வாறான நோய்களை தவிர்க்கும் முறைகள் பற்றி எமக்குத் தெரிவதில்லை. இன்று அதையும் விட எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி குறைவாகவே பேசப்படுகிறது. இலங்கையில் பெரும்பாலானோர் எமது நாட்டில் அப்படியொன்றும் பெரிதாக இல்லை எனக் கூறிக்கொள்கின்றனர். பேசவே விருப்பமில்லாத விடயமென்பதால் அப்படியொன்று இல்லை­யென்று ஒளிக்கவே விரும்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று போர்ப் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் அங்கு இளம் - ஆண்கள் படையில் பெருமளவாக உள்ளனர். சாவிலிருந்து தப்பி, விடுமுறையில் திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உணர்ச்சிகளைத் தணிப்பதற்காக பெண்களைத் தேடிக்கொண்டு செல்வார்கள். இன்று அனுராதபுரத்தில் பாரியளவில் விபச்சாரத் தொழில் நடந்து வருவது எம்மெல்லோருக்கும் தெரியும். எல்லைப் புறங்களிலும் இது தான் நிலைமை. மேலும் படையினர் அதிகமாக நடமாடும் இடங்களில் பெண்கள் பழியாக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பத்துடனோ விருப்பமி­ன்றியோ இவை நடக்கின்றன. பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. படையினர் சூழ உள்ள பிரதேசங்களில் படையினரின் பாலியல் தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அப்படி­யான பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பான பாலுறவு, கருக்கட்டல் தவிர்ப்பு, சுகாதாரங்கள், பாலியல் நோய்கள் என்பவை பற்றி அக்கறை காட்டப்படுவதே இல்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை. படையின­ருக்குக் கூட இது குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகிறதா என்பது தெரி­யாது.  அவர்கள் உறவு கொள்ளும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்­களா?&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஆணுறை மாத்திரம் பாவிக்கின்றனர். ஆனால் பெருமள­வான ஆண்கள் ஆணுறையைப் பாவிக்க விருப்பப்படுவதில்லை. திருமணமான கனவனைக் கூட எமது பெண்கள் ஆணுறை பயன்படுத்து­மாறு வலியுறுத்தும் வழக்கம் இல்லையே. அவ்வாறான சந்தர்ப்ப­ங்களில் வழமைபோல ஆணின் அதிகாரம் தான் அதையும் தீர்மானி­க்கிறது. எனவே பெண்களின் உடலைப் பாதுகாப்பதற்கான வாய்ப்­புகள் இல்லை. இவை அனைத்தும் பெண்களின் மறு உற்பத்தி உரிமைகளுடன் தொடர்புடையவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;பொதுவாக இவை குறித்த விழிப்புணர்வுகள் போதுமானதாக இல்லையே?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப கால தரவுகள் படி குடும்பக் கட்டுப்­பாட்டுத் திட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அதிகம் என்று கூறுகின்றன. ஆனால் அது தற்போது குறைந்து வருவதாக சில மருத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர். குடும்பத்திட்டம் பற்றிய கருத்தூட்டல் நிகழ்ச்சிகள் இலங்கையில் எந்தளவு தூரம் மக்களை அடைகிறது என்பது தொpயாது. இல்லாமல் போனால், கருக்கட்டல் வரையறையில்லாமல் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தற்போது திருமணமாகின்ற வயதும் அதிகரித்து வருகிறது. பெண்களாயின் அது 26-28 ஆகிறது என்றும் ஆண்களாயின் 30 அல்லது அதையும் தாண்டுகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே திருமணமா­வதற்கு முன்னர் பாலுறவுக்கான வாய்ப்புகள் உண்டு. அதை விட திருமணமான பின்னர் வேற்று பாலுறவுக்கான வாய்ப்புகளும் உண்டு. இதைவிட எமது சமூகத்தில் கனவரிழந்தவர்களின் தொகை குறிப்பிடத்தக்க அளவு உண்டு. வடக்கிலும், தெற்கிலும், உள்ளனர். இவர்களுக்கு பாலியல் தேவைகள் இல்லையா? அல்லது அவர்கள் பாலுறவுக்கோ, பாலியல் வல்லுறவுக்கோ உள்ளாக மாட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சம்பிரதாய எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் எமது சமூகத்தில் பாலுறவுகள் நடைமுறையிலி­ருக்கின்றன. நாங்கள் அதனை பிற்போக்குத் தனமாக உணர்ச்சிவசப்பட்டு மட்டும் பார்ப்போ­மானால் எம்மால் பிரச்சினைகளை அடையாளம் காணவும் முடியாது. அதனை தீர்க்கவும் முடியாது. யதார்த்தம் என்ன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நவீன சமூகத்தில் இந்த யதார்த்தத்தைத் தடுக்க முடியாது. எனவே நாம் இது விடயத்தில் எடுக்கக்கூடிய ஒரு ஒரே வழி பெண்களைப் பாதுகாப்பது. அதற்கு எமக்கு தகவல்கள் தேவை. பாலுறவுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகள் தேவை. கருக்கட்டல் எவ்வாறு இடம்பெறுகின்றது. கருக்கட்டல் அவசியமில்லையெனில் அதற்கேற்றவகையில் பாலுறவு கொள்வது எப்படி, அதையும் மீறி கருக்கட்டப்பட்டால் அதை பாதுகாப்பான முறை­யில் கருக்கலைப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு, திட்டமிடல் அவசியம். மத்திய தர வர்க்கத்தினருக்கு இவ்விழிப்புணர்வுகளுக்கான வாய்ப்புகள் அதிகம். வறுமை மிகுந்த, கிராமிய, மற்றும் தொழிலாள, விவசாய பிரிவினருக்கு இந்த வாய்ப்புகள் எட்டுவதில்லை. அவர்களைப் போய் இந்த விழிப்பூட்டல்கள் போய் சேருவதில்லை, அல்லது வெட்கம் காரணமாக அவர்கள் பின்வாங்குகின்றனர். இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. மலையகத்­திலும் இந்த நிலமை இருக்கிறது. மலையகத்தில் பெரும்பாலும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இன்று கருக்கலைப்பு உரிமை பற்றிய விவாதம் சூடு பிடித்து வருகிறது. அதற்கென்ன காரணம்?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவிலும் தாய்மையைப் பாதுகாப்பது (safe motherhood) என்ற ஒரு காரணத்துக்காக மாத்திரம் தான் கருக்கலைப்பை செய்து கொள்ளளாம் என்கின்ற கருத்து உள்ளது. அதனடிப்படையிலேயே சட்டங்களும் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்துக்கு விரோதமான ஒன்று. உங்களுக்குத் தெரியும் இன்று இலங்கையில் நாளொன்றுக்கு 750க்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக ஐ.நா.வின் தகவல் கூறுகின்றன. இதன் போது தாய்மார் 5-6 வீதம் வரை மரணிக்கின்றனர். இதன் பின்னராவது நாம் பெண்களைப் பாதுகாப்பதா இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், கருக்கலைப்பு ஒரு உயிர்க் கொலை, பாவம் என்கின்ற கருத்தாக்கத்திலிருந்து தொடங்கினால் உயிருடன் இருக்கிற தாயின் உயிர், ஆரோக்கியம், எதிர்காலம் குறித்த முறையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கருக்கலைப்பை சட்ட ரீதியில் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான ஆரோக்கியமான வசதிகளையும் ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு. பெரும்பாலும் கருக்கலைப்பைத் தீர்மானிக்கும் போது ஆணும் பெண்ணு­மாக உடன்பட வேண்டும் என்றும் கூறி வருகிறா­ர்கள். ஆனால் கருவை சுமப்பதும், அதன் விளை­வுகளை சந்திப்பதும் பெண் என்பதால், குறித்த தீர்மானமெடுப்பதில் பெண்ணுக்கே முன்னு­ரிமை இருத்தல் அவசியம். விவாகத்துக்குப் புறம்பான பாலுறவு அதிகமாக இருக்கிறதென்று எமது புள்ளிவிபரங்களே கூறுகின்றதென்றால், படையினரின் பாலியலு­க்கு பலியாகும் பெண்க­ளின் எண்ணிக்கை அதிக­ரிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றதென்றால் அதனால் ஏற்படும் கருவை கலைப்பதாயின் அந்த ஆண்களைத் துணைக்கு கூப்பிட முடியாது. எனவே, பெண்ணின் தனிப்பட்ட தீர்மானத்துக்கு வழி சமைக்க வேண்டும். பெண்கள் இந்த விடயத்­தில் பொறுப்பற்ற தீர்மா­னத்தை எடுப்பதில்லை. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டால் சகலரும் குடும்பத்திட்ட முறைகளை கைவிட்டுவிட்டு கருக்கலைப்பை நோக்கிச் செல்வார்கள் என்கின்ற நம்பிக்கை எமது நாட்டவர் மத்தியில் உண்டு. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கப்­பட்டதன் பின்னர் அங்கு கருக்கலைப்பின் தொகை முன்னரை விட அதிகளவில் குறைந்திருக்கிறது. இப்படி உதாரணமாக பல நாடுகளைக் காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;எப்படி அது சாத்தியமானது?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருக்கலைப்பு சட்டபூர்வமாக்­கப்பட்டதோடு கூடவே முறையான குடும்பத்திட்ட சேவைகள், தகவல் பிரச்சாரங்கள், விளக்கமளிப்பு ஆலோசனைச் சேவைகள் என்பவை­யும் செய்யப்பட்டன. அதற்கென்று கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்டால் இங்கும் கருக்கலைப்பு குறையுமென்றே நான் நம்புகிறேன். இலங்கையில் ஏற்கெ­னவே குடும்பத்திட்ட சேவை இருக்கிறது. கருக்கலைப்பு சட்டபூர்வ­மாக்கப்பட்டால் அதற்கொன்று கொள்கைவகுப்பு, வேலைத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டிவரும். அப்படி செய்யப்பட்டால் இந்த குடும்பத்திட்ட சேவையும் மறுசீராக்கம் செய்து அதிகப்படுத்த வேண்டிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;கருக்கலைப்பு தொடர்பான பொறுப்பு வாய்ந்த ஆட்சி அதிகார தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து...?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1995இல் பாராளுமன்றத்துக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்த கருக்கலைப்பு பற்றிய சட்டசீர்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி சூழலில் ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டாலோ, அல்லது அசாதாரணமான நிலைமைகள் இருந்தாலோ அந்த கருவை கலைக்கலாம் என்கின்ற திருத்தங்களை உள்ளடக்க முயன்றார். ஆனால் அதனை கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் மத நிலைப்பாடுகளிலிருந்து பலர் எதிர்த்ததால் அச்சட்டமூலம் திருத்தப்படவில்லை. அமைச்சர் அதனை வாபஸ் வாங்க வேண்டி வந்தது. ஆனாலும் இறுதியில் அவர், இறுதியில் கருக்கலைப்பு பற்றி சட்டத்தில் பேசாது விடுவோம். அதையாவது செய்வோம். அதனை சட்டத்துடன் சேர்க்கத் தேவையில்லை. அது ஒரு மருத்துவம் பற்றிய விடயம். எனவே ஆஸ்பத்திரியில் சாதாரண நோய்களைப் போல இதனையும் செய்ய வாய்ப்பு கிட்டும் என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு முன்னை­யதை விட அதிகளவு எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் அவர் இச்சட்ட மூலத்தை மீண்டும் கொண்டுவர தான் முயற்சிப்பதாகக் கூறினார். அனால் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்க­ளுடன் முறையான புரிந்துணர்வை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படமையினால் இன்று வரை அதில் வளர்ச்சி எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது அவரது கடமை அல்லவா என்று விட்டுவிட முடியாது. பாராளு­மன்றத்துக்கு மீண்டும் கொண்டு வரும்படி கோரி நிர்ப்பந்திக்க சில நிறுவனங்கள் உள்ளன. மகளிர் விவகார அமைச்சு, குடும்பத்திட்ட, சுகாதார நிறுவனம், தேசிய பெண்கள் கமிட்டி, பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் குழுக்கள் இவைகளால் அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். சட்டத்துறையினர் மத்தியிலும் இதற்கு ஆதரவு இருக்கிறது. பொலிஸார் மத்தியிலிருந்தும் தற்கு ஆதரவு இருக்கிறது. ஏனெனில் சுற்றி வளைத்து சோதனை செய்வது கைது செய்வது என்பவற்றை  இவர்களே செய்கின்றனர். சில இடங்களில் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். கருக்கலைப்பை ஆரம்பத்திலேயே செய்ய முடியாத­வர்கள் குழந்தையை பெற்றுக் கொண்டதும், மலசல கூடங்கள், வாய்கால்,  குப்பைத் தொட்டிகள், காண்கள் என்பனவற்றில் போட்டு விட்டுப் போகும் சந்தர்ப்பங்களையும் அவ்வப்போது செய்திகளில் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் கொண்டு வந்த சட்டமூலத்தை தயாரிக்கும் போது அதில் பெண்கள் அமைப்புகள் பல சம்பந்தப்பட்டிருந்தன. பெண்கள் அமைப்புகள் என்கின்ற ரீதியில் நாங்கள் செய்ய வேண்டியது திர்மானமெடுக்கும் தரப்பிலுள்ளவர்களை எமது இலக்கை நோக்கித் தள்ளச் செய்வதே. இது வரை அப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டது கிடையாது. இதைச் செய்வது எம்மெல்லோரினதும் கடமை. இது வரை ஒரு மனித உரிமைகள் அமைப்பாவது பெண்களின் பிரச்சி­னையொன்றுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டதில்லை. பெண்களின் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினை­யாக கருதுவது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமளவான தொடர்பு சாதன­ங்கள் கூட இதனை எவ்வாறு செய்திப்­படுத்துவது என்பது குறித்த விழிப்­புணர்வு கிடையாது. ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு குறித்து செய்தியிடுகின்ற வேளை மறுபுறம், ”கருவிலேயே கொலை” என்று கருக்கலைப்பு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பும் வேலைகளும் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்கு தேவைப்படுகிற போது பிள்ளை பெற்று கொடுப்பதற்கும், ஆணுக்குத் தேவையற்ற நேரத்தில் குழந்தையை தவிர்ப்பதற்கும்  பெண், இயந்திரம் அல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்குத் தான் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழும் வாய்ப்பு தான் இருக்கிறதா? அந்த தாய்க்குத் தான் நிம்மதியாக வாழும் வாய்ப்பு உண்டா? அவள் அதன் பின்னர் இந்த சமூகத்தின் பார்வையில் நடத்தைக் கெட்டவளா­கவும், வேசி என்றுமல்லவா அழைக்­கிறது? இப்படி பிறந்த பின்னர் நிம்மதியாக வாழ விடாத சமூகம் தான் அதே குழந்தை பிறக்கவிடாமல் செய்வதற்கு எடுக்கும் முயற்சியின் போது இது உயிர் என்று கத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சகலரும் இது விடயத்தில் இப்படி சிந்தியுங்கள், தங்களின் மனைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, சகோதாpக்கு இப்படி நேரிட்டால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இது சுற்றி சுற்றி கற்பு குறித்த மரபார்ந்த கருத்தியல், ஐதீகங்களையல்லவா மையப்படுத்தி நிற்கிறது?&lt;/blockquote&gt;அது தான் உண்மை. கற்பு குறித்த ஐதீகம் பெண்ணின் உடல் மீதான ஆணின் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கற்பை பாதுகாத்தல் என்கின்ற விடயம், பாலியலை சுதந்திரமாக பெண் பாவிக்க முடியாது என்கின்ற கருத்துநிலை, அது கட்டிய கணவனுக்கு மட்டுமே ஏனைய பண்டஙகளைப் போல சொந்தமானது, கற்பு புனிதமானது, தூய்மையானது என்கின்ற புனைவுகளை சுற்றிக் கட்டப்பட்டது. இந்த தூய்மையை, புனிதத்தை தனது ஆணுக்காக, கணவனுக்காக ”கெடாமல்” காக்க வேண்டும். குடும்பக் கட்டமைப்பின் இருப்புக்கும் கூட, குறிப்பிட்ட குழந்தையின் தந்தை தானே தான் என்று உறுதி செய்யும் வகையிலமைந்த இந்த கற்பு குறித்த கட்டுப்பாடுகள் சுமத்தப்­பட்டுள்ளது. இது மீறலுக்குள்ளாக்­கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் ”வேசி” என்கின்ற பழிச்சொல் சுமத்தி, அவமானத்துக்குள்ளாக்கி, தலைகுனி­வுக்குள்ளாக்கி கற்பு குறித்த பயம் திணிக்கப்படுகிறது. பெண்ணின் பாலியலை, உடலை  கட்டுப்படுத்­துவதில் ஆணாதிக்கம் எப்போதும் குறியாகவே இருந்து வருகிறது. பெண்ணின் மீதான அடக்குமுறையின் அடிப்படையே பாலியலிலிருந்து தொடங்குவதாகவே எனக்குப்படுகிறது. கற்பு பற்றிய மாயைகள் ஏற்படுத்தி­யிருப்பதும் அதற்காகத் தான். விவாகத்தக்குப் புறம்பான பாலியலுக்கு இடமில்லை என்ற நிபந்தனை பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருப்பதும் அதற்காகத்தான். கருக்கலைப்பு பற்றிய விதிகள் பெண்ணுக்கு ஏற்படுத்தியிருப்­பதும் அதற்காகத் தான். பெண்ணுக்கு இவை குறித்த சுயநிர்ணய உரிமை கிடையாது. அடக்கப்படும் எந்த தரப்பினரும் இந்த சுயநிர்ணய உரிமை வேண்டியல்லவா போராடுகிறார்கள். அதே சுயநிர்ணய உரிமைக்காகவே பெண்ணும் போராட வேண்டியி­ருக்கிறது. அதிகாரத்துவத்திற்கெதிராக போராட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணல்: என்.சரவணன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-2022375029259682320?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/2022375029259682320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=2022375029259682320' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/2022375029259682320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/2022375029259682320'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_1566.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_iQrKQks0218/SYCtNHw8c0I/AAAAAAAAAZQ/Rk9JN_FfWVs/s72-c/f54d01d7c4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-5447806263426641783</id><published>2009-01-29T07:16:00.000-08:00</published><updated>2009-01-29T14:01:27.809-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;h1&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="item-control blog-admin pid-346940567"&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=5030903328597702740&amp;amp;postID=1456486277156761695" title="Edit Post"&gt; &lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;  &lt;/h1&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 255, 102);font-size:130%;" &gt;கற்பு - ஒழுக்கம் - பாலுறவு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 102);font-size:130%;" &gt;புனைவுகள்&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iQrKQks0218/SYCT5uo0iwI/AAAAAAAAAX4/OnANZpyCezM/s1600-h/virginity.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 278px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_iQrKQks0218/SYCT5uo0iwI/AAAAAAAAAX4/OnANZpyCezM/s400/virginity.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296395781768776450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(255, 153, 102);"&gt;என்.சரவணன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;" align="justify"&gt;&lt;br /&gt;பாலியல் குறித்த விடயங்கள் புலமைத்துவ மட்டத்தில் பேசுபொருளாக ஆக்கப்பட்டு வருகிறது. இதே வேளை பெண்களின் மீதான பாலியல் வன்முறைக­ளின் சமீபகால அதிகரிப்பையும் அதன் கொடுரத்தையும் கூடவே அறிந்து அனுபவித்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளையதம்பி தர்சினி (வயது 20) எனும் பெண் இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் 18 அன்று கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து பின் கல்லொன்­றுடன் கட்டி கிணற்றொன்றில் போட்டிருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். இந்தச் செய்தி வெளியான போது கூடவே இந்தப் பெண்ணின் ஒழுக்கப்பண்புகள் குறித்த செய்தியும் சிலரால் பரப்பப்பட்டன. படையி­னரின் இந்த காடைத்தனத்தை மூடிமறைக்க அரச இயந்திரமும், போpனவாத கட்டமைப்பும் அப்பெண்ணின் ஒழுக்கப்­பண்புகள் மீது கேள்வியெழுப்பும் வண்ணம் கதைபரப்பியதை பெண்கள் அமைப்புக்கள் கண்டித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கோரத்தனத்தின் பின்னும் கூட அதிகாரத்துவம் படைத்த ஆணாதிக்கம் தனது ”ஆண்மைத்துவ” செய்கையை மறைக்கவென, பலியாக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் மோசமாக சித்தரித்து அக்காடைத்தனத்தை நியாயப்படுத்தவோ அல்லது அதனை சமப்படுத்தவோ முனைவதைக் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை காலமும் பாலியல் வல்லுறவுக்­குள்­ளான பெண்ணை ஆபாசமான உடைய­ணிந்­திருந்தாள், ஆபாசமாக காட்சி தந்தாள், மோசமான இடத்திலிருந்தாள், பிழையான பாதையில் வந்தாள், பிழையான நேரத்தில் வந்தாள் என வல்லுறவுக்கு நியாயம் சொல்லும் வழக்கம் சாதாரண சமூக பேச்சாடலில் மாத்திரமல்ல, சட்டத்தின் முன் கூட காணப்படுகிறது. இது ஒரு சட்ட வலுவாகவும் எதிரிக்கு சாதகமாக அமைந்த எத்தனையோ வழக்குகளைக் காண முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான் இந்த கற்பொழுக்கம் குறித்தும் பாலுறவு குறித்தும் நிலவுகின்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணின் உயிhpயல் அம்சமான பாலுறுப்புகள் மீதான அதிகாரத்துவத்துக்கு ஆணாதிக்க மரபு வழிவந்த சமூக-பண்பாட்டுக் காரணிகள் முக்கியத்துவம் செலுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்மை-பெண்மை குறித்த மரபுப் புனைவுகளின் வாயிலாகவும், ஐதீகங்களின் வாயிலாகவும் இது பலமாக வேரூன்றியுள்ளன. இவற்றை எமது கல்வி, தொடர்பூடாக, மத விவகாரங்கள் பாதுகாத்து, வற்புறுத்தி வந்துள்ளன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;" align="justify"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;" align="justify"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;" align="justify"&gt;&lt;br /&gt;தனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க வேண்டியவளாக பெண் பழக்கப்படுத்தப்பட்­டுள்­ளாள். பாலியல் பற்றிய புரிதல் பெண்க­ளுக்கு மறுக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்­பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பாலியலா­னது இரகசியத்துக்கும், அந்தரங்கத்­துக்கும் உரிய ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குறித்த வேட்கைகள், நாட்டங்கள் செயற்கைத்தனமானதாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. பேசாப்பொருளாக வைத்­தி­ருக்­கப்பட்டாலும் கூட அது பெண்களுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்­பட்டது. பெண்கள் மத்தியில் இவை பேசாப் பொருளாக இருக்கும் வரை அவர்களின் பாலியல் வேட்கைகள் தணிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆணாதிக்கச் சூழலில் நிலவுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தாரமணம், குடும்பம், வம்சாவழி, ஒழுக்க மரபுகள் என்பன தனிச்சொத்துட­மையின் வழிமுறைகள். இதில் ஒரு தார மணமானது தந்தை வழிச்சமூகத்தின் இருப்புக்கு (அதாவது தனது விந்தின் விளைவே­யென்பதை நிறுவுவதற்கு முன்நிபந்­தனையாக திகழ்கிறது.) அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட குழந்தை தனது ஆண்மைத்துவத்தின் விளைவு-வெளிப்பாடு எனக் கருதுகிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;" align="justify"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;" align="justify"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;" align="justify"&gt;&lt;br /&gt;எனவே தான் ஆணாதிக்கமானது ”கற்பு” என்பதை பெண்ணின் மீதான விதியாக ஆக்கிய அதே நேரம் ஆணின் ”கற்பு மீறலை” அது தனது ஆண்மையின் வெற்றியாகவும் நிறுவி விட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கற்பொழுக்கமானது வரலாற்று பூர்வமாகவே பெருங்கதையாடலாக சித்திரித்து வரப்பட்டுள்ளது. அதன் விளைவாக இது இன்றும் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலின் மத்தியில் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் வைதீக பிற்போக்கு சக்திகளால் காலாகாலமாக காயடிக்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணின் இந்த கற்பொழுக்கத்துக்கு பெண்ணின் மீதான ”யோனி மைய வாதம்” ஆற்றுகின்ற பாத்திரம் கரிசனைக்குரியது. இது தான் பெண்ணின் மீதான இயற்கையான உயிரியல் ”கொடுமை”. இனப்பெருக்க மையமாக அமைந்திருக்கிற உயிரியல் இயல்பை பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக இது ஆகியது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண்-பெண் உறவு கட்டமைக்கப்பட்டு குடும்ப அமைப்பு எனும் அதிகாரத்திற்கு ஒடுக்கியது. ”ஒருத்திக் கொருவன்” எனும் சித்தாந்தத்தை பெண்ணுக்கு திணித்தது. இவை கெடாம­லிருக்க ஒழுக்கநியதிகள், கண்காணிப்புகள், விட்டால் போதுமென்ற உடனடித் திருமணங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுறுப்பு லிங்கமாகவும் வழிபாட்டுக்­குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. (இது எப்படி வழிபாட்டுக்கு வந்தது என்பதை பெட்டியில் உள்ள கதையைப் பார்க்க) அதற்கு கோவில் கட்டி கும்பிடுகின்ற அதே நேரம் பெண்ணின் யோனியானது தீட்டு, தூய்மை, துடக்கு, விலக்கு, அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்கின்ற புனைவுகளையும், அதன் மீதான வெறுப்­பையும் ஏற்படுத்தியுள்­ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலுறவு தவிர்த்தால் யோனியை ஒரு வேண்டத்தகாத ஒன்றாகவே ஆணாதிக்க சூழல் கற்பிதம் கொண்டிருக்கிறது. இன்றுள்ள தூஷண வார்த்தைகளைப் பார்த்தால் இதன் விளை­வினை விளங்கிக் கொள்ள முடியும். நிலவுகின்ற தூஷண வார்த்தைகள் அனைத்­துமே பெண்களின் பாலுறுப்புகளைக் குறித்து கேலி செய்கின்றவையாகவே உள்ளன. இதன் மூலம் வேண்டாதவரை அவமானப்படுத்த முடியும் என்கின்ற ஐதீகம் நிலவுகிறது. ஒருவரைத் துன்புறுத்த முடிவு செய்தால் எதிhpக்கு நெருக்கமான பெண்ணின் (தாய், சகோதரி, மனைவி) பாலுறுப்புகள் மீது கேலி செய்தால், அவமானப்படுத்தினால் கோபம் கொள்ளச் செய்யலாம் என்கின்ற ஐதீகமும் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளை இதே யோனி புனிதம் கெடா­மல் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்­புகளும், அவற்றுக்கான விதிகளும் கட்டுப்பா­டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் பாலுறவுத் தொடர்புகள், ஆண்மையின் சிறப்பாகவும் பெண் தனது கணவனைத் தவிர்ந்த எவ­ருடனும் வைத்துக் கொள்கின்ற பாலுறவுத் தொடர்புக­ளினால் அவளது ”கன்னித்தன்மை” புனிதம் கெட்டதாகவும், கற்பிழக்கப்பட்­டதாகவும், நடத்தை கெட்டதாகவும், ஒழுக்க மீறலாகவும் புனை­யுமளவுக்கு கருத்தியல்கள் கட்டமைக்கப்­பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUoYLYwvzzI/AAAAAAAAARA/fUKYm6z1Idw/s1600-h/PENTALAI.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5281060096949866290" style="margin: 0px auto 10px; display: block; width: 239px; cursor: pointer; height: 311px; text-align: center;" alt="" src="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUoYLYwvzzI/AAAAAAAAARA/fUKYm6z1Idw/s320/PENTALAI.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் பாலுறவானது விஞ்ஞான பூர்வமான பரஸ்பர புரிதலுடனான கூட்டுச் செயற்­பாடாக இல்லை. பாலுறவின் போது பெண்ணானவள் வெறும் போகப் பொருள் மாத்திரமே ஆண் விரும்பிய போது ”சகலவற்றையும்” சகித்துக் கொண்டு இசைந்து கொடுக்கும் இயந்திரம் மாத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த யோனி மையவாதம் தான் யோனியை மையமாகக் கொண்ட பாலுறவுக்கு அப்பால் - எல்லாமே வக்கிரம் என்ற புனைவை­யும் ஏற்படுத்தியது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;எதிர்பாலுறவுக்­கூடாகத்­தான் (retro sexual) பாலியல் இன்பம் கிட்டும் என்கின்ற புனைவுகளும் இதன் வெளிப்பாடே. எனவே தான் பின்னர் புட்ட உறவு, வாய் உறவு மற்றும் ஒரு பாலுறவு வரை எல்லாமே அபத்தமானதா­கவும், வக்கிரம் கொண்டதாகவும், இயற்கைக்கு முரணானதாக­வும், சட்டவிரோதமானதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது ஆணின் பாலாதிக்கத்­துக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நிலவுகின்ற சமூக அமைப்பைப் பொறுத்தளவில் தனது சொந்த பாலுறுப்பு தவிh;த்து ஏனையோரின் பாலுறுப்புக்களை அருவருப்பாக பார்க்கின்ற உளவியல் ஆண்களிடம் இருப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, பெண்கள் இருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக குழந்தைகளுக்கு குண்டி கழுவுவது முதல் கொண்டு ஏனையோரின் உள்ளாடைகளை கழுவுவது மற்றும் குழந்தைகள், பிள்ளைகளின்-ஏன் வீட்டிலுள்ள அனைவரதும் பாலுறுப்புகள் உள்ளிட்ட சுகாதார மருத்துவ விடயங்களில் அக்கறை கொள்வதும், ஏன், சொந்த பாலுறுப்பு மீதான சுகாதார மற்றும் மறு உற்பத்தி குறித்தும் சகல வழிகளிலும் பெண்ணே, பொதுவாக எந்தவித அருவருப்­புக்­குமுள்ளாகாமல் சகிப்புடன் பாலுறுப்பு நலன்களில் ஈடுபாடு கொள்ள கற்பிக்கப்பட்­டுள்ளாள். இப்படியான பொறுப்­பு­க­ளி­­லிருந்து விலகி வரும், ஆணாதிக்கத்திடம் இப்படிப்­பட்ட அருவருப்புகள், வெறுப்­புணர்வுகள் இருப்பது குறித்து பின்னென்ன ஆச்சரியப்­பட இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான் இந்த கற்பு, கன்னித் தன்மை, போன்ற மரபான ஐதீகங்கள் இன்று பாலியல் வல்லுறவை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. சமூகத்தில் உள்ள பாலொடுக்­குமுறைகளை இனங்காணாமல் செய்து விடுகிறது. குடும்பத்தில் கணவனால் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படு­கின்ற வேளைகளில் அது அவனின் உரிமையாக கொள்ளப்படுகிறது. பெண்கள் அதனை சகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்­படுகிறது. இருக்கின்ற ஆணாதிக்க கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்ளச் செய்துள்ளது. இந்த கட்டமைப்பின் மீதான மீறல் மேற்கொள்ளப்­படுமாயிருந்தால், மீறியவளை நடத்தை கெட்டவளாக ஆக்கிவிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் குறித்த இந்தப் புனைவுகளைத் தகர்ப்பதே பெண் விடுதலையை சாத்தியமாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பெண்கள் மீதான வன்முறைக­ளில் பாலியல் வன்முறையானது அதிகரித்து வருவதானது அதிகாரமற்ற பாலாரின் மீதான ஆண்களின் கையாலாகாத்தனத்தையே குறிக்கிறது. அதிகாரத்துவத்தின் அடக்கு­முறைக்குள்ளாவதால் அதிகாரம் முதலில் அவசியம். இன்று இந்த அதிகாரத்துக்கான ஒரு பயணத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்­கிறது. ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பயணத்தில் தங்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றுவது, விடுதலையில் அக்கறையுள்ள அனைத்து பெண்களினதும் கடமை.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-5447806263426641783?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/5447806263426641783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=5447806263426641783' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/5447806263426641783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/5447806263426641783'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_4789.html' title=''/><author><name>Voice for Voiceless</name><uri>http://www.blogger.com/profile/16807674424690807970</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_iQrKQks0218/SYCT5uo0iwI/AAAAAAAAAX4/OnANZpyCezM/s72-c/virginity.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-5011461665561809655</id><published>2009-01-29T06:37:00.000-08:00</published><updated>2009-01-30T13:11:07.940-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;h1&gt; &lt;/h1&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 255, 51);font-size:130%;" &gt;போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span class="item-control blog-admin pid-346940567"&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=5030903328597702740&amp;amp;postID=9139167860216427142" title="Edit Post"&gt; &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h1&gt;&lt;span class="item-control blog-admin pid-346940567"&gt; &lt;/span&gt; &lt;/h1&gt; &lt;h1&gt;&lt;span class="item-control blog-admin pid-346940567"&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=5030903328597702740&amp;amp;postID=9139167860216427142" title="Edit Post"&gt;&lt;span class="quick-edit-icon"&gt;&lt;/span&gt; &lt;/a&gt; &lt;/span&gt; &lt;/h1&gt;    &lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpADZ4mlUI/AAAAAAAAARI/V5xjWwKG3P8/s1600-h/rape.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 428px;" src="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpADZ4mlUI/AAAAAAAAARI/V5xjWwKG3P8/s320/rape.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5281103940277409090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);font-size:130%;" &gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை நிறுவுவதற்கு சுனாமி கூட நமக்கோர் நல்லதொரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சம், பட்டினிச்சாவு, நோய், இயற்கை அனர்த்தம், போர் என அத்தனைக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpDs58tN3I/AAAAAAAAAR4/6vA5OGKi3H0/s1600-h/rapeiswe.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 243px; height: 343px;" src="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpDs58tN3I/AAAAAAAAAR4/6vA5OGKi3H0/s320/rapeiswe.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5281107951794075506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போரின் போது பெண்கள் இன்னும் பிரேத்தியேகமான முறையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுவதும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. நமது சங்க இலங்கியங்கள் கூட இதனை பதிவு செய்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில், தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்­களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்­டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பேரினவாதக் கட்டமை­ப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க அரசியல் சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது, தானே, விரும்பி­னாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்­பானது அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சமாதான முயற்சி..., பேச்சுவார்த்தை..., போர் நிறுத்தம்..., தீர்வு... என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராக்கப்பட்டு வருவதை தென்னிலங்­கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போர்க் கெடுபிடி நிலையை பேணி வருகிறது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு - பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்க­ளின் வேலை நிறுத்தம், பொருள் விலையு­யர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவ­ற்றைக் கூட போரின் பேரால் நியாயப்­படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கங்களின் இருப்புக்கான அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே போர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போரின் போது படையினரின் உளப்பலத்தை பாதுகாப்பதும், உற்சாகத்தை பேணச் செய்தலும் அரசின் கடமையாகிறது. படையினரின் உயிரிழப்புகள், இராணுவத்தினாரின் உயிரிழப்­புகள், பொருளிழப்புகள், முகாம் இழப்­புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறு­வோரின் தொகை அதிகரித்து வந்த அதே நேரம் படைக்கு புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்­கையில் சிங்கள இளைஞர்கள் பலர் தமது வீடுகளில் பெற்றோரை மிரட்டு­கின்ற வார்த்தைப் பிரயோகமாக ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பது சர்வசாதாரணமாக ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இருக்கின்ற படையி­னரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை அரசு கையா­ள்கிறது. படையில் இணைவோ­ருக்­கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமா­னவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்­படுத்தாமை என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்­மைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpA50in9UI/AAAAAAAAARY/wvzZjLjoAIk/s1600-h/Dead5.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 338px; height: 211px;" src="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpA50in9UI/AAAAAAAAARY/wvzZjLjoAIk/s320/Dead5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5281104875145917762" border="0" /&gt;&lt;/a&gt;இதற்கான உள்ளார்ந்த அனுமதியும், ஆசீர்வாதமும் படைத் தரப்பில் வழங்கப்பட்­டுவருவதை சம்பவங்கள் பல நிரூபித்துள்ளன. வெளியில் செய்தி கசியாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு இராணுவ வட்டாரத்தில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்­கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்ப­ற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேச­மாகவே ஆக்கி வந்தது. வெளியுல­கத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்ப­டுத்தியும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படை­யினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடு­ண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்­கானோர் காணாமல் போனோர்­கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. காணாமல் போவோரின் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்­பாட்டுப் பிரதேசங்களில் படையின­ராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வ­ளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூ­டாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூ­டாகவும் மேற்கொள்ளப்பட்டது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்க­ளுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்பத்திர­மாகவே அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1971 ஏப்ரல் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி.யை அடக்குவதாக கூறிக்கொண்டு சிங்கள இராணுவம் தனது சொந்தத் தேசத்து சிங்கள யுவதிகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். மனம்பேரி எனும் ஜே.வி.பி. இளம் பெண்ணின் கதை மட்டுமே மேற்பூச்சுக்­காக வழக்கு நடாத்தி சம்பந்தப்பட்ட படையின­ருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜே.வி.பி.யை அடக்கவென சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவமும் இந்த காலத்­தில் பாலியல் வல்லுறவினை மேற்­கொண்டது தொடர்பாக பதிவுகள் பெரிதாக வரவில்லை. ஆனால் அன்றைய ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய பலர் இன்றும் அந்தக் கொடு­ர­ங்­களை நினைவு கூர்ந்த வண்ணமுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே இந்திய இராணுவத்தை 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெண்கள் மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்றபோது நாளை இவர்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றொழிக்கப்போகிறார்கள் என்றோ தமது பெண் பிள்ளைகளை பாலியல் வன்முறைக்­குள்­ளாக்கப் போகிறார்கள் என்பதையோ அறிந்திராதிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவ நுழைந்ததுமே இதனை தொடங்கி விட்டனர். 1987இல் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்திலேயே அதிக­மான பாலியல் வல்லுறவுச் சம்ப­வங்கள் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது மேற்கொள்ளப்பட்டதென பல நூல்­க­ளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் புகுந்து தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களின் பாலுறுப்புகளை சிதைத்து பின் கொன்று புதைத்திருந்தனர். பின் அச்சடலங்கள் அப்புதைகுழிகள் தோண்டியெடுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;உளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் Scarred Minds  எனும் நூலில் இது பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று இந்திய இராணுவத்திர் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டபோது அவர்களை நோக்கி -என்னை இப்படி செய்யாதீங்கோ! என்னை சுட்டுக்கொல்லுங்கோ- என கதறியழுத சம்பவமும். திருநெல்வேலியில் ஒரு பெண் ஓடிப்போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற சம்பவங்க­ளையும் அந்நூலில் பதிவாக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர 1968இல் வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஒரு மை லாய் கிராமம் போல, 1989இல் இந்திய இராணுவத்துக்கு ஒரு வல்வை படுகொலையை குறிப்பிடுவது வழக்கம். 1989 ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்­துறையையும், அதனை அண்டிய ஊர்களுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்து ஆயிரக்கணக்­கான வீடுகள் கடைகளை உடைத்தும் எரித்தும் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpCS3PcAaI/AAAAAAAAARw/IYvcHSZ57EM/s1600-h/Manamper.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 170px; height: 260px;" src="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpCS3PcAaI/AAAAAAAAARw/IYvcHSZ57EM/s320/Manamper.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5281106404879106466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpBpnopZbI/AAAAAAAAARo/DUw25X_cJhQ/s1600-h/Krishant.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 202px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpBpnopZbI/AAAAAAAAARo/DUw25X_cJhQ/s320/Krishant.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5281105696315237810" border="0" /&gt;&lt;/a&gt;சேதத்துக்கு உள்ளாக்கிய­துடன், பெண்கள், வயோதிபர், சிறுவர்கள் என 63 பேரை வெட்டியும், சுட்டும் தாக்கியும் படுகொலை செய்ததுடன், 15 திருமணமான பெண்களையும், 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;உலகம் முழுவதும் இது தான்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்­ளாக்குள்ளாக்கலாம் என்று எதிhpத் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்­தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்க­ளுக்கென்று தனியான முகாம்களை அ­மைத்து (Rapd Camps) அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவு­க்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக இனக்கலப்பை செய்துவிட்டதாகவும், அப்பெண்களுக்கு பிறந்தவர்கள் எவரும் இனி பொஸ்னியர்களாக அறிவித்துக் கொள்ள முடியாதென்றும், தான் இனக்கலப்பை செய்துவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டார்கள். அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப்படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னி­யர்களுக்கு அறிவித்தார்­கள். 1992 அளவில் 20ஆயிரத்துக்­கும் மேற்பட்டபெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுற­வுக்கு உள்ளாக்­கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான வல்லுறவு அல்ல. ஒட்டுமொத்த மனித்தத்தின் மீதான களங்கம் (“The war on women in Bosnia was truly the rapd of humanity”2)&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpAZBu1ZnI/AAAAAAAAARQ/DkNZmOMw40E/s1600-h/Dead1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 364px; height: 251px;" src="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpAZBu1ZnI/AAAAAAAAARQ/DkNZmOMw40E/s320/Dead1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5281104311751108210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1990இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளா­னார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்­ளாக்­கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்­கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது 1937இல் ஜப்பான் துருப்புக்களால் சீனாவின் நான்கின் எனும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட வேளை அங்குள்ள 20,000க்கும் மேற்பட்ட சீனப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக உலகப்போhpன் பின்னர் விசாரணை நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ருவாண்டாவில் போhpல் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தாpக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்க­ளும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுக­ளின் மூலம் அப்பெண்யையும், அப்பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தை குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையா­ளத்தை உருக்குலைப்­பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்­குவதும் நோக்கமாக இருந்திருக்கின்றன. இவை எதிரிப்படைத் தலைமைகளால் ஊக்குவிக்கப்பட்டுமிருக்­கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அனுராதபுரத்தில் படையி­ன­­ரை நம்பியே மிகப் பாரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்­றன. எல்லைப்புக் கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்­தப்­பட்டுள்ளனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதி­களாகவும் உள்ளன. பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள் குறித்து சுட்டிக்காட்டப்­பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படை­யினருக்கு விருந்தாக ஆக்கப்படு­வதும் பலருக்­கான பாலியல் போகப்பொரு&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpEDWuMfCI/AAAAAAAAASA/4tqqnM-lbPo/s1600-h/Kones.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 366px; height: 235px;" src="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpEDWuMfCI/AAAAAAAAASA/4tqqnM-lbPo/s320/Kones.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5281108337474960418" border="0" /&gt;&lt;/a&gt;ளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவ­தும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைக­ளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பான் அன்று இந்தோ­னேசிய, பிலிப்­பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலரை தடுத்து வைத்து படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கி­யது. எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்­பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்ப­வங்­களே இலங்கையிலும் நடந்து வருகின்­றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கூட இந்தோ­னேசியாவில் சுகர்னோ அரசாங்கத்­துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்­ளாக்­­கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.&lt;br /&gt;ஸ்ரீ லங்கா அரசின் யுத்த அணுகுமுறைகள் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் நமக்கெல்லாம் தெளிவு­றுத்தியதும் இதே அரச படை தான். சிங்கள இராணுவத்திற்கான சிங்கள இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டை­யாடப்படல், தமிழர் பகுதிகளின் மீதான குண்டுவீச்சுக்கள், அழிப்புக்கள் என்பவற்றின் வெளிப்­பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்­வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் எப்போதோ உள்ளாக்கப்பட்டுவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ லங்கா படையை அவ்வாறு ”சிங்களப் படை”, ”எதிரிப் படை” யென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் படிப்படியாக குறுகிய காலத்தில் அடைந்தது இவ்வாறுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(சிங்களப் படையென்ற சொல் இனவா­தத்தை வெளிப்படுத்துவ­தாக விமர்சிக்கப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் சிங்களவ­ர்களை மட்டுமே கொண்ட படையாக­வும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவ­தாலும் இப்பதம் பொறுத்தமானதே)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இப்படிப்பட்ட சிங்க­ளப் படையினரால் மேற்கொள்ள­ப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமான­ப்படுத்த பயன்படுத்­துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தற்செயலாக கிருஷா­ந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு­ள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்­டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்­பாக அமைந்­ததால்) அது உலக அள­வில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க இயலாமல் சிங்கள அரசு, தாம் போர்க் குற்றங்க­ளுக்கு எதிராக எப்போதும் உறுதியாக இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்­காக கிருஷாந்தி வழக்குக்கு அரசினால் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்­டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சாதகமாக்கியபடி அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது காpசனையை பிரச்சாரப்படுத்தி வருகி­றது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்­பட்டவர்­கள் சமூக அளவிலும் அந்தஸ்து­டைய­­வர்­கள் அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வெளிக் கொணரப்ப­டுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்­பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து அப்போது கருத்துதெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டு­மெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்­பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்­கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்­திலும் பெண்கள் அதிக சித்திரவதைக்குள்­ளாக்­கப்பட்­டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் (1994-2005) என்பது பதிவாகியிருக்கிறது. சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் சந்திரிகா தான் இருந்தார் என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒனறு.&lt;br /&gt;&lt;br /&gt;1996 இல் மாத்திரம் 150 தமிழ் பெண்கள் படையினரின் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்­பட்டதாக சீனப்பத்திரிகையொன்று அறிக்கை வெளியிட்டது. (South China morning Post, 11 January 1997)&lt;br /&gt;&lt;br /&gt;97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையி­னரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வhp பாலியல் வல்லு­றவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வ­ரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து சிதறச்செய்தனர். பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் பின் இறுதியில் கொலை புரிந்து வந்திரு­க்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்­விடுமென்றே சிங்களப் படையினர் நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட இது வரை காலம் போhpன் போது கைது செய்யப்­பட்ட பெண் புலிகள் பலரை பாலி­யல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்­டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்­பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்­படுத்தி பாலுறுப்­புகளில் போத்தல்­களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்­தியதை நிரூபிக்கின்ற புகைப்படங்­கள் எமக்கு கிடைத்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்­தப்பட்டதை தொலைக்காட்சி செய்திக­ளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் எதிர்பார்க்கப்ப­டுவது என்ன? குறிப்பிட்ட சமூக­த்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்­டாத இன்னொரு­வரை அவமான­ப்படுத்த வேண்டு­மென்றால் அவ­ருக்கு கிட்டிய பெண்ணை வல்லுற­வு­க்குள்ளாக்கு­வேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறி­னாலே மற்றவர் ஆத்திரப்­படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொ­ன்றே இந்த நிர்வாணக் காட்சிப்ப­டுத்தலும்.&lt;br /&gt;&lt;br /&gt;”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமி­ருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்­தின் சர்வதேச பிரச்­சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமை­களின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகாரித்திருப்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு இவ்வாறான இம்சை­களின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வி­னை ஏற்கச் செய்கின்ற நடவடிக்­கையாக, போரின் கருவி­யாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்­பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொட­ராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-5011461665561809655?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/5011461665561809655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=5011461665561809655' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/5011461665561809655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/5011461665561809655'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_6015.html' title=''/><author><name>Voice for Voiceless</name><uri>http://www.blogger.com/profile/16807674424690807970</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SUpADZ4mlUI/AAAAAAAAARI/V5xjWwKG3P8/s72-c/rape.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-216792123343145913</id><published>2009-01-29T04:33:00.000-08:00</published><updated>2009-01-29T05:26:24.390-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 204, 0);font-size:130%;" &gt; &lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 204, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;மனம்பேரி:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(255, 204, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு அழகிய போராளியின்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(255, 204, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;25வருட நினைவுகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGrbRbBHBI/AAAAAAAAAe8/ZmOPSYh9hhU/s1600-h/prema3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 151px; height: 355px;" src="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGrbRbBHBI/AAAAAAAAAe8/ZmOPSYh9hhU/s320/prema3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296703121785953298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt; &lt;span style="font-weight: bold;"&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு  உதவிற்று. மேலும் மனம்பேரி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் முதன் முதலில் ஆயுதப் போராட்டத்தை முன்­னெ­டுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணி­யினர். 1971 ஏப்ரல் கிளர்­ச்சி என அழைக்கப்­பட்ட இது அரசாங்கத்தின் கொடுர ஒடுக்குமுறையி­னால் அடக்கப்­பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்­பேரி பற்றி இந்த இருபத்­தைந்து வருட நினை­வில் சில குறிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கொல்லப்பட்டு 25 வருடங்­கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்­பட்டு 25 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்...?&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGuL0-AEJI/AAAAAAAAAfE/PglY9t54lOg/s1600-h/Manamper.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 181px; height: 277px;" src="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGuL0-AEJI/AAAAAAAAAfE/PglY9t54lOg/s320/Manamper.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296706154984902802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்­லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருப­தா­யிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளி­களை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்த­னைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களு­க்கு தண்டணை வழங்கப்பட்ட விசாரணையும் இதுவொன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கதிர்காமத் தாக்குதல்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்­து­ள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்­பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்டதன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முகாமை அமைத்தவுடனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலையாக கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுதல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்ததுதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt; &lt;span style="font-weight: bold;"&gt;அழகு ராணி மனம்பேரி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவள். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜே.வி.பி.க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவள். தகப்பனார் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் கண்காணிப்பாளர். மனம்பேரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு விட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புதுவருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்களால் கடத்தப்பட்டாள்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கடத்தலும் வதையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணியளவில் மனம்போpயின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெறிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?”&lt;br /&gt;மௌனம்&lt;br /&gt;&lt;br /&gt;”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?”&lt;br /&gt;”.........”&lt;br /&gt;”நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?”&lt;br /&gt;இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர். &lt;span style="font-weight: bold;"&gt;மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”சரி... நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும் ”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று...”&lt;br /&gt;”ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க...” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தாள். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைகளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம்போpயை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அறையில் இந்த அட்டுழியங்கள் நிகழ்ந்து கொண்­டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்­ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்­தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;உயிர் பிரிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டாள் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;”தண்ணீர் தண்ணீர்...” என முனுகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். இவரைச் சந்திக்க ”சரிநிகர்” கதிர்காமத்துக்கு சென்ற நேரத்தில் ”மன்னியுங்கள் அந்த கொடுர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.)&lt;br /&gt;&lt;br /&gt;காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசிகளை அழைத்து பிணங்களைப் புதைப்பதற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது :அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் தான் குழுப்பிப் போட்டார்...” (கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று ”உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது.” என்பதைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி  உயிரைப் போக்கும்படி பணித்தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இருவரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொருவன் அனுப்பப்பட்­டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தாள். (இறு­தி­யாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவளது உடல்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம்போpயின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின்னர் கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை சிசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கொலைஞர்களின் முடிவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜான்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடுழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டணை வழங்கப்பட்ட இரு இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்முறையீட்டு வழக்கு 1973 ஒக்டோபரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களில் லெப்டினன்னட் விஜேசூரிய சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;(1996 ஏப்ரல்.4 சரிநிகர்)&lt;br /&gt;(தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ”நிறப்பிரிகை” சஞ்சிகையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-216792123343145913?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/216792123343145913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=216792123343145913' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/216792123343145913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/216792123343145913'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/25.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGrbRbBHBI/AAAAAAAAAe8/ZmOPSYh9hhU/s72-c/prema3.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-7825081671958938844</id><published>2009-01-29T04:16:00.000-08:00</published><updated>2009-01-29T05:32:08.294-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center; color: rgb(255, 204, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மகளிர் சாசனம்:&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கண்டுகொள்ளாத தவறுகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGe-NZWPaI/AAAAAAAAAe0/BOgmQ3oNn-8/s1600-h/10488273.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 274px; height: 407px;" src="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGe-NZWPaI/AAAAAAAAAe0/BOgmQ3oNn-8/s320/10488273.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296689428349468066" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;”மகளிர் சாசனத்தை அமுல் படுத்து!”&lt;/span&gt;&lt;br /&gt;”பெண்களே! யுத்த அடக்கு முறைகளுக்கு எதிராக அணி திரள்வோம்!”&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை இலங்கையில் ”சர்வதேச பெண்கள் தினத்தை நினவு கூருகின்ற பெண்கள் அமைப்புகள் பல இக்கோரிக்கைகளையே முன்னணி கோஷமாக எழுப்ப தீர்மானித்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் ”மகளிர் சாசனம்” பற்றிய விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றை சில பெண்கள் அமைப்புகள் நடத்தி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இன்றைய காலப் பொருத்தம் கருதி மகளிர் சாசனம் பற்றிய நடைமுறை சாத்தியங்கள் குறத்து கலந்துரையாடுவது பொருத்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மகளிர் சாசனத்தின் தோற்றம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1975ம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் வருடத்தை உலகம் பூராவும் நினைவு கூர்ந்த போது 1975 தொடக்கம் 1985ம் அண்டு வரையான பத்தாண்டுகளை பெண்கள் தசாப்பதமாகவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து உலகம் பூராவுமுள்ள பல நாடுகள் பெண்கள் நலனில் ஓரளவு ஈடுபாடு கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கே ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மகளிருக்கெதிரான சகலவிதமான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் உடன்படிக்கையை (CEDAW-Convention on the Elimination of  all  Discrimination  Against  Women) 1979 இல் அறிமுகப்படுத்தியது. ஆனாலும் வெகு சில நாடுகளே இவ்வுடன்படிக்கையில் உடனடியாக கையெழுத்திட முன்வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த CEDAW உடன்படிக்கையானது பெண்களின் உரிமைகளைப் பேணுவதற்கான அடிப்படையான ஒன்றாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு இவ்வுடன்படிக்கை­யில் கைச்சாத்திட்டது. இதனால் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முதன்மை நாடுகளில் ஒன்றாகவே இலங்கையும் கொள்ளப்படுகிறது. இவ்வுடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்ட போதும் அரசாங்கம் பெண்களின் நலனில் அக்கறையில்லாமலேயே செயற்பட்டு வருகின்றது எனும் குற்றச்சாட்டை பெண்கள் அமைப்புகள் முன்வைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை CEDAW உடன்படிக்கையை இலங்கையில் அமுலாக்கும்படியும் இதற்கான ஒரு சுதேச சாசனம் ஒன்றை வரையும் படியும் பெண்கள் அமைப்புகள் கோரின. இதற்கான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்தே 90களின் ஆரம்பத்தில் அரசாங்கம் மகளிர் தொடர்பான உத்தேச சாசனம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை மகளிர் அமைச்சிடம் ஒப்படைத்தது. மகளிர் விவகார அமைச்சு இவ் உத்தேச சாசனத்தை வரைவதற்காக பெண்கள் உரிமைகளில் அக்கறை காட்டும் முக்கிய பெண் பிரமுகர்கள் சிலரைக் கொண்ட குழுவொ­ன்றை அமைத்தது. இக்குழுவினரால் அமைக்கப்பட்ட உத்தேச சாசனமே 1993ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கீகரிக்கப்ப்பட்­டது. இந்த சாசனமானது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பெண்கள் சாசனமாக கொள்ளப்படுகின்ற ஊநுனுயுறுவை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்­பட்டுமுள்ளது. இலங்கையில் பெண்கள் நலன் தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடைய பெரும்பாலான பெண்ணிலைவா­திகளின் கருத்தின்­படி இச்சாசனம் மிகவும் பிரயோசனமா­னது. சிறந்தது. விமர்சனங்கள் திருத்த வேண்டியவைகள் எதுவுமில்லை. ஆனால் நடைமுறைச் சாத்தியம் பற்றியே கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்கிடையில் இச்சாசனம் தொடர்பாக பல விடயங்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்பதை பலர் உணர மறுக்கின்றனர். வெகு சிலரிடமே இச்சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பான விமர்சனங்கள் இருப்பதைக் காண முடிகிறது. பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் குடும்ப அமைப்பு முறையை பாதுகாக்கக் கூடிய பல அம்சங்கள் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன. பெண்கள் மீதான ஒடுக்கு முறையின் பிரதான கருவிகளில் ஒன்றாகவே குடும்ப நிறவனம் அடையாளம் காணப்படுகின்ற போதும் அக்குடும்ப அமைப்பு முறைக்கு தோகக் கூடிய அம்சங்களை இதில் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களுக்கிருக்கின்ற பாலியல் சுதந்திரங்கள் எவற்றையும் பெண்களுக்கும் இருப்பதாக இச்சாசனம் முன்­வைக்கவில்லை. புராதன தாய் வழிச் சமூகத்தை, தனிச் சொத்­துரிமையைப் பேணுவதற்காக உடைத்து தற்போ­தைய தந்தை வழிச் சமூகத்தை நிறுவிய ஆணாதிக்கம் தமது தனிச்சொத்துரிமையை பாதுகாப்பதற்காகவே ”தகாத பாலுறுவு” எனும் தடையை பெண்களுக்கு மட்டுமே விதித்தது. அந்தக் கருத்தியலின் தொடர்ச்சியான இருப்பை இன்னமும் ஆண்கள் அனுபவித்து பேணி வருவதுடன் பெண்கள் அவ்வுரிமையை பயன்படுத்தினால் ”வேசித்தனம்” என அவமானப்­படுத்தி சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே முறைமையை பெண்கள் சாசனம் பேணுகிறதா? ஆண்களுக்கு மட்டுமே இவ்வுரிமை இருப்பதாகக் கொள்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலப்பாடானது அரசாங்கம் பெண்கள் மீதான கருத்தியல் சார்ந்த ஒடுக்குமுறையை பேணுவதாகவே கருதமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பெண்ணியத்தில், ஒருபால் உறவு சுதந்திரம் (Lesbiana Relationaship) என்பது இன்று பெண் விடுதலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பேசப்பட்டு வருகிறது. கருவள கட்டுப்பாட்டை திண்து வருவதில் வெற்றி கண்டு வந்த ஆண்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கும் பெண்ணின் உயிரியல் இயல்புகளை ஆண்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதில் இருந்து விடுபடவும் ஒரு பால் உறவு சுதந்திரம் பெண்ணுக்கு இருக்க வேண்டுமென பேசப்படுகிற அளவுக்கு இன்று தத்துவார்த்த விவாதங்கள் வளர்ச்சியுற்றிருக்கிற போது இலங்கை மகளிர் சாசனத்தில் பாலியல் உரிமைகளுக்கே இடமில்லையென்றாகிவிட்டது. இது பற்றிய சர்ச்சைகளை பல பெண்ணிலைவாதிகள் எழுப்பாமல் இருப்பது தான் ஆச்சரியத்துக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சில குறைகள் இருந்த போதும் பெரும்பாலான உருப்படியான அம்சங்கள் நிறைந்த இந்த சாசனத்தில் அதன் சாத்தியப்பாடு குறித்த பல கேளிகளை எழுப்பச் செய்கின்றன.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாத்தியப்பாடு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது இது ஒரு சட்டமல்ல. அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயமல்ல. இது வெறும் அரச கொள்கை மாத்திரமே. அதாவது அரசானது கொள்கையளவில் மாத்திரமே அதாவது அரசு கொள்கையளவில் மாத்திரமே பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது என கொள்ளலாம். இச்சாசனத்துக்கு எந்த வித உத்தரவாதமுமில்லை. எனவே, இவற்றில் சொல்லப்பட்டவை மீறப்பட்டிருப்பதாக எவருக்கெதிராகவும் வழக்கு தொடர முடியாது. அதாவது ஒரு தனி நபரோ ஒரு நிறுவனமோ ஏன் அரசாங்கமோ கூட பெண்கள் விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதையிட்டு எதுவித சட்ட நடவடிக்கையையும் இச்சாசனத்தைக் காட்டி எடுக்க முடியாது. அது வெறும் அரச கொள்கை மட்டும் தான் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான் 1993ல் பாராளுமன்றத்தில் இக்கொள்கை அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து பெண்கள் அமைப்புகள் பல இச்சாசனத்திற்கு அரசியல் அந்தஸ்து  வழங்கும்படி போராடி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இச்சாசனத்தின் சாத்தியப்பாடு குறித்து கண்காணிப்பதற்கான பெண்கள் தேசியக் குழு (National Committee of  Women) எனும்அரசாங்க நிறுவனம் ஒன்றை அப்போதைய அரசாங்கம் நியமித்தது. இந்தக் குழுவுக்கூடாகவேனும் சாசனம் சட்ட அந்தஸ்து பெறும் வரையில் பெண்கள் உரிமைகளை ஓரளவு பாதுகாக்கலாம் எனப் பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதுவும் கனவாக மட்டுமே காணப்பட்டது. காரணம் 15 பேர் அடங்கிய இந்த தேசியக் கமிட்டியால், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை சட்ட மீறல் நடவடிக்கையாகக் கொண்டு செயற்பட முடியாது. இக்கமிட்டிக்கு முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்து நேரடியாக நடவடிக்கை எடுக்கவோ, சமரச முயற்சிகளில் ஈடுபடவோ, சாட்சியங்களை அழைக்கவோ அதிகாரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகக் கூடிய பட்சம், பாரபட்சம் தொடர்பான முறைப்பாடு­களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரப்பிரிவு­களை வலுப்படுத்தி, அபிவிருத்தி கொள்கைகள், சட்டங்கள், நிர்வாக நடைமுறைகள் என்பன சாசன பிரமாணங்களின்படி கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணிக்கவும் சிபாரிசுகளை செய்யவும் மட்டுமேமுடியும். எனவே கண்காணி­ப்பு, சிபாரிசு, விதந்துரைப்பு, ஆலோசனை அளித்தல் என்பன போன்ற செயற்பாடுகளுக்கப்பால் எதுவித அதிகாரமும் கமிட்டிக்கு இல்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ஒரு பக்கம் சட்ட அந்தஸ்து இல்லாத சாசனம். மறுபுறம் அதிகாரம் இல்லாத கமிட்டி இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு தான் பெண்கள் நலனில் இந்த அரசாங்கம் ஈடுபடப் போகின்றதென்றால் பெண்களின் பாரிய போராட்டத்திற்கான தேவையுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வாய் கிழிய நெஞ்சதிர மார்தட்டிக் கொள்வோம். நாட்டின் ஜனாதிபதி பெண் என்று, பிரதமர் பெண் என்று. பாராளுமன்றத்தில் அதிகப் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்று. அமைச்சரவையில் அதிகப் பெண்கள் இம்முறை இருக்கிறார்கள் என்று...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் பெண்கள் சாசனம் வரையப்பட்டது (ஆண் தலைமையிலான) ஐ.தே.க. ஆட்சியின் போதே. பெண்கள் தேசியக் கமிட்டி அமைக்கப்பட்டதும் (ஆண் தலைமையி­லான) ஐதே.க. ஆட்சியின் போதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அன்று தொடக்கமே இவ்விரண்டையும் வலுவுள்ளதாக்கும்படி பெண்கள் போராடித்தான் வந்தார்கள். பலன் இருக்கவில்லை. சந்திரிகா ஆட்சி தலைமை ஏற்ற போது எல்லாம் தீர்ந்தது என நினைத்தனர் பெண்கள். இன்று ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. சாசனம் வெற்றுக் கொள்கையாகவே உள்ளது. தேசியக் கமிட்டி கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றாக மட்டுமே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இச்சாசனம் தொடர்பாக பெண்கள் எழுப்ப வேண்டிய முக்கிய மான கோரிக்கை என்னவென்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;”அரசே! சாசனத்திற்கு சட்ட அந்தஸ்து கொடு! பெண்கள் தேசிய கமிட்டியை நீக்கி, பெண்கள் ஆணைக்­குழுவை ஸ்தாபி!”&lt;br /&gt;என்பதே!.&lt;br /&gt;&lt;br /&gt;(1996 மார்ச் 07 சரிநிகர்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-7825081671958938844?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/7825081671958938844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=7825081671958938844' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/7825081671958938844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/7825081671958938844'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_1241.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGe-NZWPaI/AAAAAAAAAe0/BOgmQ3oNn-8/s72-c/10488273.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-7667370139974822539</id><published>2009-01-29T03:52:00.000-08:00</published><updated>2009-01-29T10:09:43.603-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;மகளிர் தினமும்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt; மகளிர் பிரதிநிதித்துவமும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGap4GnHpI/AAAAAAAAAes/TTAIJD7L49U/s1600-h/WOMLIBER.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 290px; height: 365px;" src="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGap4GnHpI/AAAAAAAAAes/TTAIJD7L49U/s320/WOMLIBER.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296684680989843090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழமைபோல இம்முறையும் மார்ச் 8ம் திகதியன்று ”சர்வதேச பெண்கள் தினம்” கொண்டாடப்படுகிறது. இம்முறையும் பெண்கள் தினத்துக்கான ஆயத்தங்களை பெண்கள் அமைப்பு கள் மும்முமரமாக ஈடுபட்டுவருகின்றன. அவ்வாறான அமைப்புக ளில் அரச சார்பற்ற அமைப்புகள், கட்சிகள் சார்ந்த அமைப்புகள், இரண்டையும் சாராத சுதந்திர அமைப்புகள் என்பவை முக்கியமா னவை. இவற்றில் கட்சி சார்ந்த பெண்கள் அமைப்புகள் அல்லது கட்சிகளுக்குள் கிளையாக இயங்குகின்ற பெண்கள் அணி என்பவை பெரும்பாலும் இம்முறை சர்வதேச பெண்கள் தின நினைவு கூரலை கைவிட்டுவிட்டனர். காரணம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களின் முன்னிலையில் பெண்களின் பிரச்சினை இரண்டாம் பட்சமானதாக அல்லது தேவையற்ற தாகப் போய் விட்டுள்ளது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பெண்கள் அமைப்புக ளைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் பெண்களின் எழுச்சியையும், பலத்தையும், பெண்களின் கோரிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்கும் இந்நாளை கூடிய பட்சம் பயன்படுத்த விளைவதே இயல்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இங்குள்ள அமைப்புகளுக்கு இது முக்கியமாகப் படவில்லை. அதைவிட தேர்தல் அவர்களுக்கு முக்கியமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்சி சார்ந்த அமைப்புகள் போலவே பெரும்­பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் இம்முறை நேரடி­யாகவோ மறைமுகமாகவோ கட்சிகளுக்கு ஆதரவளித்து இயங்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் பொதுஜன ஐக்கிய முன்னணியை வெல்லச் செய்வதே பெருமளவான அரசசார்பற்ற பெண்கள் அமைப்­புகளின் நோக்கமாக இருப்ப தைக் காண முடிகிறது. இதில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது என்னவென்றால் அவ்வாறான பெண்கள் அமைப்புகள் எவ்விதத்திலும் பெண்களின் கோரிக்கை களை முதன் மைப்பத்திய நிபந்தனைகள் எதுவுமில் லாமல் ஆதரவளிப்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;பொ.ஐ.மு.வே ஐ.தேகவுக்கு சாpயான மாற்று என்றும் ஐ.தேகவோடு ஒப்பிடுகையில் ஜனநாயகம், போர், இனப்பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பவை முன்னரை விட நல்ல நிலையில் அணுகப்படுவதாகவும், ஓரளவு சாத்தியமான அரசியல் தீர்வு முன்மொழியப்பட்டிருப்பதா­கவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் பகிரங்கமாக கூறித் திரிவதைக் காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தாவது இவ்வமைப்புகள் அவதானத்து டன் அணுகுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் 40 வீதத்தினர், 16-35க்கு இடைப்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனும் விதி தேர்தல் ஆணைக்குழுவி னரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விதி மீறப்பட்ட பல பட்டியல்கள் இம்முறை நிராகரிக்கவும் பட்டன. இவ்வாறான ”இளைஞர்” பிரதிநிதித்து வத்தைப் பெற பிரயத்தனம் செய்த ஆணாதிக்க ஆட்சியதிகார கட்டமைப்பு பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து சிறிதும் சட்டை செய்யவே இல்லை. இதில் ஆச்சிரியமும், அனுதாபமும் கொள்ள வேண்டிய விடயமென்னவென்றால் இது குறித்து எந்தவொரு பெண்கள் அமைப்புமே  கவனத்தில் கொள்ளாதது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான பின்னணியை நோக்குவது இங்கு முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;1987-1989 காலப்பகுதியில் நடந்த அரச பயங்கரவாதத்தை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பியினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல ஆயிரக்க ணக்கான இளைஞர்கள் பிரேமதா சவின் படையினரால் கொன்றொழிக்க ப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்ட போது சர்வதேச ரீதியில் பிரேமதாச அரசாங்கம் சாடப்பட்டது, கண்டிக்கப் பட்டது. இதை மூடி மறைப்பதற்காகவும் இளைஞர் பிரச்சினைக ளை தீர்க்க வந்தவராகவும் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை பிரேமதாசவுக்கு இருந்தது. அதன் விளைவாக 1989இல், ”இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று பிரேமதாசவால் உருவாக்கப்பட்டது, அவ் ஆணைக் குழுவில் இருந்த ஐவரில் ஒருவர் இன்றைய நீதித்துறை அமைச்சர் (அன்றைய கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர்.) ஜீ.எல்.பீரிஸ், இன்னொருவர் ஐ.நா.சபையில் பெண்கள்  மீதான வன்முறை பற்றிய அறிக்கையாளராக கடமையாற்றும் ராதிகா குமாரசுவாமி.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாணைக்குழு விசாரணையின் முடிவில் பல பிரேரணைகள் முன்வைக் கப்பட்டன. அப்பிரேரணைகளில் ஒன்று தான் அரசியலில் இளைஞர்களுக்கு 40 வீத பிரதிநிதித்துவம் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளை முழுமையாகப் பார்க்கும் போது அது இளைஞர்களை  கட்டிப்போடுவது எப்படி? இளைஞர்களின் புரட்சிகர குணாம்சங்களை வளரவிடாமல் தடுப்பது எப்படி? என்பது போன்ற இலக்கைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகிறது. மற்றொரு அம்சம், அது ”இளைஞர்” என கருதிக் கொண்டது ஆண்களை மட்டுமே என்பது. இளைஞர்கள் சம்பந்தமாக ஆராயப்பட்ட அவ் ஆணைக்குழு அறிக்கையில் எந்த அத்தியாயமும் ”இளம்” பெண்கள் பற்றி ஆராயப்படாததும் விதிவிலக் காகவே பெண்களை சந்தித்து விசாரித்துள்ளனர் என்பதுவும் முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழுவால் ”இளைஞன்” களுக்கு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விதத்தில் விதிகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமன்றி அவ் ஆணைக்குழுவில் பெண்நிலை­வாதி என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் இருந்தும் இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை யென்றால் அதை சட்டமாக அமுலுக்கு கொண்டு வந்த ஆணாதிக்க சட்ட அமுலாக்க கட்டமைப்பை பற்றி மட்டும் கூறவா வேண்டும்?&lt;br /&gt;”பிரதிநிதித்துவம்” எனும் போது ஜனத்தொகையில் சரிபாதியாக இருக்கின்ற ஆண்களுக்கும், பெண்களு க்கும் சமமான பிரநிதிநிதித்துவம் இருக்கக் கூடிய வகையில் ஒழுங்கமை க்கப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அரசியலமைப்பில் ”சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்' எனும் போலி வாசகம் மாத்திரம் போதுமானதல்ல. இன்னமும் சர்வதேச ரீதியில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் 5 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. என்பதே யதார்த்த நிலை. இந்நிலை யில் குறைவிருத்தியுடைய (குறைவிரு த்திக்குள்ளாக்கப்பட்ட) பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதெனில் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். அப்படியாக விசேட கவனிப்பு செலுத்துவதா­கவிருந்தால் குறைந்த பட்சம் அக்குறிப்பிட்ட காலத்துக்கு வேட்பாளர் பட்டியலில் 50 வீதத்துக்கும் அதிகமான வீதத்தை பெண்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது. ஆனால் இங்கு 3 வீதத்தைக் கூடக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அர்த்தம் வேட்பாளர் பட்டிய லில் பெண்களின் எண்ணிக்கையை கூட்டிவிட்டால் பெண்களின் பிரதிநிதித்துவம் கூடிவிடும் என்பதல்ல. எப்படியோ வாக்காளப் பெண்கள் கூட ஆண்களை நோக்கியே தமது வாக்குக­ளையிடுவார்கள் என்பதும் வேட்பாளப் பெண்களும் தமது வெற்றியின் பின் பெண்களை பிரதிநித்துவப்படுத்தப் போவதில்லை என்பதுவும் உண்மை. ஆனால் இந்த முதலா­ளி­த்துவ பாராளுமன்ற அமைப்புமுறை மாற்றமுறுவது வரையி­லான காலம் வரை பெண்களது அரசியல் ஈடுபாட்டை நிர்ப்பந்திக்க கணிசமான அளவுக்கு இது உதவுமென்று நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் கூட பாராளுமன்ற த்தில் 30 வீத பெண் பிரதிநித்துவ கோரிக்கை நாடு முழுவதும் மிகவும் துடிப்பாக எழுப்பப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்நிலையில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் பெண்களின் பாராளு மன்ற பிரதிந்துவம் குறித்த அசமத்துவ நிலை குறித்து அரச மட்டத்திலேயோ அரசு சாராமட்டத்திலேயோ கேள்வி எழாததன் காரணம் என்ன? ஏன் ஒரு முறையேனும் பெண்கள் அமைப்பி னரால் கூட குரல் எழுப்பப்படவில்லை? 1987-1989இல் நடந்த இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தான் இன்று 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவம் வழங்கப் படக் காரணம் என்றால் பெண்கள் கூட தமது உரிமைகளுக்காக அப்படியொரு தனித்த போராட்டத்தை முன்னெடுத் தால் தான் கவனத்தில் கொள்ளப்ப டுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இக்கேள்விகள் நியாயமான முறை யில் பரிசீலிக்கப்படாவிட்டால் அப்படி யொரு நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(1997- மார்ச்-06,சரிநிகர்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-7667370139974822539?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/7667370139974822539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=7667370139974822539' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/7667370139974822539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/7667370139974822539'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_8652.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGap4GnHpI/AAAAAAAAAes/TTAIJD7L49U/s72-c/WOMLIBER.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-1723616354893458400</id><published>2009-01-29T03:24:00.000-08:00</published><updated>2009-01-29T10:08:13.358-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;தமழீழ ஒறுப்புச் சட்டமும்,&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;பெண்களின் உரிமைகளும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGSdJqXEBI/AAAAAAAAAek/-sYWQH0mtOM/s1600-h/ltte0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 257px; height: 382px;" src="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGSdJqXEBI/AAAAAAAAAek/-sYWQH0mtOM/s320/ltte0.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296675666271866898" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;இன்று தென்னிலங்­கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ''தமிழீழம்”” என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசாக (State) இன்னும் ஆகவில்லை என்பதும் உண்மை. எவ்வாறாயினும் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப் பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளி லிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்­டிருக்கிற சட்டங்களை அலசிப் பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகை யில் ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்”” (Panel  Code of Tamil Ealam) ('தண்டனை' இங்கு ''ஒறுப்பு”' என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று. அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரை­யின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்­கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;''பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர்  வே.பிரபாகரன்” (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)&lt;br /&gt;&lt;br /&gt;''ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்.” &lt;span style="font-weight: bold;"&gt;(அதே நூல்-பக்கம்-31)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்.”&lt;span style="font-weight: bold;"&gt; (அதே நூல்- பக்கம்-35)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிh;வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவ ற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுகளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரிதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியுள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் 'தமிழீழ ஒறுப்புச் சட்டம்”” கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தண்டனை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் ”ஒறுப்பு” எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்ட­னை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;''குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்­கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்கப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்” &lt;span style="font-weight: bold;"&gt;(பார்க்க-PCTE-சரத்து-47)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. ”கடுஞ்சிறையொ­றுப்பு” என்பதன் அh;த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது&lt;span style="font-weight: bold;"&gt;. (பார்க்க-PCTE-சரத்து-45.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ”கடும் உடலுழைப்பு” என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரம­ல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உளரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற்றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்­கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கருக்கலைப்பு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் முக்கியமான ஒன்றாதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. &lt;span style="font-weight: bold;"&gt;உதாரணமாக:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்க­லைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. &lt;span style="font-weight: bold;"&gt;(PCTE-சரத்து-215)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும். (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் ”புறநடை விலக்கு” எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் 'புறநடை விலக்கு” (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணிணதும் 'இசைவு” தேவை என கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் போpல் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்­பும் இன்று ”பாலியல் வல்லுறவு” என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணிடமே விட்டுவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்­தினர் தங்களது போர்க்கால மனிதவள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) - தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மறுமணம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”மறுமணம்” விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ''துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவா;களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். &lt;span style="font-weight: bold;"&gt;(PCTE-சரத்து 273)&lt;/span&gt; எனக் கூறப்பட்டி ருக்கிற போதும் அதன் 'புறநடை” பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள 'காத்திருக்கும் வரையறை” என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பாலியல் வல்லுறவு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;”பாலியல் வல்லுறவு குற்றம்” புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட­னையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (&lt;span style="font-weight: bold;"&gt;PCTE-சரத்து-279-(அ)&lt;/span&gt;) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் 'பாலியல் வல்லுறவு” பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டுள்ளது. &lt;span style="font-weight: bold;"&gt;(PCTE-சரத்து-283-(4)&lt;/span&gt;) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சட்டத்தில் ”பாலியல் வல்லுறவு”, ”பாலியல் வன்முறை” இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,&lt;br /&gt;&lt;br /&gt;''ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் ”பாலியல் வல்லுறவு”' நடைபெற்றதாகக் கொள்ளப்படும்” என்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;''பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது ”பாலியல் வன்முறை”த் தவறாகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து ”பாலியல் வல்லுறவு” மற்றும் பாலியல் வன்முறை” ஆகியன ஆணொருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் 'பாலியல் வல்லுறவு”களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட ”பாலியல் வல்லுறவு” (Rape) மற்றும் ”பாலியல் வன்முறை” (Sexual Violence) என்பதைப் போலவே 'பாலியல் தொந்தரவுகள்” (sexual Disturbance) என்ற ஒன்றை வேறுபடுத்தி பாh;க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடா;பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக ”பாலியல் வல்லுறவு” எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் 'கற்பழிப்பு” எனும் பதம் பயன்படுத்தப்பட்ட­போது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்­லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்க­ப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலை­வாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து ”பாலியல் பலாத்காரம்” மற்றும் ”பாலியல் வன்முறை” ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் ”சரிநிகர்” பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் 'பாலியல் பலாத்காரம்” மற்றும் ”பாலியல் வன்முறை” ஆகிய பதங்களில் ”பாலியலுறவு” என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலை­யில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற ”பாலியல் வல்லுறவு” எனும் பதத்தில் பாலியல் (sexual) + வன்மை (violence) + உறவு (intercource)  ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்ப­தைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைக ளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;இயற்கைக்கு முரணான பாலியல் உறவு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையி லொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (&lt;span style="font-weight: bold;"&gt;PCTE-சரத்து-(286))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 'இயற்கை இயல்புக்கு முரண்” என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகி­றது. இந்நிலையில்  மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதி­தாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்­கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதி­லிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபுரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்க­த்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);font-size:180%;" &gt;&lt;br /&gt;பரத்தமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பரத்தமை” (விபச்சாரம்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரண­மாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலை­யினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்­கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;''காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாரு­டன் உடலுறவு கொள்ளுதல் 'பரத்தமை” தவறாகும். இத்தவறு­க்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையி­லொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்.” &lt;span style="font-weight: bold;"&gt;(PCTE-சரத்து (481),(420))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;''பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?” என வினவுகிறார் பெண்ணிலைவாதி­களில் ஒருவரான சுனிலா அபேசேகர.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் 'விபச்சாரி” அல்லது 'வேசி” என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகை­யான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப்பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ''விபச்சாரன்” அல்லது ''பரத்தன்” போன்ற பதங்க­ளைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்­தும் ஏசப்படலுக்குள்ளாகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்” தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் அசட்டை யாகவே இருந்துள்ளனர் என ஒடுக்கப் படும் பெண்ணி­னம் குற்றம் சுமத்துவதை இலகுவாக மறுதலிக்க முடியாதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள ”பெண்கள்” பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்­களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கி­யமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(1996 - ஏப்ரல் 20 சரிநிகர்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-1723616354893458400?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/1723616354893458400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=1723616354893458400' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/1723616354893458400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/1723616354893458400'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_3012.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGSdJqXEBI/AAAAAAAAAek/-sYWQH0mtOM/s72-c/ltte0.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-8027724581687470793</id><published>2009-01-29T03:00:00.000-08:00</published><updated>2009-01-29T10:01:52.972-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;கிருஷாந்தி:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;பாலியல் வல்லுறவுக்கும்,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;படுகொலைக்கும் பதில்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;சொல்வது&lt;br /&gt; யார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(கிருஷாந்தி சம்பவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ”பெண்கள் தொடர்பூடக கூட்டு” பெண்கள் தொடர்பூகடக் கூட்டு அமைப்பின் வேண்டு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;­கோளுக்கிணங்க எழுதி வெயிடப்பட்ட துண்டுப் பிரசுரம் -பி.கு.-இத் துண்டுப்பிரசுரம் அமைதியான ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்குடன் வெளியிடப் பட்டதென்றும்  பொய்யான தக&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வல்களைக் கொண்டிருப்பதாகவும் கூறி இத்துண்டுப் பிரசுரத்தை  பகிர்வதற்கு விட முடியாது என யூ.டி.எச்.சீ.ஆரைச் சேர்ந்தவர்கள் தடுத்தார்கள். இவர்களுக்கு பின்னர் அரச தொடர்பு சாதனங்களில் நல்ல பதவிகள் கிடைத்தன. அவர்களின் ஒரே நோக்கம் அரசை பாதுகாப்பது என்பதாகவே இருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த என்.ஜீ.ஓ. குழுவினரோ உடனடியாக பீ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தியுற்றதுடன் இந் நபர்களின் பயமுறுத்தலுக்குப் பழியாகி அவர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொண்டனர்.)&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGNz6J3j8I/AAAAAAAAAeM/wqgeMHIvpuQ/s1600-h/Krishant.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 225px; height: 356px;" src="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGNz6J3j8I/AAAAAAAAAeM/wqgeMHIvpuQ/s320/Krishant.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296670559687905218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சில விஷமிகள் இராணுவத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிஷாந்தி மற்றும் அவரது குடும்பத்தவர், அயலவர் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை புலிகளே செய்துள்ளனர். அதற்கான சாட்சிகளும் எம்மிடம் உண்டு””&lt;br /&gt;&lt;br /&gt;இது இம்மாதம் 1ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட மேற்படி சம்பவம் தொடர்பான ஆர்ப்பாட்­டத்தைத் தொடர்ந்து அன்று அரச தொடர்பு சாதனமான ரூபவாஹினி , செய்தியில் வெளியிடப்பட்ட ஒரு தகவல். ஏற்கெனவே முழு உலகமுமே அறிந்த விடயம். இராணுவமே ஒத்துக்கொண்ட விடயம், சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாக அரசாங்க உயரதிகாரிகளே சொன்ன விடயம். அப்படியிருக்க திடீரென்று இப்போது எப்படி பொய்யானது?&lt;br /&gt;&lt;br /&gt;கிரிஷாந்தி (வயது-18) யாழ்ப்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGQc-0wbwI/AAAAAAAAAeU/3UOBTWer96w/s1600-h/Pic2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 369px; height: 246px;" src="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGQc-0wbwI/AAAAAAAAAeU/3UOBTWer96w/s320/Pic2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296673464339427074" border="0" /&gt;&lt;/a&gt;பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி. க.பொ.த-சா.த பரிட்சையில் ஏழு டி, ஒரு சி பெறுபேற்றை பெற்ற மிக திறமை­யான மாணவி என கணிக்கப்பட்டவர். 12 வருடங்களுக்கு முன்னர் தனது ஆறாவது வயதிலேயே கிரிஷாந்தி தனது தகப்பனாரை இழந்து விட்டிருந்தார். கிரிஷாந்தியின் தகப்பனார் திரு.இ.குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம லிகிதராக சேவையாற்றியவர். கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த செப்டம்பர் 7ம் திகதியன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் கைத்தடியைச் சேர்ந்த கிரிஷாந்தி குமாரசுவாமி க.பொ.த உ.த இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு முற்பகல் 10.30 மணியளவில் வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதை கிரிஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது-59) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் துறையில் பட்டப் படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். இதை விட கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வருட ஆசிhpய பணியை ஆற்றி எதிர்வரும் யூலை 24ல் ஓய்வு பெற வேண்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாரு­க்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிரிஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது-35, தென்மராட்சி ப.நோ.கூ.சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது டியுசன் போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன்  (வயது-16, யாழ்.சென் ஜோன் கல்லூரி க.பொ.த உ.த முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர். கைதடி இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம்  கிரிஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சியளித்தி­ருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்துள்ளனர். தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிரிஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா­கியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்­தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் இராணுவத்தினர் அம்மூவரையும் பிடித்து வதை­த்து கொன்று விட்டனர். அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும் (Military  Police), ஒன்பது இராணு­வத்தினருமாக பதினொரு பேர் கிரிஷாந்தியை தொடர்ச்சி­யாக பாலியல் வல்லுறவு செய்தனர். இவர்களில் சிலர் சாட்சிகளாக இருந்ததினாலேயே அவர்களுக்கும் 'அனுபவி­க்க' அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்து விட்டுள்ளனர். இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;போனவர்கள் வீடு திரும்பாத நிலையில் ஏனையோர் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை. இந்த நிலையிலேயே கிரிஷாந்தியின் குடும்பத்தில் எஞ்சியிருந்த கிரிஷாந்தியின் சகோதரி பிரஷாந்தி ஜனாதிபதிக்கும் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி தனக்கு நீதி வழங்குமாறு கேட்டார். இது தொடர்பாக ஜோசப் பரராஜசிங்கம் செப்டம்பர் 17ம் திகதியன்று பாராளுமன்­றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக பல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அனால் அன்று அவர் கேள்வி எழுப்பிய போது பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்தவத்த அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் ரிச்சட் பத்திரன அக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் எவ்வித பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை. இராணுவத்தரப்பிலிருந்து பொறுப்பான பதிலும் கிடைக்­கவில்லை. இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் யாழ்ப்பாணத்தில் அமுலிலிருக்கும் விசேட பத்திரிகைத் தணிக்கையும் தடையாக இருந்து வந்தது. இறுதியில் நால்வரினதும் உடல்களையும் புதைத்­ததைக் கண்ட 13 வயது சிறுவனொருவனே விபரத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ஒன்றரை மாதங்களின் பின் 4 சடலங்களும் செம்மணி மயானத்திலிருந்து மீட்கப்பட்டன. கொழும்பிலுள்ள கிரிஷாந்தியின் குடும்பத்தவர்கள் பிரேதங்களை கொழும்புக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்ய தீர்மானித்த போது இராணுவம் மறுத்தது. மாறாக ஐந்து இலவச விமான டிக்கற்றுகளை தருவதாவும் யாழ்ப்பாணத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யும்படியும் வற்புறுத்தினர். ஆனால் இறுதியில் குமார் பொன்னம்பலம், கிரிஷாந்தி வீட்டாரின் குடும்ப சட்டத்தரணி டீ.பூபாலன் ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரேதங்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பிரேதங்களை கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் உத்திரவிட்டிருப்பதைக் காரணம் காட்டி உறவின­ர்களிடம் அவற்றைக் கையளிக்க பொலிஸார் மறுத்தனர். பின்னர் மீண்டும் சட்டத்தரணிகள் இவ்விடயத்தில் தலையி­ட்டதன் பின்னரே ஒக்டோபர் 25ம் திகதியன்று பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் இரு மணித்தியாலங்களில் இறுதிக்கிரியைகள் செய்து முடிக்க வேண்டுமென்ற பொலிஸ் நிபந்தனைக்கிணங்க சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ராசம்மா குமாரசுவாமியின் சகோதரன் திரு நவரட்னத்தின் கருத்தின்படி இறந்த தமது சகோதரியினது அவரது மகளினதும் 2 லட்சத்துக்குகிட்டிய பெருமதியுள்ள ஆபரணங்கள் கூட சூறையாடப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவமானது பல சம்பவங்களில் ஒன்று மாத்திரமே அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தினம் தினம் இவ்வகை சம்பவங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமே உள்ளனர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGQ2nazLaI/AAAAAAAAAec/poVxZSOKksQ/s1600-h/prison-n.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 337px; height: 332px;" src="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGQ2nazLaI/AAAAAAAAAec/poVxZSOKksQ/s320/prison-n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296673904733138338" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த செப்டம்பர் 27ம் திகதியன்று வாழைச்சேனை­யில் வைத்து இராணுவத்தினர் பலர் சேர்ந்து ஒரு தமிழ் கடையொன்றில் அட்டகாசங்களைப் புரிந்த பின்னர் கடைக்­காரரையும் தாக்கியதன் பின்னர் அவரும் பிள்ளைகளும் ஓடித் தப்பி விடவே இராணுவத்தினரிடம் சிக்குண்ட அவரது மனைவியை இராணுவத்தினர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாக  இராணுவ சந்தேக நப­ர்­களை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களுக்கு முன் கோண்டாவில் பகுதியில் ராஜனி வேலாயுதப்பிள்ளை (வயது-22) எனும் ஒரு ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபின் கொல்லப்பட்ட நிலையில் மலசலகூடமொன்றில் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பாக ஆறு இராணுவத்தினரை சந்தேக­த்தின் பேரில் தடுத்து வைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அது போலவே ஏற்கெனவே திருமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது 24 பேர் கொல்லப்பட்ட அதே நேரம் 16 வயது யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அது தொடர்பாகவும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவிததிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகள் அமைப்புகளின் விபரங்களின்படி தற்போது யாழ் குடா நாட்டில் மட்டும் 300 பேருக்கும் மேற்பட்­டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் இதில்  இந்நிலையில் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தென்னிலங்கை­யில் இராணுவத்தினரின் கட்டற்ற செயற்பாடுகளின் காரண­மாக பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி வழங்கப்படவே­யில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தினர் கடந்த 1987-1989 காலப்பகுதியில் மேற்கொண்ட கொலைகள் பற்றி விசாரணை செய்வதாக கூறி ஆட்சியிலமர்ந்த அரசாங்கம் இது வரை நட்டஈடு வழங்கு­வதை மாத்திரமே தமது வேலைத் திட்டமாக அமைத்து வருகின்றது. அது கூட மிக மிக சொற்பமானவர்களுக்கே என்பது தெரிந்ததே. ஆனால் பதவியிலமர்ந்ததிலிருந்து இது வரை இராணுவத்தின் அட்டுழியங்கள் குறுகிய காலத்தில் இது வரையில்லாத அளவு அதிகரித்து வருவது எதனைக் குறிக்கிறது? இது வரை அப்படி எந்த இராணுவத்தினருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவி­ல்லை. வெறுமனே வழக்கு, விசாரணை, என்று இழுத்தடிக்கப்­பட்ட வண்ணமேயுள்­ளது. மைலந்தனை, கொக்கட்டிச்­சோலை தொடக்கம்  சென்ற வருட பொல்கொட ஏரி சடலங்­கள், புல்லர்ஸ் வீதி மர்மங்கள் வரை இது தான் நிலைமை. இந்நிலைமை இராவுத்தினரின் மிலேச்ச நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதாயும் அங்கீகரிப்பதாயுமே அமைய முடியும். ”இலங்கை இராணுவம் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்­டுடன் வளர்ச்சி பெற்றுள்ளது” என சில வாரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 47வது ஆண்டு பூர்த்திவிழா கொண்டாடப்­பட்ட பேது இராணுவத் தளபதி ரொகான் தலுவத்தை தெரிவித்திருந்த விடயம் மிகவும் நகைக்கச் செய்யும் விடயமாகவே கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே தமிழ் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இன அழிப்பு, சொத்தழிப்பு,  கலாச்சார அழிப்பு, வள அழிப்பு, உள அழிப்பு, சூறையாடல் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உட்பட இத்தகைய சம்பங்கள் இந்த யுத்தம் யாரை மீட்பதற்கானது எனக் கேள்வி எழுப்பாமல் இருக்க இயலவில்லை. நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் அரசியலமைப்பின் படி அவர் நாட்டின் முப்படைகளின் தலைவரும் கூட. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி ஆகக்குறைந்தது எந்த வித சலசலப்பையும் காட்டாத ஜனாதிபதியின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? ஜனாதிபதி தொடர்ந்து சிங்கள மக்களின் ஜனாதிபதியாக மட்டுஆம இருப்பாராயின் இடம்கொடுப்பாராகின் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவதை அவர் ஊக்குவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;(1996 டிசம்பர்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-8027724581687470793?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/8027724581687470793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=8027724581687470793' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/8027724581687470793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/8027724581687470793'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_3713.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGNz6J3j8I/AAAAAAAAAeM/wqgeMHIvpuQ/s72-c/Krishant.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-6562740240342358474</id><published>2009-01-29T02:48:00.000-08:00</published><updated>2009-01-29T09:55:40.405-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;விவியன்:&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;&lt;br /&gt;ஒரு பரட்சிகாரியின் மரணம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGKU3NHAHI/AAAAAAAAAeE/QKS3E5lzXAE/s1600-h/VIVIEN.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 251px; height: 393px;" src="http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGKU3NHAHI/AAAAAAAAAeE/QKS3E5lzXAE/s320/VIVIEN.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296666727785365618" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒக்ரோ­பர் 3ம் திகதியன்று விவி­யன் குணவர்தன எம்மை விட்டு மறைந்து விட்டார். சகல பத்திரிகை­களும் ”புரட்சிக்காரி” விவிய­னின் இழப்புக் குறித்துச் செய்திகள் வெளியிட்­டிருந்தன. கடந்த செப்­டெம்பர் மாதம் 18ம் திகதி தான் விவியன் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடி­யிருந்தார். அவரது சேவையை வாழ்த்தி பல அமைப்புக்கள் பாராட்டுக் கூட்டங்களை நடாத்தியிருந்தன. எண்ணி 15வது நாளில் திடீரென சுகவீனமுற்ற அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட ஒரு நாளிலேயே எல்லோ ரையும் விட்டுப் பிரிந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் சரிநிகர் ஆசிரியர் பீட கூட்டத்தின் போது விவியனின் 80வது வயது பிறந்த நாளையொட்டி அவரிடம் ஒரு நேர்காணல் செய்வது தொடர்பா­கக் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் அப்பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்­டிருந்த போதே அவரது பிரிவு பற்றிய செய்தி என்னை எட்டியது. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நிலையில் குற்றவுணர்வும் சூழ்ந்துகொண்டது என்னை.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணலைச் செய்ய முடியவி­ல்லை என்பதற்காக மட்டுமல்ல. சென்ற வருடம் யூன் மாதம் எனது தொடர் கட்டுரைக்காக விவியனின் வீட்டுக்குச் சென்று உரையா­டியிருந்தேன். அப்போ­தும் அவரது உடல் நிலை சிறப்பாக இருக்காவிட்டாலும் உற்சாகத் துடன் உரையாடினார். கடந்த காலங்களில் அவரது சேவை பற்றி நான் தெரிந்து வைத்தி­ருந்ததை விட அவருடன் உரையாடி யபோது கிடைத்த தகவல்­கள் என்னையும் உற்சாகப்படுத்தி­யிருந்தன. நான் அவரிடம் ”உங்களைப் பற்றி நூல் ஒன்றை எழுத அனுமதிப்­பீர்களா, நீங்கள் அதற்கு ஒத்துழைப்­பீர்களா?” எனக் கேட்டபோது அவர் ”நிச்சயமாக நான் ஒத்துழைக்கிறேன். குமாரி ஜெயவர்தனவும் என்னைப் பற்றிய ஒரு நூலை எழுதுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஏன் நீங்கள் கொல்வின் பற்றி தமிழில் சரியான நூலை எழுத முயலக் கூடாது?” என என்னிடம் கேட்டார். அவர் பற்றிய நூலை அவர் இருக்கும் போதே செய்ய முடியாமல் போனது ஒரு வகையில் குற்றவு ணர்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும் விவியன் பற்றி விவியனின் ஒத்துழைப்புடன் 'மலல்கொட பந்துதிலக்க' என்பவர் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார் என்று இரு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. எனினும் இந்நூல் அவர் இறந்த பின் தான் அச்சு செய்து பூர்த்தியாக்கப்­பட்டது. விவியனுக்கு அந் நூலைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விவியனின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருந்தொகையான செஞ்சட்டையணிந்த கட்சித் தொண்ட­ர்களும், பொது மக்களதும் தொகையே விவியனின் சேவைக்கு சாட்சி சொல்லும். முக்கியமாக விவியனிடம் இருந்த ஒரு போராளிக்குhpய நேர்மை­யும் துணிச்சலும் அவரது புகழுக்குக் காரணமாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;விவியன் 1918.09.16ம் திகதியன்று பிறந்தார். ஆங்கிலேய விசுவாசமிக்க உயர் கொவிகம சாதியில் செல்வாக்கு படைத்த பொரளுகொட பரம்பரையில் பிறந்தபோதும் உயர் மத்திய தர வர்க்கத்தவர் பயிலக் கூடிய கொழும்பு மியுசியஸ் கல்லூரியல் பயின்ற காலத்திலேயே பிரித்தானிய ஏகாதிபத்­தியத்தை எதிர்த்து ”சூரியமல்” இயக்கத்துடன் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். ஆங்கிலேயர்களால் வருடாவருடம் மேற்கொ ள்ளப்பட்டு வந்த (நவம்பர் 5ம் திகதி) ”பொப்பிமல்” தினத்தின் போதான 5 நிமிட மௌன­த்தினைப் பாடசாலைக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் செய்து குழப்புவார்.&lt;br /&gt;&lt;br /&gt;லங்கா சம சமாஜக் கட்சியில் அன்றைய நாட்களின் தலைவர்களான பிலிப் குணவர்தன, ரொபட் குணவர்தன ஆகியோர் விவியனின் மாமனார்கள் (தாயின் சகோதரர்கள்) இவர்கள் இருவரும் விவியனுக்கு மாக்சீய அரசியல் உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குத் தொpயாமல் சூரியமல் இயக்க த்தில் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். பின்னர் இது தந்தைக்குத் தெரிய வந்தபோது விவியன் வீட்டில் அடைக்கப்பட்டார். அதையும் மீறி களவாக அரசியல் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ல.ச.ச.கட்சியோடு சேர்ந்து வேலை செய்ய தந்தையி­டம் அனுமதி கிடைக்­காத நிலையில், இரகசியமாக ஆரம்ப­த்தில் வேலை செய்யத் தொடங்கி, பின்னர் கட்சியில் முழு நேர ஊழியராகப் பணிபுரிந்தார். ல.ச.ச.க­வின் செயலாளராக  அன்று தீவிரமாக பணிபுரிந்து வந்த லெஸ்லி குணவர்தன­வுடன் காதல் கொண்டு குடும்பத்தைத் துறக்க வேண்டிய நிலைக்கும் உள்ளா­னார்.&lt;br /&gt;&lt;br /&gt;லெஸ்லி-விவியன் தொடர்பை இல்லாமல் செய்வதற்­காக விவியனை வீட்டில் அடைத்து வைத்ததால் லெஸ்லி, விவியனின் தந்தை குணத்தி­ல­க்கவுக்கு எதிராக ஆட்கொ­ணர்வு மனு வழக்கொன்றை தொடர்ந்திரு­ந்தார். அன்று லெஸ்லிக்கு ஆதரவாக வழக்காடியவர், பின்னாளில் ஜனாதி­பதியான ஜே.ஆர்.ஜெயவர்தனாவே. இவ்வழக்கின் போது நீதிமன்றத்தில் வைத்து விவியனின் தந்தை ”எனது மகள் காதலிக்கும் நபர் தேச விரோதக் கட்சியின் உறுப்பினர். ல.ச.ச.க. ஒரு தேச விரோதக் கட்சி எனப் பேசப்படும் கட்சியாகும். அப்படிப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்தால் எனது மகளும் தேச விரோத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு விவியன் அளித்த பதிலோ ”அவர் கூறும் தேச விரோதக் கட்சியில் இரகசியமாக நானும் அங்கம் வகித்து வருகிறேன். எனவே ஒரு தேச விரோதக் கட்சியொன்றின் உறுப்பினருக்குக் கிடைக்கக் கூடிய அதே தண்டனையை நானும் அனுபவிக்க வேண்டிய ஒன்றே!” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழக்கின் இறுதியில் விவியனின் தந்தையை நீதிமன்றம் கண்டித்ததுடன். லெஸ்லி-விவியனின் இணைவை அங்கீகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விவியன்-தந்தை உறவு அத்துடன் முறிவ டைந்தது. விவியனின் தனிப்பட்ட வாழ்க்கையும், தனிப்பட்ட இயல்பும் புரட்சிகரமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;1950இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக­வும், 1956 தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 1964ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1965ம் ஆண்டு வரையான காலத்துக்குள் உள்ளூரா­ட்சி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சராகப் பதவி வகித்தார். இலங்கை­யின் அரசிய­லில் முதற் பெண் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் விவியனே. 1970ம் ஆண்டு தேர்தலிலும் வென்றார். 1977ம் ஆண்டு தேர்தலில் இரத்மலான தொகுதியில் போட்டி யிட்ட போதும் லலித் அத்துலத் முதலியினால் தோற்கடிக்கப்­பட்டார். அதன் பின்னர் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியி­டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1956ம் ஆண்டு மொழிப்பிரச்சினை­யின் போது தமிழ் மொழிக்கும், சிங்களத்துக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனப் போராடிய போது சிங்கள இனவாதிகளால் 'யாழ்தேவி', எனப் பட்டப்பெயர் சூட்டப்பட் டார். அதுபோல '1953ம் ஆண்டு ஹர்த்தால்' போராட்டத்தின் போது தீவிரமாக மக்களை அணிதிரட்டிப் போராடினார். அமெரிக்க தூதராலயத்தின்முன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய போது விவியன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்ப ட்டார். இறுதி வரையும் ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடி வந்தவர் விவியன்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மீதும், கட்சித் தொண்டர்கள் மீதும் ஐ.தே.க.வினரால் மேற்கொள்­ளப்பட்ட சண்டித்தனங்களை விவியன் தலைமை கொடுத்து முறியடித்த சம்பவங்கள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ல.ச.ச.கவின் அனுசரணையு­டன் வெளியிடப்­பட்ட 'ஜனதின' பத்திரிகையிலும் தொடர்ந்து சில வருடங்கள் பணியாற்றியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய காலனித்துவத்துக்கு எதிராகவும், பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நவகாலனித்துவத்­திற்கெதிராகவும் போராடி வந்த விவியன், நிறைவேற்று ஜனாதிபதி முறை, திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றிற்கெதிராகவும் பிற்காலங்களில் குரலெழுப்பினார். பெண்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளைக் கண்டித்து நடத்தப்­படும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங் களில் விவியனைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேமதாச ஆட்சிக் காலத்தில் அறுபதாயிர த்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ”அன்னையர் முன்னணி”யுடன் இணைந்து பல கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் விவியனின் காரசார­மான உரையைக் கேட்பதற்காகவே பலர் கூடுவர். வயதானாலும் குரலும், அதன் பின்னால் இருக்கும் கருத்தும் உறுதி குலையாது இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களனைவரும் விவியன் ஆற்றிய சேவையை இலகுவில் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் எவையுமே பெண்களின் உரிமைக்காக காத்திர­மான பங்களிப்பை இதுவரை செய்யாத­தானது, பெண்களின் பங்களிப்பி லும் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மரபு இடதுசாரி அமைப்புகளின் கடைசிக்­காலமான இந்தக் கட்டத்தில் இறுதி­யான புரட்சிக்காரியை இழந்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லரின் சிறையில் தூக்குக்கு அனுப்பப் பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஜலியஸ் பூஷிக் சொன்னதைப் போல ”எமது போராட்டத்தின் சகல நிகழ்வுகளும் பதிவு பெறுவது அவசியம். போராட்டத்தை முன்னெடுக் கும் அடுத்த சந்ததிக்கு அது அவசிய மானது.” என்பது போல விவியனின் வாழ்க்கையும் பதிவு பெறல் அவசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;(சரிநிகர்-96.ஒக்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-6562740240342358474?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/6562740240342358474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=6562740240342358474' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/6562740240342358474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/6562740240342358474'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_4700.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGKU3NHAHI/AAAAAAAAAeE/QKS3E5lzXAE/s72-c/VIVIEN.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-8305579664194936327</id><published>2009-01-29T02:06:00.000-08:00</published><updated>2009-01-29T09:51:18.947-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்:&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;&lt;br /&gt;சில கேள்விகள்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGEgtQjiNI/AAAAAAAAAd0/Trr6xE-zdi0/s1600-h/fallen.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 292px; height: 373px;" src="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGEgtQjiNI/AAAAAAAAAd0/Trr6xE-zdi0/s320/fallen.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296660334204127442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''பொ.ஐ.மு. ஆட்சியலமர்வதற்கு பெண்களின் பங்களிப்பு காத்திரமா­னது. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இரு முக்கிய பதவிக­ளையும் பெண்களே வகிக்கின்றார்கள். உலகி­லேயே இலங்கையில் மட்டுமே இப்படியான ஒரு நிலையுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 50 வருடங்களாகப் போகின்ற இந்தத் தருணத்தில் பாராளுமன்றத்தில் பெண்க­­ளின் பிரதிநிதித்துவம் 5.3 வீதமாகவே உள்ளது. எமது நாட்டின் பெண்களுக்கு உள்ள குடும்பப் பொறுப்­புக்கள் காரணமாக இது அதிகரிக்காம­லிருந்தாலும் குறைந்த பட்சம் 25 வீதமாவது பாராளுமன்றத்தில் பிரதிநி­தித்துவம் வகிக்கமுடியுமாயிருந்தால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 10ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நடந்த வரவு செலவுத்திட்ட - மகளிர் விவகாரத் துறைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான - விவாதத்தின் போது மகளிர் விவகார அமைச்சர் ஹேமா ரத்னாயக்க ஆற்றிய உரையிலேயே மேற்படி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பத்திரிகைகளின் செய்தியிடல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;இவ்வுரையானது அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியானது. சிங்களப் பத்ரிகைகளில், திவய்ன, லங்காதீப ஆகியவற்றில் வெளியான பாராளுமன்ற உரைகளில் ஏனைய ஆண் உறுப்பினர்களின் உரைகள் வெளியாகின. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் கூட வேறு விடயங்கள் குறித்த அம்சங்கள் வெளியாகினவே ஒழிய இவ்விடயம் குறித்தவை வெளியாகியிருக்கவில்லை. தினமின (அரச கட்டுப்பாட்டுக்குள்ளிருப்பது) மாத்திரம் இதனைப் பிரசுரித்திருந்தது. அதற்குக் காரணம் சொல்லப்பட்ட விடயம் பற்றியதற்காக அல்ல. சொல்லிய நபர் ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர் என்பதற்காகவே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பத்திரிகைகளிலோ இது குறித்த உரை எங்கும் வெளியாகியிருக்கவில்லை. அதற்கடுத்த நாள் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கத்தில் இது குறித்த செய்தி வெளியாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாதிக்க செய்தி நிறுவனங்கள் அனைத்துமே இச்செய்தியின் முக்கியத்துவத்தை உணராததில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்திதான் என்ற போதும் கூறப்பட்ட விடயம் குறித்து அமைச்சரின் அதே வாதத்­தை அப்படியே ஏற்றுக்கொள்வது இன்னொரு பிரச்சினையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் இந்த 25 வீதம் குறித்தது தான். இந்தக் கோhpக்கையானது ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பைப் பொறுத்தளவில் எதிர்ப்புகளின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சனத்தொகையில் சாpபாதி (அதைவிடவும் கூட) பெண்கள் உள்ள நிலையில் அதே அளவு வீதாசாரத்தைக் கூடக் கோரப்படாததானது ஆணாதிக்கத்துக்கு வெற்றியேயன்றி வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;என்ற போதும் 25 வீதக்கோரிக்கை குறித்து கூட, இது வரை அரச தரப்பிலிருந்து சம்மதம் வரவில்லை. அது குறித்து பரிசீலிப்பதாகவே கூறியிருக்கிறது. அக்கோரிக்கையை அதிகாரத்தரப்பு ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் ஆச்சரியப்படுவ­தற்கில்லை என்பதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோhpக்கை அதிகாரத் தரப்பிலிருந்து, அதுவும் மகளிர் விவகார அமைச்சரிடமிருந்து வெளிவந்துள்ளமை எல்லோரையும் கூர்ந்து கவனிக்கச் செய்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இக் கோரிக்கையின் அற்பத்தனத்தை அடையாளம் காண எத்தனை பேரின் ஆதிக்க கருத்தியல் இடம் கொடுக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் ஹேமா, சரிபாதி ஜனத்தொகையைக் கொண்ட பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை மட்­டுமே கோருவது மட்டுமல்லாமல் குடும்ப அமைப்புக்குள் பெண்­க­ளுக்குள்ள மரபான பொறுப்புக்களை மறைமுகமாக நியாயப்படுத்துவதையும் கண்டு கொள்ளாமலிருக்க இயலு­மா? அவர் சார்ந்த அதிகாரத்துவம் மிக்க கட்சியினதும், அரசாங்கத்தினதும், அரசினதும் கூடிய பட்ச எல்லை இவ்வளவாகத்தான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அற்பக் கோரிக்கை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அண்மையில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் பெண்க­ளின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ”i&lt;span style="font-weight: bold;"&gt;n creasing political  participation of women through a reservation system&lt;/span&gt;” எனும் வேலைத்திட்டமொன்றை உருவாக்கி­யிருக்கிறார்கள். அதன்படி அரசாங்க மட்டங்களில், பெண்க­ளுக்கு மூன்றில் ஒரு வீத பிரதிதித்துவக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். 15 வருடங்களுக்கு இது செல்லு படியாக வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இக்கோhpக்கையை முன்கொண்டு செல்ல அணிதிரண்டு வருவதாகத் தொpகிறது. WERC யின் தலைவி செல்வி திருச்சந்திரன் இது குறித்து எமக்கு தெரிவிக்கையில், ”இது குறித்து அரசியற் கட்சிகளு­டன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியாக லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, த.வி.கூட்டணி, ஐ.தே.க. என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கி­ன்றோம். அவர்களைப் பொறுத்தளவில் இக்கோரிக்கையில் எதுவித ஆட்சேபமுமில்லை.” என்றார். அற்பக் கோரிக்கை­க்கு ஆட்சேபமென்ன இருக்க முடியும். (பிரதான கட்சிகளும் கூட இக்கோரிக்கையை அங்கீகரித்துள்ளன என்றால் அதன் அர்த்தம் வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ள இதனை உச்ச அளவில் பயன்படுத்தலாம் என்ற கற்பனையினா­லேயொழிய, இக்கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து விட்டார்கள் என்றோ தமது ஆணாதிக்க நிலைப்பாட்­டிலிருந்து மீண்டு விட்டார்கள் என்பதாலோ அல்ல) என்ற போதும் இக்கோரிக்கையும் கூட போதுமான கோரிக்கையாக இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கோரிக்கை இலங்கையில் எழுவதற்கு பின்புலமாக இருந்தது, இந்தியாவிலும் மூன்றில் ஒரு வீத பெண் பிரதிநிதித்துவ கோரிக்கை எழுப்பப்பட்டு வருவதே. இக்கோரிக்கையின் பரப்பு, அது தரப்போகும் நீண்டகால பிரதிபலன், அதன் போதுமான தன்மை குறித்து எந்த வித பரிசீலனையும் இன்றி அதே கோரிக்கையை இலங்கையிலும் பிரதிபண்ணுவதாகவே தெரிகிறது. சரியான புரட்சிகர மாற்று சக்தியேதுமில்லாத நிலையில் பெண்களின் கோரிக்கை­யினை முன்கொண்டு செல்ல பெண்களுக்கென்று கட்சியொன்று இல்லாததன் குறை இங்கு தான் தெரிகிறது&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGH2_3WcfI/AAAAAAAAAd8/GlkDmfLbxPk/s1600-h/MARCH8.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 248px; height: 338px;" src="http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGH2_3WcfI/AAAAAAAAAd8/GlkDmfLbxPk/s320/MARCH8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296664015690691058" border="0" /&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;”25வீதம்”, ”மூன்றில் ஒரு வீதம்” போன்ற கோரிக்கைகள் முன்வைப்பதன் மூலம் உண்மையில் முன் வைக்கப்பட வேண்டிய கோரிக்கையை அற்பத்தனமான கோரிக்கை­யாக்கி, சிறு தேவையாக குறுக்கி விடும் ஒன்றாகவே இதனைக் காண முடிகிறது. இது வரை அரசு சார்பற்ற நிறுவனங்கள் சகல துறைகளிலும் செய்து வருவதும் இதனைத் தான். பிரதான அரசியல் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்ற போதெல்லாம் அதற்கு வலிந்து போய் தலையிட்டு, தலைமைகொடுத்து சிறு கோரிக்கையாக குறுக்கி விடும் போக்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கே உரியன. அப்படியான ஒரு போக்காகவே இதனையும் காண முடியும். இவ்வமைப்புகள் அவ்வாறான கோரிக்கைகளில் கூட உறுதியாக தொடர்ச்சியாக நிற்கும் என்றோ, மிகவும் துடிப்புடன் போராடும் என்றோ நம்பிக்கை வைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வமைப்பு ”மூன்றில் ஒரு வீத கோhpக்கை”யை எழுப்­பியது ஒரு புறமிருக்க அக்கோரிக்கை 15 வருடங்களுக்கு செல்லுபடியாகும்படி செய்யவேண்டும் என்று கூறியிருப்ப­தானது, மேலும் அதன் தூரநோக்கற்ற, துரோகத்தனமான கோரிக்கையையே வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஏன் தேவை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;-சனத்தொகையில் சாpபாதியையுடைய பெண்களுக்கு அதே அளவிலல்லவா பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயகம் கூட விகிதாசாரத்தை மறுக்­காதே. இது சமூகத்திலுள்ள சிறுபான்மையோர் சம்பந்தமான பிரச்சனையல்லவே, சம விகிதாசாரத்தையுடையவர்கள் அதிகார­மற்றிருப்பது, மறறும் இன்னொரு தரப்பால் அடக்கு­முறைக்குள்ளாகிக் கொண்டிருப்பது  பற்றிய  பிரச்சினை. சிறுபான்மையினர் விடயத்தில் கூட கொள்கையளவில் இவ்விகிதாசாரத்தை ஏற்றுக் கொள்ள முடிந்த அதிகாரத் தரப்புக்கு பெண்கள் விடயத்தில் ஏன் இந்த விகிதாசா­ரத்தைக் கடைப்பிடிக்க முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;-தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் 35 வீதம் இளைஞர்களை (16க்கும் 35க்கும் இடையில்) உட்படுத்துவது குறித்த விதி பிரேமதாச காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இளைஞர்கள் சம்பந்தமான ஜனாதி­பதி ஆணைக்குழுவின் சிபாரிசாகவே இது அறிமுகப்ப­டுத்தப்பட்டது. அவ்வாணைக்குழு ”இளைஞன்”களை மட்டுமே கருத்திற் கொண்டு இப் பிரேரணைகளை முன் வைத்திருந்தது. ஜனத்தொகையில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரை மட்டுமேயுடைய தரப்பினருக்கு இவ்வாறான பிரதிநிதித்துவ ஒதுக்கீடு வழங்க முடியுமானால் பெண்களுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சினைதான் என்ன? மேலும் மேற்படி இளைஞர் ஒதுக்கீட்டினை ”இளம்” பெண்கள் அனுபவிக்க முடியாமலிக்கும் போக்கையும் அவதானிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;-உண்மையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதாயின் இக்கோhpக்கை போதுமானதாக இருக்க முடியாது. சமூகத்தில் எப்போதும் குறை விருத்தியையுடைய (குறை விருத்திக்குள்ளாக்கப்­பட்ட) தரப்பினரை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதாயிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். உதாரணத்திற்கு அவர்களின் உண்மையான வீதாசாரம் 50 வீதமாக இருக்கிறதென்றால் (குறிப்பிட்ட பத்தாண்டோ பதினைந்தாண்டோ விசேட திட்டத்தின் மூலம்) அதனை விட மேலதிகமாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் முலமே உயர்த்தலாம். இதனை அரசியல் கோரிக்கையாக முன்வைப்பதாயிருந்தால் இதனடிப்படையலேயே அமைய வேண்டும். அதை விட்டு 15 ஆண்டுக்கு மூன்றில் ஒரு வீதத்தைக் கோருவதோ, எந்த விதமான பாPசிலிப்புமின்றி இன்னொரு நாட்டை பிரதிபண்ணுவதோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த அரசியற் கோர்க்கையை சொற்ப கோரிக்கையாக எழுப்புவதோ அக்கோரிக்கையை செயலிழக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;-இலங்கையில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட காலம் தொடக்கம் இது வரை பெண்களின் பிரதிநிதித்துவம் 5வீதத்தைக் கூடத் தாண்டவில்லை. அமைச்சரவையிலும் கூட பெரும்பாலும் ”மகளிர் அமைச்சு ” தவிர்ந்த வேறு அமைச்சுகள் அவ்வளவாக வழங்கப்பட்டதில்லை. பெண்க­ளு­க்கு அமைச்சுக்கள் வழங்கப்படுவது கூட 9 வீதத்தை இது வரை தாண்டவில்லை. சமூக அரசியல் நடவடிக்கைகளில்  பெண்கள் ஈடுபடுவதற்கும் அரசியல் ரீதியில் அவற்றில் தலையீடு செய்வதற்கும் பெண்களுக்கு உள்ள உரிமை இதுவரை காலம் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்களில் கூட ஆண்கள் பெண்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்துவந்த வேளைகளில் அதனை எதிர்க்க பாராளுமன்றத்தில் பலமில்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இதற்கு சிறந்த ஒரு உதாரணம் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20, 21 ஆகிய திகதிகளில் ”கருக்கலைப்பு” தொடர்பான சட்ட திருத்தங்கள் குறித்த பாராளுமன்ற விவாதங்களின் போது ஆண் பிரதிநிதிகள் முன் வைத்த கருத்துக்களும் அதன் மோசமான முடிவுகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருப்படியான புரட்சிகர சமூக மாற்றம் இடம்பெறாத சூழ்நிலையில் இக்கோரிக்கையும் கூட பூர்ஷ்வா கோரிக்கையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்டளவிளான வளர்ச்சிக்கு இது இட்டுச் செல்ல உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நிச்சயமாக ஆரம்பத்தில் இது உடனடி பிரதிபலனைத் தராது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சில புரிதல்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;-ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் வாக்களிப்பில் பங்கு கொள்வது மிகவும் குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;-பெண்கள் கூட பெண்களுக்குத் தான் அல்லது பெண்களது தேவைகள் குறித்து அக்கறைப்படுபவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும் கூறிவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;-ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு அதன்படி வேட்பாளர் பட்டியலில் பெண்களையும் சேர்த்து தேர்தலில் போட்டியிடச் செய்தாலும் பெண்கள் அதே அளவு வீதாசாரத்தில் தெரிவு செய்யப்படப் போவதுமில்லை. அதே அளவு தெரிவு செய்யப்­படுவதாகக் கொண்டாலும் நிர்வாகத்துறையில் (அமைச்சர­வையில்) அதே விதாசாரம் கிடைக்கப் போவதுமில்லை. அப்படிக் கிடைத்தாலும் பெண்களின் நலன்களுக்கு சார்பாகத் தான் இருப்பார்கள் என்றோ கற்பனை செய்யத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;-மேட்டுக்குடிப் பெண்களே (ஓரளவு குடும்பச் சுமையிலி­ருந்து விடுபட்ட, பொருளாதார ரீதியில் ஆண்களில் தங்கியி­ருக்காத, வர்க்க, சாதிய,மத, இனத்துவ செல்வாக்கு போன்ற ஆதிக்க பண்புகளைக் கொண்ட, பெண்களே) அரசியல் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நிச்சயமாக இது பெண்களுக்கு அரசியல் பயிற்சியை வழங்கும். அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும். அரசியல் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். இவை பெண்கள் சம வாய்ப்புகளை அடைய முன்நிபந்த­னையாக  அமையும். பெண்களை தமது சந்தர்ப்பவாதத்­துக்காக கையாண்டு வரும் கட்சிகளின் பிடியிலிருந்து விடுபடவும் இப் பயிற்சி கணிசமான அளவு உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ தேர்தல் முறையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு பல சமூகத் தடைகள் உள்ளன. இன்றைய நிலையில் பெண்களுக்கு மரபான ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறை சுமத்தியுள்ள பொறுப்புகள், வன்­முறை மிகுந்த சூழல், பெண்களின் பகிரங்க சமூக நடவடிக்­கைகளை ஆணாதிக்க சமூக அமைப்பு கொண்டிருக்கும் சந்தேகப் பார்வை, ஒழுக்க மீறலாக அதனைக் கருதும் போக்கு, கலாசார பண்பாட்டு ஐதீகங்கள், போன்றன தடையாகத் தான் இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட நிச்சயம் இக்கோரிக்கைகள் கூட போதுமானதாக இருக்க முடியாது. புரட்சிகர சமூக மாற்றத்தின் மூலமே இதனை வென்றெடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;எவ்வாறாயினும் பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதில் ஈடுபடும் எந்த சக்தியும் வரும் கேள்விகளை கவனத்திற் கொள்வது முக்கியம்.&lt;br /&gt;சில கேள்விகள்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;-சகல தேர்தல்களிலும் ஆண்களைப் போலவே பெண்களும் சமனாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களா? உண்டாயின் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் வாக்களிப்பு வீதம் எத்தனை?&lt;br /&gt;&lt;br /&gt;-அரசியற் கட்சிகளின் உறுப்பினர்களில் எத்தனை சதவீதத்தினர் பெண்கள்? அரசியற் பணிகளில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது? அத்தகைய பெண்களின் பங்க­ளிப்பை அதிகரிக்கச் செய்ய அக்கட்சிகள் நடவடிக்கை­களை மேற்கொள்கின்றனவா? அந் நடவடிக்கைகளின் தன்மை எத்தகையன?&lt;br /&gt;&lt;br /&gt;-தேர்தல்களின் போது பெண் வேட்பாளர்களின் விகிதாசாரம் என்ன? வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது தானா? பெண்களின் கோரிக்கைகளை பெண்கள் எவ்வளவு தூரம் முன் வைக்கிறார்கள்? பெண்களின் வாக்களிப்பு வீதாசாரம் என்ன? பெண்களை வெற்றிபெறச் செய்வதில் பெண் வாக்கா­ளர்களின் பங்களிப்பு என்ன?  ஆண்களோடு ஒப்பிடுகையில் எத்தனை வீத பெண்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? நிர்வாகத்துறைக்கு தெரிவு செய்யப்படும் பெண்களின் வீதாசாரம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;-பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கான தடைகள் எவை? அத்தடைகளை ஏற்படுத்துவதில் சமூக ஐதீகங்களுக்கும், குடும்பச் சுமைகளுக்கும், அரசியற் சக்திகளுக்கும், அரசியற், பொருளாதார சூழலுக்கும், உள்ள பாத்திரம் எவை?&lt;br /&gt;&lt;br /&gt;-இவற்றை தாண்டிவர பெண்களுக்குள்ள தெரிவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி கேள்விகளுக்கான விடைகளானது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ அதிகரிப்புக்கு முன்னர் விடை காண வேண்டிய முன்நிபந்தனையான கேள்விகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்படி அரசினதும் (அமைச்சாpன­தும்) அரசு சாரா நிறுவனங்களினதும் திடீர் கரிசனைகளைக் கண்டு மலைக்கவோ நம்பிக்கை கொள்ளவோ தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(1998 ஜனவரி 18 சரிநிகர்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-8305579664194936327?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/8305579664194936327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=8305579664194936327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/8305579664194936327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/8305579664194936327'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_29.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYGEgtQjiNI/AAAAAAAAAd0/Trr6xE-zdi0/s72-c/fallen.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-2973276815859216505</id><published>2009-01-28T23:38:00.000-08:00</published><updated>2009-01-29T13:59:50.109-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;மகளிர் சாசனத்தை&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;&lt;br /&gt;அமுல்படுத்த என்ன தடை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYFeC0MVgXI/AAAAAAAAAds/u54gW9SjZtE/s1600-h/SUNILA.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 419px; height: 397px;" src="http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYFeC0MVgXI/AAAAAAAAAds/u54gW9SjZtE/s320/SUNILA.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296618039227548018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.சரவணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுனிலா அபேசேகர &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; சோசலிஸ பெண்ணிலை வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்­ளும் இவர் ஒரு  மனித உரிமையா­ளரும் கூட. முன்னர் ஜே.வி.பி. இயக்கத்­தில் தீவிர செயற்பா­ட்­டாளராக இருந்­தவர்.  தற்போது பெண்கள் தொடர்­பூடகக் கூட்டமைப்பு (Women &amp;amp;  Media Collective ), இன்போர்ம் (INFORM) என்பவற்றின் இயக்குனர்­களில் ஒருவராக இருந்து வருகிறார். நான்கு பிள்ளைகளின் தாயாரான சுனிலா தனியொரு­வராக பிள்ளைகளை வளர்த்து வருபவர். இலங்கையின் பெண்ணிலைவாதிகளில் மிகவும் தீவிர செயற்பாட்டாளராக இருந்துவரும் இவர் தனது வாழ்க்கையிலும் பெண்ணிலைவாதி யாகவும் மாதிரிப் பெண்ணாகவும் வாழ்ந்து வருபவர்.  இவரை தவிர்த்து விட்டு செய்யப்படும் இலங்கையின் பெண்ணிய சூழலைப் பற்றிய எந்த ஆய்வும் பூரணமாகாது. சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவரிடமிருந்து பெறப்பட்ட நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இம்முறை பெண்கள் தினத்துக்கு நிங்கள் சார்ந்த அமைப்புகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கின்றன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கூட்டங்கள், கருத்தரங்குகள், கண்கா­ட்சிகள், பட்டறை­கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்ட­ங்கள், நாடகங்கள், திரைப்படக் காட்சிகள், இன்­னும் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என நிறையவே நடத்தப்படப் போகின்­றன.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை உள்ள முக்கிய மாற்றம் என்னவென்­றால், கடந்த பத்து வருட காலமாக பெண்கள் தின நிகழ்ச்சிகள் யாவும் கொழும்பை மையமாக வைத்தே நடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் கடந்த இரு வருடங்களாக, நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் பல்வேறு பெண்கள் அமைப்பு­களால் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்­பாக அரசு சார்பற்ற பெண்கள் அமைப்புக­ளில் பெரும்பாலா­னவை இம்முறை கொழும்புக்கு வெளியிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறத்தில் இது ஆரோக்கியமாக இருந்த போதும் மறுபுறத்தில் அதிகாரத் தரப்புக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய நிலையை இழக்கவும் நேரிடுகி­றது. கொழு­ம்பை மட்டுமே தொடர்பூடக­ங்கள் அனைத்­தும் கவனம் செலுத்து­கின்ற நிலையில் கிராம மட்டத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி­களை வெளிக் கொணர முடிவதில்லை. தேசிய ரீதியில் தாக்­கத்தை ஏற்படுத்தக் கூடிய வகை­யில் இத்தினத்தில் நடத்தப்­படும் செயற்­பாடுகள் அமைய வேண்டுமெ­ன்றே நான் விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்த முறை பெண்கள் தினத்துக்காக கோஷமாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெரும்பாலும் என்னென்ன முன்வைக்கப்பட்டுள்ளன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் 'சமாதானமும், ஜனநாய­கமும்' பற்றியே கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மூன்று வருடங்களுக்கு முன் பெண்கள் தினத்துக்கு சகல பெண்கள் அமைப்புகளும் சமாதானத்துக்காக பெண்கள் அமைப்புடன் (women for eace) சேர்ந்து யுத்தத்துக்கு எதிராக கறுப்பாடைப் பெண்கள் ஆர்பாட்டத்தை நடத்தியிருந்தன. யுத்தத்தின் கொடூரத்தால் பெண்கள் மேலும் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஏன் அந்த ஆர்பாட்டத்தை கைவிட்டீர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல், பொஸ்னியா, யூகோஸ்லா­வியா போன்ற நாடுகளில் யுத்தத்துக்கு எதிராக பெண்கள் அணி திரண்டு நடத்தி வந்த Women in Black எனும் ஆர்ப்பாட்ட­த்தை அனு­ப­வமாகக் கொண்டு இலங்­கையிலும் அத்தகைய ஆர்ப்­பா­ட்டத்தை பெண்கள் அமைப்புகள் செய்தன. ஆனாலும் யுத்தத்துக்கு எதிரான கோஷம் தற்போது தான் முன் வைக்கப்பட்­டது என்றில்லை. 83 க்குப் பின்னர் பல பெண்கள் அமைப்புகளின் முக்கிய கோஷங்களில் ஒன்றாக ”யுத்த எதிர்ப்பு” என்பது இடம்பெற்று வருகின்றது. இம்முறை கூட பெண்கள் அமைப்புகள் பலவற்றின் செயற்பாடுகள் யுத்த எதிர்ப்­பையே மையமாகக் கொண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் உள்ள விடயம் என்னவெ­ன்றால் யுத்த எதிர்ப்பு உணர்வோ, அல்லது சமாதான அபிலாஷையோ எவ்வ­ளவு தான் இருந்தபோதும், எவருக்கும் நடைமுறையில் எப்படி இந்த சமாதானத்­தைப் பெற்றுக் கொள்வது என்பது குறித்து சரியான தெளிவில்லை. மேலும்  80களில்  இருந்து பெண்கள் அரசியல் தீர்வை கோரி நிற்கின்றனர். ஆனால் இன்று அரசியல் தீர்வு யோசனையாக அரசாங்கத்தின் தீர்வு யோசனை­யையே கொள்கின்றனர். வேறு எந்த வித அரசியல் யோசனைகள் குறித்­தும் எந்த வித பேச்சுமேயில்­லையே. இன்று அரசியல் தீர்வு யோசனையை வேண்டி நிற்கின்றோம் ஆனால் அது அரசாங்­கத்தின் யோசனையாகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சிடோ குறித்த அனுபவத்தையும், அதன் இன்றைய நிலையையும் வாசகர்களுக்கு விளக்குவீர்களா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீடோ (CSDAW) என்பது ஐ.நா.வின் பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஆக்கப்பட்டுள்ள ஒரு சர்வதேச பிரகடனம். அது ஒரு சாசனம். இச்சாசன­த்தை இலங்கையும் அங்கீகரித்து கைச்சாத்திட்­டுள்ளது. கையெழுத்திட்ட நாடுகளில் இச்சாசனத்­தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்­கள் குறித்த வளர்ச்சி என்ன? பெண்களால் அதனை அனுபவிக்க முடிந்­ததா? முடியாவிட்டால் அதற்கென்ன காரணம்? அதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் எவை? போன்றவை குறித்து நான்காண்­டுகளுக்கு ஒரு முறை ஒரு அறிக்கையை அளிக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்த நாடுகளுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;இலங்கை அரசாங்கம் அப்படி இது வரை அளித்து வருகிறதா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக 1992ஆம் ஆண்டு இலங்கை அரசு அறிக்­கையை கையளித்திருந்தது. அது கூட அப்போது மிகவும் பிந்தியிருந்தது. அடுத்த அறிக்கையை 1995இல் கையளி­த்திருக்க வேண்டும். ஆனால் 1995ஆம் ஆண்டு பீஜிங்கில் நடத்தப்பட்ட நான்கா­வது சர்வதேசப் பெண்கள் மாநாட்டுக்­காக அரசாங்கம் தயாhpத்திருந்த அறிக்கையின் பிரதியை­யே சீடோவுக்கான அறிக்கையா­கவும் கையளித்திருந்தது. இவ்வாறு அறிக்கை கையளி­த்த பின் அரசாங்கத்தின் பிரதிநி­திகள் அவ்வறி­க்கை குறித்து சீடோ கமிட்டி முன் விளக்கமளிக்க வேண்டும். ஆனால் இது வரை அரசாங்கம் இவ்வறி­க்கை குறித்து விளக்கமளிப்பதற்காக சீடோ கமிட்டி முன் செல்லவில்லை. சில வேளை இந்த வருட மத்தியில் அரசாங்கம் சீடோவின் முன் செல்லுமென எதிர்பார்­க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1992ஆம் ஆண்டு அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றி­ணை­ந்து ஒரு ”மாற்று அறிக்கை”யை கையளி­த்திருந்தன. இவ்வ­றிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கப் பிரதிநிதிகள் சீடோ கமிட்டியை சந்தித்த வேளையில் பல கேள்விகளை எழுப்பியி­ருந்தனர். எனவே தான் அரசாங்­கம் பல விடயங்கள் குறித்து சீடோவின் முன் உறுதிமொழிகளை அளிக்க நேரிட்­டது. குறிப்பாக நாங்கள் குறிப்பிட்டிருந்த விடய­ங்களில் திருமணத்துக்கான குறைந்­தபட்ச வயது 12 என்பதை எதிர்த்திருந்­தோம். அதன் பின்னர் 16 வயதாக சட்டத்­தை மாற்றியது அரசாங்கம். இம்முறை அரசு சார்பற்ற அமைப்புகள் இம்முறை மாற்று அறிக்கையொன்றுக்கான தயாhpப்புகளில் தீவர கவனமெடுத்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இம்முறை தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கையில் முக்கியமாக என்னென்ன விடயங்களை முன்மொழிந்திருக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு சுகாதார விடயத்தை எடுத்துக் கொண்டால் சுகாதாரத்துறைக்கு அரசின் நிதியொதுக்கீடு வரவர குறைந்து போதல் மற்றும் உலக வங்கியின் ஆலோச­னையின் காரணமாக சுகாதாரத்துறையை தனியார் மயப்ப­டுத்தி வருவதன் விளைவா­கவும்  பெண்களின் நலன்களுக்­கான மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட பல மருத்துவ மையங்களிலிருந்து பெண்கள் பெற்றுவந்த  வசதிகள் அனைத்தும் குறைக்கப்பட்டு பறிக்கப்­பட்டு, வருகின்றன. மருத்துவ வசதிகள் குறைக்கப்­படும் போது குறிப்பாக பெண்களே பாதிப்புக்குள்ளாக்­கப்படுவது பற்றி சொல்லித் தெரியத் தேவையில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் சுகா­தார நிலைமைகளும் கீழே விழுமல்லவா? இலங்கையில் குறைந்த எடையுடன் பிறக்­கும் குழந்தைகளின் எண்ணிக்கை அண்மை­க்காலமாக வேகமாகவே அதிகரித்து வருகிறது. குழந்தை­கள் குறைந்த எடையில் பிறப்பதற்கான காரணம் தாயின் மந்தபோசனமும், இரத்தக் குறைவுமே. குழந்தை தாயின் வயிற்றிலிருக்கையில் தாய் மந்தபோச­னத்தால் பதிக்கப்ப­டுவது என்பது குழந்தையின் மூளை வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் ஒன்றாகும். எடை குறைவாகப் பிறக்கும் குழந்தை­கள் பல சந்தர்ப்பங்களில் இறக்கவும் செய்கின்றன. இலங்­கை­யில் இப்படி சிசுமரண வீதம் அதிகரித்துக் கொண்டு செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணம். அறிக்கையில் இவை குறித்து விhpவாகக் குறிப்பி­ட்டுள்ளோம். அது தவிர இலங்கையில் சட்ட விரோத­மான கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது. கருக் கலைப்பு காரணமாக மரணிக்கும், உடல் அங்கவீனங்­களுக்கு உள்ளாகி வரும் பெண்களின் எண்ணிக்கை எமது நாட்டில் அதிகம். அடுத்தது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் பெண்கள் சரியான முறையில் ஒப்பந்த அடிப்படையில் செல்ல முடியாததன் விளை­வாக அனுபவித்து வரும் கொடுமைகள் தொடர்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அரசாங்க­த்தின் தலையீடும், கண்காணிப்பும், பராமரிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களின் பிள்ளை­கள் வளர்க்கப்படுவ­தற்கு ஒரு மாற்று ஏற்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்நாட்டுக்கு அதிகளவு செலா­வணியைப் பெற்றுத் தரும் இப் பெண்கள் குறித்து கூடிய அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மேலும் இன்றும் விவசாயத்துறையில் ஆண்களு­க்கு சமமான சம்பள­த்தை பெண்கள் பெறுவத­ற்கான வாய்ப்புகள் இல்லை. விவ­சாய­த்துறை பெருமளவு தனி நபர்களி­டம் தங்கியிருப்பதால் சமசம்பளம் என்பது சாத்தியப்படாமல் உள்ளது. எனவே அரசாங்கத்தின் கவனமும் ஈடுபாடும் இது குறித்து இருக்க வேண்டும். இது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சீடோவுக்கான அரசாங்கத்தின் அறிக்கையில் காணப்படும் விடயங்கள் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் பெண்களின் உண்மை நிலையைக் குறிப்­பதை விட, தனது சாதனைகளைக் கூறும் வகையிலேயே அறிக்கை தயாரித்திருக்கும். இலங்கை மட்டுமல்ல உலகின் பல நாடுகள் இப்படித் தான். எனவே தான் எமது அறிக்கை இந்த இடத்தில் முக்கிய பெறுமதியைத் தருகி­றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெண்கள் சாசனம் இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறப்படாதிருப்பதற்கு என்ன காரணம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை தான் பெண்கள் சாசனம் ஒரு அரச கொள்கை­யாக மாத்திரமே உள்ளது. இது 1993இல் பாராளுமன்றத்தால் அங்கீகாரிக்கப்பட்டது. இது மிகவும் நல்லதொரு ஆரம்பம். இது சீடோ பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரச மற்றம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல சேர்ந்து தயாரித்தது. சாசனத்தைப் பேணுவதற்­காக பெண்கள் தேசியக் கமிட்டி எனும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவுக்கு சாசனத்தை நடைமுறைப் படுத்­தவோ அல்லது அந்த சாசனம் மீறப்ப­ட்டது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்­கவோ அதற்கு அதிகாரமில்லை. அப்படி­யொரு அதிகார­மிக்க பெண்கள் ஆணைக் குழு­வொன்று நியமிக்கப்படு­மென்று சாசன­த்தில் கூறப்பட்டாலும், இன்று வரை அப்படி­யொ­ன்று நியமிக்கப்படவில்லை. சாசனம் என்பது வெற்றுக் கடதாசியாகவும், தேசிய பெண்கள் கமிட்டி என்பது வெறும் பரிந்து­ரைகளை மட்டும் செய்யும் ஒன்றாகவுமே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஆனணக்குழுவை அரசாங்கம் நியமிப்பதில் இருக்கம்  தடைகள் எவை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதில் அக்கறை இருப்பதா­கவும் தெரியவில்லை. பெண்கள் அமைப்­பு­கள் கூட இதனை நியமிக்கும்படி கோருகி­ன்ற எதுவித நிர்ப்பந்தங்களையும் அரசுக்கு ஏற்படுத்துவதாகத் தெரியவி­ல்லை. சாசன­த்தை அமுல்படுத்த ஆணை­க்குழு அவசிய­மென்பது பல பேருக்குப் புரியவில்லை . இது வரைக்கும் பெண்கள் அமைச்சு என தனியான ஒன்று இருக்கவி­ல்லை. ஏதாவது ஒரு அமைச்சுடன் இணை­ந்தே இருந்து வந்திருக்­கிறது. ஆகவே பெண்கள் விடயத்­தில் தனியான அக்கறை காட்டுகின்ற அரச யந்திரம் இருக்கவி­ல்லை. ஆனால் இறுதி­யாக நடந்த அமைச்­சரவை மாற்றத்தின் போது பெண்கள் அமைச்சு தனியான ஒன்றாக ஆக்கப்­பட்டது. இவையெல்­லாம் நல்ல விடயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தற்போது பெண்கள் சாசனம் மிகவும் முன்னேறிய ஒறாக கூறப்பட்டு வருகின்ற அதே வேளை அதில் இன்னும் பல குறைகள் இருப்பதாக தோன்றுகிறது. குறிப்பாக பெண்களின் பாலியல் தெரிவு (ஒரு பால் உறவு), குடும்ப வன்முறைகள் குறித்த சட்ட நடவடிக்கைகள் எடக்க முடியாத, குடும்ப அமைப்பு முறையை பேனுவதற்குரிய அம்சங்கள் எனபன சிக்கலாகனவையாக இருக்கின்றனவே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வித குடும்ப மாதிரிகள் இன்று முன்வைக்­கப்படு­கின்றன. இந்தச் சாசனத்­தில் எந்த வித குடும்ப மாதிரிக்கும் பொருந்­தக் கூடிய விதத்தில் இச்சாசனம் அமைக்­கப்பட்டுள்ளதாகவே எனக்குப் படுகிறது. மற்றும்படி குடும்ப வன்முறைகள் குறித்த விடயங்களில் சாசனத்தில் கூறப்பட்ட விடயங்கள் சிக்கல்களைத் தருவனவா­கவே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இன்றைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தைவிட முற்பொக்கானது, சகல விடயங்களிலும் ஒரு மாற்று அரசாங்கமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அரசாங்கம். பெண்களின் நலன்களில் கூட அது சிறப்பாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த குறைந்த ஆண்டுகளுக்குள் இந்த அரசாங்கம் பெண்கள் நலன்களை அதிகளவு மீறியிருப்பதாகக் கொள்ளலாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு அரசாங்கமும் பெண்கள் தொடர்பான வாக்­குறுதிகளை அளிப்பது ஒன்றும் கடினமானதல்ல. காரணம் அதற்­­கெதிர்ப்பு தொpவிக்­கும் நிலை இல்லை. கடந்த காலங்­களில் ஐ.தே.க. அரசாங்கம் தனது ஜனநாயக விரோத  போக்குக­ளால் பறி போன புள்ளிகளை இந்தப் பெண்கள் சாசனம் போன்றவற்றை முன்வைத்ததனூ­டாக சர்வதேச அளவில் பெற்றுக்கொண்­டது. இது அரசியல் ரீதியில் அவர்களுக்கு சாதகமாகப் போனது. அரசாங்கத்தின் கவனம் முழுவதும் நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளில் மையப்படுத்தப்­பட்டு வருவதால் பெண்கள் பிரச்சி­னையென்பது அவர்களின் அக்கறைக்கு­ரியதாக இல்லை. அதே வேளை பெண்கள் பிரச்சினை குறித்து இந்த அரசாங்கம் எடுத்து வரும் சில நடவடிக்கைகள் நல்லவை­யாகவும் radical  ஆகவும் இருந்த போதும், அவை விவாதத்துக்குரிய ஒன்றாக மாறும் என நம்புகிறது. குறிப்பாக கருக்கலைப்பு உரிமை, விவாகரத்து கோருகையில் காணப்படுகின்ற சிக்கல்­கள், குடும்பத்துக்­குள் காணப்படும் பாலி­யல் பலாத்காரங்கள் என்பன இன்றும் சிக்கலுக்குரிய­வையாகவே உள்ளன. 1995 செப்டம்பரில் தண்ட­னைக் கோவை சட்ட திருத்த விவாதத்தில் கருக்கலைப்பு பற்றிய விடயம் குறித்து எவ்வளவு எதிர்ப்புகள் காணப்பட்டன என்பது தெரியும் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அப்படி அக்கறையுள்ள அரசாங்கத்தால் ஏன் பெண்கள் ஆனணக்கழுவை நியமிக்க முடியாமல் போனது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணைக்குழுவை நியமிப்பதில் வேண்டுமென்றே தள்ளி வருகிறது எனக் கூற மாட்டேன். ஆனால் அசட்டையாகவே இருந்து வருகிறது என கூறலாம். அரசாங்­கம் யுத்தத்தில் காட்டி வரும் ஆர்வத்தின் முன்னால் இது போன்ற விடயங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு வருகின்றன. முன்னைய அரசாங்க­த்தின் மீது பெண்கள் அமைப்புகளுக்கு இருந்த எதிர்ப்புணர்வு காரணமாக பல கோரிக்கைகளுக்­காக பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடி­னார்கள். எப்படியோ அவ்வரசாங்கத்தோடு ஒருவித தொடர்பு இருந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமா­கவோ என்னவோ அரசுடனான ஒரு கருத்­தாட­லைக் கூட காண முடியாதுள்ளது. இது ஒரு சிக்கலுக்குரிய விடயம். கருக்கலைப்பு குறித்த பாராளுமன்ற விவாதம் தொடர்பாக கூட அதற்கு வெளியில் எந்தவித நிர்ப்ப­ந்தமும் பெண்கள் அமைப்புகளால் செய்யப்­படவில்லை. இது எம்மிடமே உள்ள பெரிய குறைபாடு. இதனை சுயவிமர்சனமாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகர்வதில்லை. இருக்கின்ற பெண்கள் அமைப்புகள் எல்லாமே அரசு சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. அதற்கு வெளியில் சுயாதீனமான பெண்கள் அமைப்புகள் எதுவுமே இல்லை. அப்படி தோன்றினால் கூட என்.ஜீ.ஓ.க்கள் அவற்றை உள்வாங்கி ஏப்பமிடுவதற்கூடாக அவற்றின் தீவிரத்தன்மையைக் கூர்மங்கச் செய்வது ஒரு காரணமாக இருக்க முடியாதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பெண்கள் அமைப்புகளுக்கு மட்டுமல்ல பொதுவா­கவே இந்த போக்கு நிலவுகிறது. சிவில் சமூக செயற்பாடுக­ளில் காணப்பட்டு வரும் மாற்றங்­களையும் நாம் கவனத்தில்­கொள்ள வேண்டும். 90களைப் பார்த்தோமானால் சிவில் சமூக செயற்பா­டானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. 30களிலிருந்து தீவிரப்பட்ட தொழிற்சங்க நடவடிக்­கைகளு­க்கும், இடதுசாரி செயற்பாடுகளுக்கும் கூட இந்த நிலைமை தோன்றியுள்ளன எனலாம். சித்தாந்த வீழ்ச்சியும் காணப்படு­கிறத­ல்­லவா?  சமூக மாற்றத்துக்கான சித்தாந்த சூத்திரங்­களை எம்மால் மாற்றத்துக்குள்­ளாக்க நேரிட்டதல்லவா? இதன் காரணமா­கவே தீவிரமடைதலுக்கும் பீதி நிலவுகிறது. சிவில் சமூகத்தில் செயற்பாட்டுச் சக்திக­ளாகவும் நிர்ப்பந்தச் சக்திகளாக பத்திரி­கையாளர்களும், கருத்துச் சுதந்திரத்திற்­காக போராடுபவர்களுமே காணப்படுகின்­றனர் என்றே நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நீங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்துள்ளீர்கள்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அதில் நீங்கள் கண்ட அனுபவங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் குறித்த அவதானங்களைப் பகிர முடியுமா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.வி.பி.யினர் இன்றும் நான் ஒரு உறுப்பினராக ஒருபோ­தும் இருந்ததில்லை என்றே கூறி வருகின்ற­னர். நான் ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்திருக்கி­றேன். சோஷ­லிச கலைச் சங்கத்தின் கீழ் 1977இல் தோற்றுவிக்கப்பட்ட விமுக்தி கீ (விடுதலை கீதம்) குழுவில் பாடல்கள் பாடி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நீங்கள் ஜே.வி.பி.யின் சோசலிச மகளிர் சங்க்தில் இருக்கவில்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, நான் அதில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அப்போது அதன் கூட்டங்களில் உரையாற்­றியிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஜே.வி.பி. ஆங்கில மொழியில் வெளியிட்டு வந்த RedPower பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தேன். தொகுத்துமிருக்கிறேன். அதற்­குப் பொறுப்பாக சில காலம் இருந்திருக்கி­றேன். ஆங்கில மொழியிலான விடயங்கள் பலவற்றை நானே செய்ய நேரிட்டது. கொழும்பு கிழக்கின் அமைப்பாளராக செயற்பட்டிரு­க்கிறேன். நான் விஜேவீர, கெலி சேனநாயக்க உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அப்போது கியுபாவில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கும் சென்று வந்தோம். அப்போது ஜே.வி.பி.க்கு அங்கு நல்ல வரவேற்பி­ருந்தது. அதனைத் தவிர அப்போது ஜே.வி.பி.யின் மனித உரிமைகள் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட போது அதன் தலைமைப் பொறுப்பையும் நானே வகித்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;ஜே.வி.பி.யுடன் இணைவதற்க்கு உந்துதாக இருந்த சூழலை விளக்குவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இன்றும் நம்புகிறேன். இலங்கை­யில் தீவிர இடதுசா­ரித்துவத்திற்கான தேவை தொடர்ந்துமி­ருக்கிறது. 1976இல் தான் நான் மார்க்சிய அரசியலில் அக்கறை காட்டினேன். நாட்டில் ஒரு சமூக மாற்றமெ­ன்றை உருவாக்கும் ஆற்றல் ஜே.வி.பி.க்கு இருப்பதாக நம்பினேன். அன்று 71 கிளர்ச்சி­யில் பங்கு பற்றியவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்­குழுவின் விசாரணை­களின் போது நானும் சென்று ஆர்வமாக அவதானித்து வந்தேன். இதற்கூடாகவே ஜே.வி.பி.யுடனான தொடர்பு ஏற்பட்டது. ஜே.வி.பி. தோழர்கள் என்னை அடை­யாளம் கண்டு தொடர்பு கொண்டனர். அவர்களின் வேலைக­ளில் நானும் பங்கேற்றேன். 78இல் தோழர் விஜேவீர விடுதலை­யான பின் 71 கிளர்ச்சியில் படுகொலை செய்யப்பட்ட பிரேமவதி மனம்பேரி நினைவாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது தோழர் விஜேவீர என்னைச் சந்தித்து உரையாடினார் அதன் பின் ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஜே.வி.பி.யிலிருந்து ஏன் விளகினீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதத்தில் என் தனிப்பட்ட பிரச்சி­னைகளும் எனது விலகலுக்குக் காரணமா­கியிருந்தன. அதை விட தொடர்ந்­தும் பல கருத்துப் பிரச்சினைகள் இருந்து வந்தன. குறிப்பாக பெண்கள் விடயம் தொடர்பா­னது. சோஷலிச மகளிர் சங்கம் சுயாதீன­மாக இயங்க முடியாதிருந்தது. ஆண் தோழர்க­ளின் வழிநடத்தலிலேயே, அவர்­கள் இடும் ஆணைகளே சோ.ம.ச.வை இயக்கின. இது தொடர்பாக கட்சிக்குள் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தன. சோ.ம.ச. வின் தலைவியாக செயற்பட்ட நந்தசீலி சகோதரியின் பிரசவ விடுமுறை கூட அன்று வழங்க மறுக்கப்பட்டது. இது தொடர்பான பிரச்சினைகள் கிளப்பப்பட்ட போது. என் மீது மத்திய தர வர்க்க முத்தி­ரை குத்தப்பட்­டது. நான் ஆங்கில மொழி மூல விடயங்கள் பெருமளவு செய்து வந்த­தால் இது இம்முத்­திரை குத்தலுக்கு சாதகமாகப் போனது. இந்த நிலைமையை சமாளித்து நீடித்திரு­க்க முடியாது போனது. படிப்படியாக அதிலிருந்து அந்நியப்பட வேண்டி வந்தது. இன்று கூட நான் கெலி சேனநாயக்கவுடன் தொடர்பு வைத்தி­ருந்­ததன் காரணமாகவே விலகினேன் என பிரச்சாரப்படுத்தி வருகிறது. கியூபாவுக்கு சென்றிருந்த வேளையில் அங்கு நடத்தப் பட்ட கலை நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு போவதற்கு எம்மோடு வந்த சில தோழர்­களை  அழைத்­திருந்தேன். ஆனால் எல்லோரும் மறுக்கவே என்னோடு கெலி மட்டுமே வரத் தயாராக இருந்தார். அங்கு போனதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கண்டிக்கப்பட்டோம். கெலியையும் என்னையும் சம்பந்தப்படுத்தி அபாண்­டமான குற்றச்சாட்­டுக்கள் சுமத்தப்­பட்டன. அது இறுதியில் எங்கள் இருவரை­யும் உண்மையிலேயே ஒன்று சேர நிர்ப்பந்தித்­திருந்தது. அக் குற்றச் சாட்டையே இன்றும் கூறி வருகிறது. இன்று வரை என்னால் எழுப்பப்பட்ட கருத்து ரீதியான பிரச்சினை­களை மூடிமறைத்துக் கொண்டே வருகி­றது. பெண்கள் பிரச்சினை போலவே ஜனநாயகம் பற்றிய பிரச்சினையும் கட்சிக்­குள் எழுந்தது. குறிப்பாக 1979ஆக இருக்கும் கம்போடியாவில் பொல்பொட் அரசாங்கம் பற்றிய சிக்கல்கள் எழுந்தன. கம்போ­டியப் போராட்டத்தைஒரு புரட்சிகர எழுச்சியாக கருத முடியுமா என்ற விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பி.யின் நியமுவா பத்திரிகையில் பொல்பொட் அரசாங்கம் ஒரு புரட்சிகர அரசாங்கம் என்றே வாழ்த்தி வந்தது. ஆனால் பொல்பொட் அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கம் என்ற கருத்து என்னி­டம் இருந்தது. சீ.ஐ.ஏ.வின் செய்தி ஸ்தாபன­ங்கள் பரப்பி வரும் பிரச்சாரங்க­ளைக் கொண்டே நான் வாதிடுவதாகவும் பொல்பொட் அப்படியான கொலைகளைச் செய்யவில்லை என்றும் விஜேவீர தோழரும் எதிர்த்தார். நான் சீ.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் பிரச்சாரப்படுத்­தினர். ஆனால் இன்று பொல்பொட் யார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்படி­யான கருத்து ரீதியான பிரச்சினைகளை சரியான பொறிமுறைக் கூடாக முகம்கொ­டுக்க ஜே.வி.பி. தயாராக இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் கூட சமூக மாற்றமொன்றுக்­காக தொடர்ச்சியாக முயற்சி செய்கின்ற ஜே.வி.பி.யின் மீது எனக்கு அக்கறை உள்ளது. ஆனால் இன்றும் பெண்கள் தொடர்பான விடயம் உள்ளிட்ட பல விடயங்­களில் கருத்து ரீதியான வளர்ச்சி காணப்ப­டுவதாகத் தெரியவில்லை. பொரு­ளாதார விடுதலை­யிலேயே பெண்களின் விடுதலை தங்கியிருக்கிறது என்கின்ற கருத்துட­னேயே இன்றும் இருப்பதாகத் தெரிகிறது. நவீன பெண்ணிய சிந்தனை தொடர்பான கருத்தாடல் கட்சிக்குள் தற்போது இருப்ப­தாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இன்று லெஸ்பியன் உறவுகள் (ஒருபால் உறவு) பெண்ணியத்தில் மிகவும் சர்சைக்குரியதாகவும், விவாதம் மிக்க ஒன்றாகவும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவுகளுக்காக குரல் கொடுப்பவர் என்ற வகையில் உங்கள் கருத்தென்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறையில், இலங்கை சமூகத்தில் கூட பெண்கள் பெண்களோடேயே நெருக்க­முற்றுள்ளனர். ஆண்கள் ஆண்களோ­டேயே நெருக்கமுடையவர்க­ளாக இருக்கி­ன்றனர். சிறு வயதிலிருந்தே விளையா­டும் போதும் பழகும் போதும் உறவுகள், தொடர்­புகள் என எல்லாமே அந்தந்த பாலாரைச் சார்ந்தவர்­க­ளோடேயே வரையறுக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இலங்கைச் சமூகத்­தில் இதனை அதிகளவு காணலாம். எமது பாடசாலை­களும் கூட தனித் தனிப்பாலாரு­க்கென மட்டுப்படுத்தப்பட்டே இருக்கி­ன்றன. மறு பாலாருடனான உறவுக்குரிய வாய்ப்புகள் எல்லைப்­படுத்தப்பட்டே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை விடுதிகள் மற்றும் வேலை செய்யும் பெண்கள் விடுதிகளில் பெண்க­ளோடேயே வசிக்கின்­றனர். ஆண்கள் ஆண்களோடேயே வசிக்கின்றனர். இவற்­றை ஒரு போதும் ஒரு பாலுறவு எனக் கொள்வதில்லை. சிலவேளைகளில் அவர்­களில் ஒரு பால் உறவு இருப்பவர்கள் உள்ள சந்தர்ப்பங்களில் அதனை ஒரு வித்தியா­சமாக உணருவதில்லையே. மேற்கு­லக நாடுகளில் மறு பாலாருடனான உறவுகள் பிரச்சினை­க்குரிய ஒன்றாக இல்லை. எனவே தான் சில வேளைகளில் ஒத்த பாலாருட­னான உறவுகள் வளர்கின்ற போது அது பிரச்சினைக்குரிய ஒன்றாக தோன்றுவதை­யும் நாம் கவனிக்கலாம். நமது சமூகத்தில் கூட சமூக உறவு என்பது ஒத்த பாலாருட­னேயே உள்ளது. எனவே இதன் தொடர்ச்­சியாகவே நாம் ஒத்த பாலுறவையும் பார்க்க வேண்டும். தனிச் சொத்தாகவே பெண்ணைப் பார்த்து வந்த ஆணாதிக்கத்­துக்கு பெண்ணை இன்னொ­ரு ஆண் மட்டுமல்ல பெண்ணின் மீது இன்னொரு பெண் அன்பு வைப்பதையும். பாலுறவு கொள்வதையும் ஒரு வேண்டப் படாத போக்காகவே ஐதீக­மொன்றை வளர்த்து விட்டுள்ளது என்றே நாம் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் பெரும்பாலான பெண் பிள்ளைகளி­டம் உங்கள் நெருங்கிய நண்பர் யார்? யாரோடு ஒளிவுமறைவின்றி பேச முடிகிறது? யாரோடு அழ முடிகிறது? என கேட்டோமா­னால் அது பெரும்பாலும் இன்னொரு பெண்ணாகத் தான் இருக்கும். இதனை உங்களால் உணர முடிகிறதா? எனது உள்ளத்தைப் பகிர்ந்து கொள்வது இன்னொரு பெண்ணோடு என்றால்? பாலியல் உறவு என்பது மிகவும் சொற்பமான ஒன்றல்­லவா? சமூகம், ஒத்த பால் இணைவாக (Homo Social) இருக்கையில் ஒத்தபாலுற­வாக (Homo Sexual) ஏன் இருக்க முடியாது?  எப்போதாவது ஆண்-ஆணோ­டும், பெண்-பெண்ணோடும் உள்ள உறவுக்கு சமூக அளவில் அல்லது சட்ட அளவில் இடையூறு­கள் வந்தால் அந்த வேளை நாங்கள் அதற்கெதிராக செயற்பட வேண்டி வரும். அப்போது லெஸ்பி­யன்களது (Lesbian) உரிமைகளுக்காகவும், கே (Guy) உரிமை­களுக்­காகவும் பகிரங்கமாகப் போராட வேண்டிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;லெஸ்பியன் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்புகள் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துரதிருஷ்டவசமாக இலங்கையில் பெண்கள் தொடர்பூ­டகக் கூட்டமைப்பி­னைத் தவிர லெஸ்பியன் உரிமைகள் குறித்து பேச ஒரு அமைப்பும் இல்லை. அது கூட இதனை வெறும் சஞ்சிகையில் எழுதுவ­தோடு நிறுத்தி விடுகின்றதே ஒழிய அவ்வுரிமை­க்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கின்ற அமைப்பாக இல்லை. தான் ஒரு லெஸ்பியன் என கூறிக்­கொள்­கிற பெண்ணிலைவாதிகளை கூட எம்மால் காணமுடி­வதில்லை. அப்படி சொல்வதை ஏற்றுக் கொள்வதற்குரிய சமூகச் சூழல் கூட வழக்கில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;இன்று வரை ஒரபாலுறவு என்பது ஒரு கிரிமினல் குற்றமாக அல்லவா காணப்படுகிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் ஒருபாலுறவு என்பது சட்ட ரிதியில் தடை செய்யப்­பட்ட ஒன்று. ஆனால் நடை­முறையில் அது தடுக்கக்கூடிய ஒன்றா? பகிரங்கமாக இவை நடப்பதில்லையே? பொலிஸார் என்ன இதனை பிடிப்பதற்கு வீடுவீடாக டோச் அடித்துக் கொண்டா செல்ல முடியும்? பெரும்பாலும் ஆண்களு­க்கு ஒருபாலுறவில் ஈடுபடுவதற்கான சந்தர்­ப்பங்கள் அதிகம். பெரும்பாலும் மலசல­கூடங்களில், கடற்க­ரைகளில்... இப்படி­யாக. பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ள இடங்களைப் பார்த்தால் இப்படித் தான் இருக்கும். பெண்கள் - பெண்களென்பதா­லேயே அந்தளவு சந்தர்ப்பங்கள் இல்லை. எனவே பெண்களை பகிரங்கமாக கண்டி­ருக்க வாய்ப்புகள் இல்லை. நீங்கள் பாதைகளில் பார்த்தால் கூட பெண்கள் பெண்களுடன் கைகோர்த்துச் செல்வதை­யும் ஆண்கள் ஆண்களின் தோளில் கைபோட்டுச் செல்வதையும் பார்க்க­லாம். ஒரே கோப்பையில் உண்ணுவார்கள். ஒரே படுக்கையில் உறங்குவார்­கள். மேலை நாட்டைச் சேர்ந்தவர்கள் இதனைக் காணும் போது உடனேயே Homo Sexual  என நினைப்பா­ர்கள். ஆனால் இது Homo Social. சில வேளை எமது சமூகத்­தில் நிலவிவரும் Homo Social  ஐ விளங்கிக் கொண்டால் எம்மால் அது எப்படி Homo Sexual ஆக மாறுகிறது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோமென்றால் பாலியல் விடயத்தில் நெருங்குவது ஒன்றும் பிரச்சினைக்­குரிய ஒன்றல்ல. இதிலிருந்து ஒருபாலுறவுக்கு சிறு இடைவெளியொன்றே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இதற்கெதிரான கருத்துகள் எங்கிருந்து வருகின்றது என நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் மதங்களிலும், ஆணாதி­க்க தனிச்சொத்­தாக பெண்களை நோக்கு­கின்ற கருத்தியலிலிருந்துமே இது தொடங்­குகிறது. மேலும் யோனி மைய வாதம் ஒரு குறிப்பான காரணம். பாலுறுப்புகள் என்பது கருவுறுவாக்கலுக்கு பயன்பட வேண்டி­யவை. ஆனால் அதுவல்லாத பாலுறவு என்பது சமூக ஐதீகத்துக்குப் புறம்பானது என்ற கருத்தே வேறூன்றியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் எப்போதும் பாலுறுவின் போது கூட ஆண்களின் அதிகாரத்துவ பாலுறவு நிலவி வருகிறது. ஆண்களுக்கு தேவை­யான போது, பாலுறவுக்குத் தயாராயிருத்­தல், ஆணின் தேவைக்­கிணங்க வளைந்து கொடுத்தல் என்பன சாதாரண­மாக நிலவு­கின்ற விடயம். எனவே தான் இப்படியான  போக்குக்கு ஆணாதிக்கம் பயப்படுகிறது. இது ”ஆண்மை”­க்கே சவாலான ஒன்றாக பார்க்க வைக்கிறது. ”Whether you are homo sxual man or you are a Lesbian you challenge male  image”  ஆணதிகாரத்­துக்கே சவாலான ஒன்றாக கருதப்ப­டுகிறது. நாங்கள் மாற்று குடும்ப அலகு குறித்துப் பேசுவதாயிருந்தால், மாற்று கலாசார கட்டமைப்பு குறித்து பேசுகிறோம் என்றால் ஏன் மாற்று பாலுறவைப் பற்றிப் பேச பின்நிற்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;(சரிநிகர் 1998 மார்ச்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23378437-2973276815859216505?l=lankawomen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lankawomen.blogspot.com/feeds/2973276815859216505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23378437&amp;postID=2973276815859216505' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/2973276815859216505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23378437/posts/default/2973276815859216505'/><link rel='alternate' type='text/html' href='http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_4183.html' title=''/><author><name>suganthan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYFeC0MVgXI/AAAAAAAAAds/u54gW9SjZtE/s72-c/SUNILA.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23378437.post-690198451450259301</id><published>2009-01-28T23:00:00.000-08:00</published><updated>2009-01-29T09:34:49.699-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.சரவணன்'/><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(255, 204, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அப்படிப்பட்ட ஒரு விடுதலை&lt;br /&gt;எனது மகனுக்கு தேவையில்லை!&lt;br /&gt;-சீலவத்&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;தி-&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYFa-xT8XtI/AAAAAAAAAdk/GekFUi6Ymmk/s1600-h/SILAWATI.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 388px; height: 390px;" src="http://3.bp.blogspot.com/_QopWn3-DI2w/SYFa-xT8XtI/AAAAAAAAAdk/GekFUi6Ymmk/s320/SILAWATI.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296614671199788754" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;நேர்காணல் - என்.சரவணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;சீலவத்தி டி சில்வா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவு­கின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்­கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்­ஞை என்பவற்­றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்­களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளி­யிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்­பாட்­­டாளர்களாகவும் இருந்து வந்துள்ள­னர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல.&lt;br /&gt;ஏப்ரல் புரட்சியின் தலைவ­ர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின்  தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்­களுக்கு அறிமுகப்படுத்துகி­ன்ற நோக்கில் அவர் பற்றிய அறிமுகமும் சிறு உரையாடலும் இவ்விதழில் பிரசுரமா­கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இப்போது இல்லை என்றே பரவலான கதை நிலவி வந்தது. ஆனால் ஒஸ்மன் டி சில்வாவிடம் நேர்காண­லொ­ன்றை செய்வதற்­குச் சென்றிருந்த வேளை அவரது தாயார் இன்ன­மும் இருக்கின்ற தகவலை அறிய முடிந்தது. வயது முதிர்ந்த நிலையிலும் ”இது தகர்த்தெறி­யப்பட வேண்டிய சமூக அமைப்புமுறை” என உறுதியாகக் கூறுகிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தொடக்கம் இன்று வரை ஜே.வி.பி.யினர் மத்தியிலும் இடதுசாரிப் பெண்கள் மத்தியிலும் மதிப்பு மிக்கவராக விளங்கிவரும் தோழர் சீலவத்தியை வட­கொரிய புரட்சிகரத் தலைவரின் தாயார் ”கம்பொங்ஷொக்” என்ற பெயரில் ஜே.வி.பி.­யினர் அழைத்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1923 டிசம்பர் 24ஆம் திகதி கொழு­ம்பு-பொரல்­லையில் பிறந்த இவாpன் பெற்­றோர், ஏ.ஈ.குணசிங்கவின் தொழிற் கட்சி­யின் ஆதரவாளர்கள். 1940இல் தள்ளு வண்டி­களை சொந்தமாக வைத்து வாடகைக்கு கொடுத்து வந்த வில்பிரட் சில்வாவை இவர் மணந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;30களில் மலோpயா காய்ச்சல் பரவிய­போது, மலோpயா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சமசமாஜக் கட்சியினாpன் பிரச்சாரத்தால் கவரப்பட்டு தம்பதியர்கள் இருவரும் அரசியலில் ஈடுபாடு காட்டினர். இரண்டாம் உலக மகா யுத்தக் காலப் பகுதியில் சமசமாஜக் கட்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் தடை செய்யப்பட்­டிருந்தது. சம சமாஜக் கட்சியின் செயற்பா­டுகள் அனைத்தும் இரகசியமாகவே மேற்­கொள்ளப்பட்டு வந்தன. இரகசியப் பிரச்சார வேலைகளிலும் கட்சியின் உத்தியோகபூர்­வமான ஏடான ”சமசமாஜய” பத்திரிகையை இரகசியமாக விநியோகிப்பது போன்ற வேளைலகளில் தோழர் சீலவத்தி ஈடுபட்டு வந்தார். கால்களில் பத்திரி­கைகளை சுற்றி வைத்து இரப்பர் போட்டு விழாதபடி வைத்துக்கொண்டு வெளித் தெரியாதபடி சேலைய­ணிந்து செல்வாராம் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;1942 இல் இவர் கொம்யூனிஸ்ட் கட்சி­யு­டன் இணைந்து கொண்டார். உள்ளுரா­ட்சித் தேர்தல்களின் போது பீட்டர் கெனம­னின் வெற்றிக்காக கடுமையாக உழைத்­தார். பேர் பெற்ற டிராம் வண்டித் தொழிலாள­ர்­களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது வீதி மறியல் செய்தனர் பெண்கள். அப்பெண்களுக்கு தலைமை தாங்கியவர்­களில் சீலவத்தி, மல்லிகா, சோமா போன்ற­வர்கள் முக்கியமான­வர்கள். இரண்டாம் யுத்த காலப்பகுதியின் பின் சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் விடுத­லையாகி வந்த­னர். அதன் பின் கட்சியின் வேலைக­ளைப் பகிரங்கமாக நடத்த முடிந்­ததால், சீலவத்தி தனது பிரதேசமான  வனாத்த­முல்ல பகுதியில் ல.ச.ச.க.வின் மாபெரும் பகிரங்கக் கூட்ட­த்தை நடத்துகின்ற ஒழுங்குகளை மேற்கொண்டார். பின்னர் ல.ச.ச.க. தலைமை தாங்கிய லிப்டன் கம்பனி, பொஸ்டட் கம்பனி, கொமர்ஷல் கொம்பனி போன்ற வேலை நிறுத்தப் போராட்டங்க­ளிலெல்லாம் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1953 ஹர்த்தால் போராட்டத்தின் போது பெண்களின் பங்களிப்பு என்பது வரலாறு காணாத ஒன்று என்பதை யாரும் அறிவர். வீதிகளை மறித்து மறியல் போரா­ட்டம் செய்த போது அரசாங்கம் வலுக்கட்­டா­யமாக வாகனங்களை செலுத்தி­யது. அதனை தடுப்பதற்கென வீதிகளில் கிடையாக குழி தோண்டுதல், மற்றும் வாகனங்­களை சேதப்படுத்துதல போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்ட­மிடப்­பட்டிருந்தது. அதற்காக வெடி குண்டு­கள் கூட தயார் படுத்தப்பட்டிருந்தது. அப்ப­டி­யான தயாரிப்புகளில் தோழர் சீலவத்தி­க்கும் பங்கிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சீலவத்தி அரசியல் ரீதியில் நிறைந்த அனுபவங்­களைப் பெற்றிருந்த வேளை 1963, 1964களில், இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய முன்னணி கட்டுவது குறித்து தீர்மானம் நிறை­வேற்றிய போது லெஸ்லி குணவர்தனவுடன் சேர்ந்து நடுநி­லைமை வகித்தார். ஆனால் அது எவ்வளவு தவறான நிலைப்பாடு என்பதை பிற்காலத்­தில் உணர்ந்ததாகத் தெரிவிக்கி­றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்படியாக தான் சார்ந்த கட்சியி­லிருந்து நம்பிக்கையிழந்தார். ஜே.வி.பி. செயற்படத் தொடங்­கிய போது அது வரை காலம் ல.ச.ச.க.வில் செயற்பட்டு வந்த தனது மகன் ஜே.வி.பி.யில் இணைந்து அதில் தீவிரமாக செயற்படத் தொடங்கி, தனது வீடும் ஜே.வி.­பி.யின் கட்சிக் காரியா­லயமாக செயற்படத் தொடங்­கிய போது அதில் படிப்படியாக ஈடுபடத் தொடங்கி­னார். அவரால் முடிந்த வேலைகளை பொறுப்பெடுத்து செய்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்னர் ஏப்ரல் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். சமூக விடுதலைக்காக எந்த அமைப்­பில் தீவிரமாக ஆரம்பத்திலிருந்து தன்னை அர்ப்பணித்து வந்தாரோ, அதே கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் தான் இவரை கைது செய்து கடுமையான சித்திரவதைக்குள்ளாக்­கியது. தோள்பட்­டையில் பட்ட அடி காரணமாக தோள்ப­ட்டை எலும்பு முறிந்து நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தார். தோழர் சீலவத்­தி­க்கு மொத்தம் எட்டுப் பிள்ளைகள் (ஆண்­கள் ஐந்து பேர், பெண்கள் மூவர்). புரட்சி­யின் போது அவரது மூன்று பிள்ளைகளும் (ஒஸ்மன்ட், சிட்னி, நெந்தொல்) கைது செய்­ய­ப்பட்டனர். எல்லோரும் நான்கு வருட­ங்களுக்கு குறையாத சிறைவாசத்தை அனு­பவித்தனர். ஒரு மகன் 1987-89 காலப் பகுதியில் கொல்லப்பட்டார். படையினரால் கொல்லப்பட்டவர் என்றே இன்றும் நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;71 ஏப்ரல் புரட்சியைத் தொடர்ந்து இவரது வீடு பொலிஸாரால் அழித்து தீக்கி­ரையாக்கப்­பட்டது. சூழ இருந்தவர்களால் பொருட்கள் சூறையாடப்பட்டன. வீட்டில் இருந்த ஏனைய பிள்ளைகள், மருமக்கள்­மார், பேரன் பேத்தி என எல்லோருமாக எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் தலைமறைவாக இருக்க நேரிட்டது. போகு­மி­டங்­களிலெல்லாம் ஒரு பயங்கரவாதக் குடும்பம் என்று பார்க்கப்பட்டதே இதற்கான காரணம். ”சொந்­தக்காரர்கள் கூட எங்களு­டன் நெருங்க அஞ்சினர். எங்களுக்கு உதவி செய்ய மறுத்தனர். வீட்டில் இருந்த ஆண்கள் எல்லோ­ரும் கைது செய்யப்பட்ட நிலையில் பெண்கள் நாங்கள் வறுமையி­லும், பயத்திலும் காலத்தை கடத்தினோம். அந்த துன்பங்களையும், அவலத்தையும் இன்று நினைத்துப் பார்க்கவும் நடுங்குகி­றது” என்கிறார் சீலவத்தியின் மகள். இப்படி­ப்பட்ட கொடுர அனுபவங்களின் மத்தி­யிலும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவரா­கவும், சமூகப் புரட்சியொன்றை எதிர்பார்த்த வண்ணமும் இருக்கின்ற இந்த தாய் வரலாற்று நினைவுகளில் பதிந்து விட்டவர்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;லங்கா சமசமாஜக்கட்சியின் தீவிர உறுப்பினராக செயற்பட்ட நீங்கள் எப்படி ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளராக ஆனீர்கள்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமது வீட்டில் தான் ஜே.வி.பி.யின் சகல அந்தரங்க கூட்டங்களும் நடத்தப்பட்­டன. ஆரம்பத்தில் மகன் கூட எனக்கு விபரங்களை மறைத்தான். வீட்டில் நடத்தப்­படும் கூட்டங்களின் போது அந்த பிள்ளை­களுக்கான உதவிகளை நான் செய்து வந்த போதும் கூட ஒரு மனித குலத்துக்கு விடிவு தேடித்தரும் ஒரு புரட்சிக்கான தயா­ரி­ப்புகளை செய்து வருகிறார்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ள தாமதமாகவி­ல்லை. புரட்சிக்கான சகல ஒத்துழைப்புக­ளையும் நான் செய்ய தீர்மானித்தேன். இதேவேளை ஜே.வி.பி. குறித்து போலிப் பிரச்சாரங்களை ல.ச.ச.க. மற்றும் கொம்யயூனி­ஸ்ட் கட்சியும் செய்து வந்த போது அது வரை காலம் அதன் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வந்த என்னால், அந்தக் கட்சி­களை விமர்சிக்காமல் இருக்க முடியவி­ல்லை. எனவே படிப்படியாக ல.ச.ச.க.வின் செயற்பாடுகளிலிருந்து விலகிய அதே வேளை ஜே.வி.பி.யுடனான செயற்பாடு­களை அதிகரித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;71இல் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்க­ப்பட்டிருந்த விஜேவீரவை சந்தித்து தாக்குதலை நடத்துகின்ற செய்தியை அவரிடமிருந்து நீங்கள் தான் பெற்று வந்தீர்கள் என்று கூறப்படுகிறதே உண்மையா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கத்தின் இளைஞர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை சிறைக்குச் சென்று சந்திப்­பது மற்றும் ல.ச.­ச.க.வைச் சேர்ந்த -வழக்கறிஞர்க­ளாக இருந்த- எனது நன்பர்களின் உதவியோடு விடுவிப்பது, சிறையிலிருக்கும் கட்சி உறுப்­பி­னர்களிடம் தகவல்களைக் கொண்டு செல்வது, அவர்களிடமிரு­ந்து தகவல்­களை கொண்டு வருவது போன்ற கடமை­களை செய்து வந்தேன். யாழ்ப்பாணத்து­க்குச் சென்று தோழர் விஜேவீரவை சந்தி­க்க நானும் தோழர் குமநா­யக்கவும் சென்றி­ருந்தோம். தாக்குதலை மேற்கொள்­ளும் தீர்மானம் பற்றிய தகவல் என்னிடம் அனுப்­பப்­படவில்லை. அத்தக­வல் குமநாயக்கவி­னூடாக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;புரட்சிக்கு முன்னரேயே உங்கள் மகன் உட்பட பல இளைஞர்களை கைது செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு­ விட்டன. அப்போது ஆட்சியிலிருந்த ல.ச.ச.க.வினரை சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் என்.எம்.பெரேராவை கட்சித் தலைமைக் காரியாலயத்தில் வைத்து நானும் குமநாயக்கவும் சென்று சந்தித்து இது குறித்து உரையாடினோம். ”இந்நாட்­டின் புரட்சிகர இளைஞர்கள் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதை தடுக்க எவராலும் முடியாதே தோழர், அவர்களை கைது செய்து அடைத்து அடக்­குமுறையை பிரயோகிப்பது இடதுசா­ரிக் கட்சிகளின் கூட்டணி அரசாங்கமொ­ன்றில் எப்படி நிகழ முடியும்? நீங்கள் கூறி வருவதைப் போல இடதுசாரிக் கட்சிகளை நாசம் செய்ய வந்த சீ.ஐ.ஏ. இயக்கமென்பது கட்டுக்கதை. முடிந்தால் அவர்க­ளுடன் சேர்ந்து ஒத்துழையுங்கள்” என்று கேட்­டேன். அவர் இதற்கு செவிமடுக்கவில்லை. அலட்சியமாக நடந்து கொண்டார். ”இப்படி சென்றால் செக்கோஸ்ல­வேக்­கியாவில் நடந்ததைப் போல் தான் ஆகும். உங்­களது மகன் ஒஸ்மன்டை வேண்டுமென்றால் விடுதலை செய்கிறேன். மற்றவர்களைப் பற்றி என்னோடு ஒன்றும் பேச வேண்டாம்” என்று கூறிவிட்டார். அப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு மட்டும் தேவை இல்லை என்று வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அப்போதைய ல.ச.ச.க.வினர், அரசாங்கத்துடன் சேர்வதென்ற முடிவை எடுத்த போது நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.தே.க தோற்கடிக்குமுகமாக ஐக்­கிய முன்ன­ணியொன்றை கட்டியெழுப்புவ­தற்கு ல.ச.ச.க., ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பிரேரணை குறித்து ஒரு முறை நகர சபை மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்­தில் ஒரு பெரிய விவாதம் நடந்தது. ஏறத்­தாழ 700க்கும் மேற்பட்ட வாக்குகள் அப் பிரேரணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்­டது. அந்த விவாதத்தின் போது பாலா தம்பு, எட்மன்ட் சமரக்கொடி போன்ற தோழ­ர்கள் கடுமையாக எதிர்த்து தாங்கள் வெளி ­யேறுவதாக அறிவித்தார்கள். லெஸ்லி குணவர்தன, கொல்வின் ஆகியோர் இதன் போது தாங்கள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் நடுநிலை வகித்தேன். பிற்காலத்­தில் அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தி­ருக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நீங்கள் கைது செய்யப்பட்டது எப்போது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 18ஆம் திகதியன்று நான் கைது செய்யப்பட்டேன். ஒஸ்மன்ட்டை எங்கு வைத்தி­ருந்தார்கள் என்பது தெரியா­திருந்தது. நான் தேடியலைந்து கொண்டிரு­ந்தேன். அப்படியான ஒரு வேளையில் தான், இடையில் வைத்து பொலிஸார் என்னைக் கைது செய்தார்கள். நான்கு வருடங்கள் எவ்வித வெளியுறவுகளும் இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்­தேன். ஆரம்பத்தில் நான் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தேன். தோளில் கடும் தாக்­கு­தலால் குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை பெற்று வந்தேன். 5ஆம் திகதி தாக்குதல் பற்றிய செய்தியை விஜேவீரவிடமிருந்து நான் தான் பெற்று வந்தேன் என வாக்கு மூலமளித்தால் என்னை விடுதலை செய்வ­தாக கூறினார்கள். நான் இறுதி வரை ஒப்புக் கொள்ள மறுத்தேன். அதன் விளைவாகவே நான்கு வருடங்கள் சிறையில் கழித்தேன். மதிலுக்கு அப்பால் எனது மகன்மார் மூவ­ரும் தடுத்து வைக்கப்பட்டிருந்­தும் கூட அவர்களைச் சந்திக்க அனுமதி தரப்படவி­ல்லை. ஒரு முறை ஒஸ்மன்ட் என்னை சந்தி­க்க வேண்டுமென விசாரணையாளர்களிடம் கோரியதைத் தொடர்ந்து ஆணைக்குழுவி­லிருந்த ஒரு மனித நேயமிக்க ஒரு விசார­ணையாளர் தனது சொந்த முயற்சியின் பேரில் பல இடங்களிலிருந்து உத்தரவு பெற்று ஒரே ஒரு முறை சந்திக்க வழி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சிறையில் பெற்ற அனுபவங்களை விளக்குங்களேன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெலிக்கடை சிறையில் எங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜே.வி.­பி.யின் பெண் தோழர்­கள் பலர் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்­குள் நாங்கள் முகம் கொடுத்த முக்கிய பிரச்­சினை, சாதாரண சமூக விரோத குற்ற­ங்களுக்காகத் தண்­டனை பெற்ற கைதிக­ளையும்  எங்களைப் போன்ற அரசியல் கைதிகளையும் ஒன்றாக போடப்பட்டிருந்­தது தான். பாதாள உலக செயற்­பாடுகளில் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரும் எங்களுடன் சேர்த்து போடப்பட்டிருந்தனர். சிறை
